காலச்சுவட்டின் நவீன கதாகாலட்சேபம்…




அ.மார்க்ஸ் குறித்து காலச்சுவடு நவம்பர் 07 மாத இதழில் வெந்து தணியும் அவதூறுகள் என்ற தலைப்பில் வெளிவந்த பழித்தூற்றலுக்கு எதிர்வினையாக இந்த விவாதத்தை துவக்குகிறேன்…
காலச்சுவடு கண்ணன் எதிர்பார்த்தது போலவே ஞாநிக்கு ஆதரவாக களமிறங்கி போராட துவங்கி உள்ளார்…இதில் ஆச்சர்யப்படவோ, அச்சப் படவோ ஏதுமில்லை என்றாலும் கண்ணன் இந்த முறை அளவுக்கதிகமாக கொந்தளிப்பது நடக்கும் சர்ச்சையை சுவாரசியமாக்கிக் காட்ட உதவுமே தவிர வேறு ஒன்று மில்லை…
தலித் மற்றும் சிறுபான்மை, விளிம்பு நிலை இலக்கிய பக்கங்களில் அ.மார்க்ஸ் அவர்களுக்கு தனியே ஒரு இடம் உண்டு…பெளத்த,சமண ஆய்வுகள் மூலம் இந்துத்துவாவின் தோலுறித்த அ.மார்க்ஸ்க்கு காலச்சுவடு கண்ணன் மூலம் எதிர்ப்பு வந்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லைதான்…..
ஞாநியும்,கண்ணனும் அமைந்திருக்கும் சாதிக் கூட்டணி இந்த முறை அ.மார்க்ஸை தாக்க அமைந்துள்ளது…..பார்ப்பனச் சார்பு தன்மையில் காலச்சுவட்டின் முகமுடி கிழிந்து தொங்குவது குறித்து கண்ணனுக்கு திடீரென்று ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது…..ஏற்கனவே சங்கராச்சாரி கைது சம்பவத்தின் போது எழுத்தாளர்கள் இதில் எதிர்வினை புரிய வேண்டும் என மறைந்த சுந்தர ராமசாமி கருத்து தெரிவித்தப் போதே நான் தீராநதியில் எழுதிய எதிர்வினையில் இது போன்ற சாதாரண கைது நிகழ்வை சுந்தர ராமசாமி தனக்கே உரிய குறுக்கு வழியில் பரபரப்பாக்க முயல்கிறார் என்று குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
காலச்சுவடு இந்த முறை அ.மார்க்ஸை தாக்கியுள்ளதை அ.மார்க்ஸ் என்ற தனிநபர் மீது நடந்த தாக்குதலாக நாம் கருத இயலாது. ஞாநியின் விஷம் தோய்ந்த கட்டுரை குறித்து எதிர்வினைகள் செய்த உலக தமிழ் மக்கள் அரங்கம் உறுப்பினர்கள் மற்றும் இணைய பக்கங்களில் எழுதி தன் எதிர்ப்பை பதிவு செய்த தோழர்கள், தமிழ் நாடு முழுதும் கண்டன கூட்டங்கள் நடத்திய தமிழ் படைப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி சேர்த்து மொழிப் பற்றாளர்கள் அனைவரின் மீதும் காலச்சுவடு நடத்திய தாக்குதலாக இதை நாம் நினைக்கிறோம்…
ஞாநி மீது ரத்தபாசம் கண்ணனுக்கு வர என்ன காரணம் என்பதை நான் இங்கே விளக்கத் தேவை இல்லை.ஆனால் அதே கட்டுரையில் ஞாநி எழுதியது தவறு தான் கண்ணனே ஒத்துக் கொள்கிறார்…..அப்புறம் எதற்கு வருகிறது கோபம் என்ற கேள்விக்கு யாரும் அளிக்கலாம் விடையை…
வக்கிரம் பிடித்து, தான் என்ன எழுதுகிறோம் என்று நன்கு தெரிந்து தன்னுடைய விஷம் தோய்ந்த எழுத்துக்களால் தமிழர்களையும் ,அவர்களது பிரத்யோக ஆளுமைகளையும் தாக்கி வரும் ஞாநி குறித்து நாம் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை ஞாநி தி ரைட்டர் என்ற ஞாநியின் ரசிகர்கள் நடத்தி வரும் ஆர்குட் குழுமத்தில் முன் வைத்தோம்…ஞாநியின் எழுத்துகளில் தெரியும் ஆரிய மனம் என்று துவங்கும் அந்த விவாதத்தில் ஞாநியே நேரடியாக கலந்து கொண்டு விவாதித்து ,பிறகு ஒதுங்கிக் கொண்டார்…அந்த விவாத்தின் போது நமது உலக தமிழ் மக்கள் அரங்க நிர்வாகிகள் சசி,யுவன்பிரபாகரன், பிரபாகரன், தமிழ் மற்றும் பிரின்ஸ் பெரியார், விடாது கருப்பு போன்ற தோழர்கள் என்னோடு இணைந்து அந்த விவாதத்தை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர்…..அந்த விவாதத்தில் பார்ப்பன மோசடியை, உள்ளுக்குள் அர்த்தம் புதைத்து எழுதும் மாய்மாலத்தை நம் தோழர்கள் இணைந்து அம்பலப் படுத்தினோம்…அதனால் அந்த விவாதம் அடங்கிய பத்தியே ஞாநி தி ரைட்டர் குழும நிர்வாகிகளால் நீக்கப்பட்ட்து..ஆனால் நான் அந்த விவாதத்தை முழுக்க சேகரித்து என்னுடைய வலைப்பூவான வெண்ணிற இரவுகளில் வெளியிட்டுள்ளேன்..
நம் உலக தமிழ் மக்கள் அரங்க நிர்வாகி சசி மேற்கண்ட விவாதத்தை சமூக களத்திற்கு எடுத்து சென்று அந்த விவாதத்தை ஒரு சிறிய நூலாக்கி பாவலர் அறிவுமதி அண்ணனிடம் அளிக்க அந்த தொகுப்பைதான் அ.மார்க்ஸ் கலந்துக் கொண்ட காலச்சுவடு கண்ணன் குறிப்பிட்டுள்ள ஞாநி கண்டன கூட்டத்தில் அண்ணன் அறிவுமதி வாசித்தார்….
அந்த கூட்டத்தில் பேசியவர்கள் அனைவருமே ஞாநியின் மோசடித்தனத்தையும், பார்ப்பனர்கள் எழுத்துலகிலும், இலக்கிய அரங்கங்களிலும் செய்து வரும் மாய தந்திர பொய் பித்தலாட்ட வேலைகளை சுட்டிக்காட்டி பேசினர்….உடனே கண்ணனுக்கு வந்து விட்டது கண் மண் தெரியாத கோபம்…அ.மார்க்ஸ் குறித்து தரக்குறைவான விமர்சனங்களை முன் வைத்துள்ள கண்ணன் அவரது கல்லூரி ஆசிரியர் பணி குறித்தும்,.தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தும் மிக தவறான தகவல்களை, பொய் பரப்பும் நோக்கத்தோடு புனைந்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
அரசு ஊழியர் போராட்டத்தின் போது மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து பணியில் இணைந்தாக அ.மார்க்ஸ் மீது இமாலய குற்றச்சாட்டு சுமத்தி இருக்கும் புரட்சியாளர் காலச்சுவடு கண்ணன் எத்தனை முறை போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார் என்பது அவருக்கும் ,ஞாநிக்கும் தெரிந்த ரகசியங்கள்..
அது இருக்கட்டும்….அ.மார்க்ஸ் கையெப்பமிட்டது மன்னிப்பு கடிதம் அல்ல….தொழிற்சங்கங்கள் அரசு ஊழியர்களுக்காக பொதுவாக வனைந்த விளக்க கடிதம்….அது அ.மார்க்ஸ் தயாரித்தது அல்ல…வேலைநீக்கம் செய்யப் பட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்காக தொழிற்சங்கங்கள் தயாரித்து அளித்தவை…….நான் கேள்விப்பட்ட வகையில் அ.மார்க்ஸ் போர்க்குணம் மிக்க தொழிற்சங்க வாதி என்பதை இங்கே பதிவு செய்கிறேன்..அது மட்டுமில்லாது தலித் மற்றும் விளிம்பு நிலை இன மாணவர்களுக்கான போராட்டங்களில்,தன் முனைப்பை காட்டியவர் அ.மார்க்ஸ் என்பதை கண்ணன் அறிந்தும் அறியாமல் இருப்பது உண்மையை ஊருக்கு மறைக்கும் செயல்…
இதே கட்டுரையில் டாக்டர் அம்பேத்காருக்கும், தந்தை பெரியாருக்கும் இடையே உள்ள இடைவெளியை காட்டுவதாக உளறிக் கொட்டி குழப்பி இருக்கிறார் கண்ணன்..அதாவது தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என சர்வ கவனமாக யோசிக்கும் பார்ப்பன மூளை தான் வாழ்வதற்கான போராட்டத்திற்காக எதையும் செய்ய வல்லது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் இருக்க முடியும்..?
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார் இருவருமே பார்ப்பனன் வகுத்த சாதி நிலைகளை தகர்த்து மனிதன் மனிதனாக நடத்தப் பட வேண்டும் என்று போராடியவர்கள்…. ஏற்கனவே இதே போலத் தான் அறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் ஒப்பிட்டு நமது கடும் எதிர்ப்பை ஞாநி சந்தித்தார் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்….
ஒரு வேளை தோழர்.ரவிக்குமாருக்கும், அ.மார்க்ஸ்க்கும் பிரச்சனைகள் இருப்பின் –அதற்கான தீர்வுகளையும் அவர்களே ஏற்படுத்திக் கொண்டு பார்ப்பன சாதி நிலைகளை தகர்க்கும் வேலையில் இணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது…
அது குறித்து கண்ணன் கவலைப் பட ஏதுமில்லை…சிண்டு முடிவதை இந்த நூற்றாண்டிலாவது விடுங்கோ கண்ணன்….
சர்ச்சையை ஊதி பெரிதாக்கும் வேலையை கண்ணன் செய்து வருவதை சம்பந்தப் பட்ட இருவரும் இனி புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு….ஞாநியின் பார்ப்பன மனோபாவத்தை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என குமுறும் காலச்சுவடு கண்ணன் கலைஞரை தரக் குறைவாக , வக்கிரமாக விவரித்து , அவரது முதுமையை வஞ்ச புகழ்ச்சி அணி தோற்றத்தில் எள்ளி நகையாடியதை ஆதரிக்கிறாரா..?
ஞாநி எழுதிய சர்ச்சை மிகுந்த அக் கட்டுரை வெளி வந்த காலக் கட்டம் சேது சமுத்திர திட்ட சர்ச்சையில் கலைஞர் உண்மையான உணர்வை வெளிப் படுத்தியதன் மூலம் இந்துத்துவ, பார்ப்பன சக்திகளின் ஒட்டு மொத்த எதிர்ப்பை சந்தித்து கொலை மிரட்டலுக்கு உள்ளான காலம்…
அந்த வக்கிர கட்டுரைக்கு வேறு என்ன நியாயமான காரணங்கள் இருக்க முடியும் ஞாநிக்கு..?
மேலும் அதே கட்டுரையில் தலித்களின் தலைவராக பெரியாரை காண முடியாது என கண்ணன் கதறுகிறார்…அது சரி…நாளை முதல் தலித்துகள் சங்கராச்சாரியை வழிபட வேண்டும் என்று கண்ணன் நினைப்பதெல்லாம் நடைபெற அவரது கனவுலகில் தான் சாத்தியம்….
திருவாளர் கண்ணன் அவர்களே….
உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்….பெரியார், அம்பேத்கார் போன்றவை உங்களுக்கு எதிரான, உங்கள் கருத்தியல்களுக்கு எதிரான ஆளுமைகள்……அவற்றில் ஏற்படும் சரிவுகளையும், சங்கடங்களையும் நாங்கள் சரி செய்து கொள்கிறோம்…..நீங்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சங்கர மடத்திற்கு காவடி தூக்குவதை யாரும் தடுக்கப் போவதில்லை..
மறைந்த சுந்தர ராமசாமி அவர்களை அ.மார்க்ஸ் உயர்சாதி அகங்காரம் மிகுந்த மேட்டிமை தனம் உடைய ஆளுமை என விமர்சித்தது அடக்கவியலா வெறுப்புணர்வு என்றால், பெரியாரையும், அம்பேத்காரையும் சிண்டு முடிந்து ஆதாயம் தேட முயல்வது என்ன உணர்வு..?

பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு இடையே வேறுபாடுகளை பெரிதாக்கி ஆனந்த சிரிப்பை உதிர்க்க துணியும் எண்ணம் எத்தகையது..?
சொல்லுங்கள் கண்ணன்…
பண்டைய வாழ்வியல் வரலாற்றுகளையே உங்களுக்கு சாதகமாக மாற்றி எழுதி அதை எங்களை பள்ளிகளில் படிக்க வைத்து சாதி என்னும் சமூகக் கேட்டு படிமத்தை எங்களுள் பதித்த இனமாயிற்றே உங்கள் இனம்..?
இதில் ரவிக்குமாரும், அ.மார்க்ஸும் எம் மாத்திரம்..?
தோழர்களே…
காலச்சுவடு கண்ணன் எழுதியுள்ள அ.மார்க்ஸ் குறித்த அக் கட்டுரை அவதூறு நிரம்பிய ஆத்திரக் கூச்சல்….ஆனால் இவர்கள் ஆத்திரம் பெரியாரை பின்பற்றும் நமக்கு ஒரு சிறிய புன்சிரிப்பையே உதிர்க்க வைக்கிறது…..
ஆனால்….
அதே சமயத்தில் காலச்சுவடு கண்ணனின் கட்டுரைக்காக நம் கண்டனத்தை தெரிவிப்பதும் நம் கடமை….
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதை ஒன்றுடன் இப்போதைக்கு நிறைவு செய்கிறேன்…..
“ஆடுகின்றாய் உலகப்பா..யோசித்துப் பார்…
ஆர்ப்பாட்டக்கார ர் இதை ஒப்பாரப்பா….
தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன்…
செகத்தப்பன் யோசித்து சித்தம் சோர்ந்தான்,,,,
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஒர் நொடிக்குள்
ஓடப்பர்,உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய் விடுவார் உணரப்பா…நீ..”
நன்றி…

தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..




தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..

நான் பார்த்த அனைத்து மானுட வடிவங்களுக்கு அப்பாற்ப் பட்டவர் தோழர் சே..
ஈடு இணையற்ற தியாகமும் , கவர்ச்சி மிகுந்த சாகசங்களும் நிறைந்த அவரது வாழ்வு மற்ற புரட்சியாளர்களுக்கு வாய்ப்பது கடினம்...நமது இந்திய அரசியல் வரலாற்றில் பார்த்தோமானால் தோழர் மாவீரன் பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ்,உத்தம் சிங், என்று சிலர் முகம் தெரிந்தாலும் சேகுவேரா மற்ற ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஏன் சிறந்து நிற்கிறார் என்றால் அவரது உலகம் தழுவிய பாசம்...

அர்ஜென்டினாவில் பிறந்து, கியூபா புரட்சியில் பங்கேற்று, காங்கோ காடுகளில் அலைந்து, பொலிவியா புரட்சியில் பங்கேற்று ,கடைசியில் வீர மரணம் எய்திய சேகுவேரா உள்ளம் முழுக்க கவிழ்ந்து கிடந்தது உலகளாவிய புரட்சி என்னும் கனன்று கொண்டிருந்த நெருப்பு ......

கியூப புரட்சியில் வென்ற போது சே கதாநாயகனாக வர்ணிக்கப் பட்டார். பிடல் காஸ்ட்ரோவோடு சேர்ந்து கியூபாவை செம்மை படுத்தும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் சே....அப்போது சே நினைத்திருந்தால் சுதந்திர கியூபாவில் சகல அதிகாரங்களோடு சுக போக வாழ்க்கை நடத்தி இருக்கலாம்.ஆனால் சேவின் புரட்சி மனம் சும்மா இருந்ததா...? இல்லை.

சர்வாதிகார அமெரிக்காவிற்கு கடும் சவாலாக இருந்தார் தோழர் சே.....மற்ற நாடுகளை சுரண்டி வாழும் சர்வாதிகார அமெரிக்க மனப் பான்மைக்கு கடும் நெருக்கடியை தந்தார் தோழர் சே...அமெரிக்கா இதுவரை தன்னியல்புகளை மாற்றிக் கொள்ளவில்லை.ஆனால் அமெரிக்காவின் இளைய சமுதாயத்தினர் சேகுவேரா படம் பொறித்த சட்டைகளை அணிந்த்து திரிகின்றனர்.எதிரிக்கும் கூட உதாரணமாகிப் போன உத்தமர் தோழர் சே...

பிள்ளை பருவத்தில் தோற்றிய கடுமையான ஆஸ்துமா அவரை வாழ் நாட்கள் முழுக்க துரத்தியது.கடுமையான சுவாச கோளாறுகளால் அவரது உடல் நலம் பல நேரங்களில் குன்றிப் போனது...மேலும் பனாமா சுருட்டு ஆஸ்துமாவை தணிக்கும் என நம்பினார் அவர்...அதனால்தான் அவர் பெரும்பாலான நேரங்களில் சுருட்டோடு காணப் பட்டார்.அதுவே அவரது கவர்ச்சி மிகுந்த அடையாளமாய் மாறிப் போனது தனிக் கதை.....

09-10-07 தோழர் சேகுவேராவின் நினைவு தினம்...

தோழர் சேகுவேராவை இந்த நாளில் மட்டுமல்ல....எல்லா நாட்களிலும் அவரது நினைவுகளை நெஞ்சில் சுமப்போம்.....

செவ்வணக்கம்...

(தொடரும்)

தமிழக அரசியலின் எதிர்காலம் என்ற புதிர்




காலங்களின் நெடுவாசற்
கதவுகள் திறக்க
நாகரிகக் கொடிப் பிடித்து
நடக்கின்றார் மானுடர்கள்….

வரலாற்றின் திரை விலக
வருகின்றார் வருகின்றார்
தற்காலம் பாராட்டும்
பொற்கால புத்திரர்கள்…
-கவிஞர் இன்குலாப்


காலம் ஏதோ ஒரு புள்ளியில் தன் ரகசியத்திற்கான சூட்சம முடிச்சை வைத்துள்ளது…வாழ்வதற்கான போராட்டம் என்ற கொள்கை நம் அரசியல் வாதிகளை பொறுத்தவரை பதவி பெறுவதற்கான போராட்டம் என்ற வகையில் மாறிப்போய் உள்ளது….

சினிமா மினுமினுப்பும், வாரிசு அரசியலின் வீச்சும் ,புகழ் போதைகளும் தற்கால தமிழக அரசியலை சுவாரசியப் படுத்துகின்றன ஒழிய அவை தமிழக அரசியலின் முக்கிய பொருண்மைகள் அல்ல….

தந்தை பெரியார் என்ற பதவி அரசியலில் இறங்காத தன்னலமற்ற சுயமரியாதைக் காரர் முதல் வாரிசுகளே இல்லாமல் இறந்துப் போன அறிஞர் அண்ணா,கர்மவீரர் காமராஜர், போன்றவர்களும் ,எளிமையின் வடிவாக திகழ்ந்த பொதுவுடையாளர் ஜீவா,கக்கன் போன்றவர்களும் தமிழக அரசியலில் சுடர் விட்டு மின்னியவர்கள்தான்.இவர்களுக்கு சினிமா பிரபல்யமோ,சாதீய அடையாளமோ இல்லை .ஆனால் நவீன தமிழக அரசியலின் முகம் தற்போது வெகுவாக மாறி விட்டது.மக்கள் FAST FOOD சாப்பிடுவது போல அரசியலையும் பார்க்கத் துவங்கி விட்டனர்..

திராவிட பெரியாரிய அரசியலின் மிச்சமுமாகவும், தமிழக அரசியலின் மூத்த தலைமையுமாகவும் இருக்கின்ற கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டின் நெடிய அரசியலின் முக்கிய பங்கேற்பாளராகவும்,இன்றியமையாத நிகழ்வுகளின் முக்கிய சாட்சியாகவும் திகழ்கிறார்.தனது பழுத்த அரசியல் ஞானத்தின் மூலம் தலைநகர் அரசியலையும் கட்டுப் படுத்த நினைக்கிறார்..பெரியார்,அண்ணா ஆகியோரிடம் அரசியல் பயின்று ராஜாஜி,காமராஜர் போன்ற வலுவான ஆளுமைகளை எதிர்த்து அரசியல் செய்து ,எம்.ஜி.ஆரிடம் விவரிக்க இயலா நட்பில் திளைத்து பிறகு அதே அளவிற்கு போரும் புரிந்து,இறுதியில் இன்று ஜெயலலிதாவை புள்ளி விபர அறிக்கையால் வீழ்த்த நினைக்கும் கருணாநிதி களைப்பறியா அரசியல் வித்தகர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை..ஆனால் கலைஞரே தன் வாழ்வினை திரும்பிப் பார்த்து மீள் ஆய்வுக்கு உட்படுத்துவாராயின் அவருக்கு சுய திருப்தி உண்டாகுமா என்பது அவர் மட்டும் அறிந்த ரகசியம்.

அதே போல ஜெயலலிதாவும்,கான்வெண்டில் படித்து சினிமாவில் அறிமுகமாகி,எம்.ஜி.ஆர் அறிமுகத்தால் அரசியலில் நுழைந்து சினிமா கவர்ச்சி மட்டும் இல்லாமல் தன் சுய ஆளுமை தன்னம்பிக்கை அறிவினால் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு சில முன்னாள் அமைச்சர்கள் மூலம் அ.தி.மு.க தலைமையை பிடித்து ,தி.மு.க விற்கு மாற்றாக அ.தி.மு.க வை மீண்டும் முன்னிறுத்தி முதல்வரானார்.எந்த பிடிவாத குணமும்,கோபமும் அவரை உயரத்துக்கு கொண்டு சென்றனவோ,அவையே அவரை வீழ்த்தியும் காட்டின. நல்ல ஆங்கில அறிவு,துணிச்சலான முடிவுகள் போன்ற பாஸிட்டிவ் குணங்களும் அவரை உயர்த்தி பிடிக்கின்றன என்றால் தடாலடி மாற்றம், யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லாதன்மையை நீடிக்குமாறு செய்வது போன்றவை அவரை பலவீனப்படுத்துகின்றன.

எனவே மேற்கண்ட இரண்டு முக்கிய ஆளுமைகளுக்கு பிறகு அல்லது அப்பால் வர இருக்கும் தமிழகத்தின் இளம் தலைவர்களை முறையான சிந்தனைகளுக்கு
உட்படுத்துவது சரியானதாக இருக்கும் என்றே தோன்றுகிறது….

தமிழகத்தின் வருங்காலம் என்ற எதிர்கால கனவு யாரால் நிறைவேற உள்ளது என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை காண புறப்படும் முன் தமிழகத்தின் முக்கிய இளம் ஆளுமைகள் பற்றி சிறிது ஆராய்வோம்.


மு.க.ஸ்டாலின் –இவர் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் என்பதும் ,தி.மு.க தலைமையினாலேயே அடுத்த தலைவராக அடையாளப்படுத்த படுகின்றவர் என்பதும் வெளிப்படையான ஒன்று….தலைவர் மகனாக இருந்தாலும் தலைமைப் பதவிக்கு இவர் தாவி வந்து விட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.மிசா சிறைப் பொழுதுகளில் கைதியாகவும்,தி.மு.க. வின் அனைத்து அரசியல் போராட்ட நிகழ்வுகளிலும் தலைமை பங்கேற்பாளராகவும், பல ஆண்டுகளாக தி.மு.க வின் இளைஞர் அணித் தலைவராகவும், இருந்து வருகிறார்….சென்ற முறை சென்னை நகர மேயராகவும்,பணியாற்றிய இவர் தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.தற்போது பக்குவமான மனநிலைக்கும் நிதானப் போக்கிற்கும் உள்ளாக்கப்பட்டிருப்பதாக உணரப் படும் இவர் மிகவும் கவனிக்கத் தக்கவர்…ஆனால் கலைஞரிடம் காணப் படும் அயராத உழைப்பு, ஆழ்ந்த இலக்கிய அறிவு, அரசியல் சாதுர்யம்,துணிச்சல் போன்றவை ஸ்டாலினுக்கு கைவருமா என்பது கேள்விக்குறியே…மேலும் கட்சியில் பலம் வாய்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் கலைஞருக்கு கட்டுபடுவது போல தளபதிக்கும் கட்டுப் படுவார்களா என்பதும் சிந்தனைக்குரியது.கலைஞர் அளவிற்கு ஸ்டாலினிடம் இல்லாத வசீகர வார்த்தை பிரோயகங்கள் தளபதிக்கு தலைவலியை ஏற்படுத்துகின்றன

வைகோ-தி.மு.கவில் இருந்தப் போதிலும் சரி,விலகி ம.தி.மு.க துவக்கிய போதிலும் சரி இளைஞர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற வைகோ தன் அரசியல் முடிவுகளால் வெற்றிகளை அடையாத அடையாளமாக மாறிப்போனது குறிப்பிட தகுந்த உண்மையே.தன் சிம்மக்குரல் தமிழோசையிலும் ,தமிழ் இலக்கிய ,உலக வரலாற்று அறிவிலும் சிறந்தவரான வைகோவின் மாறாத ஈழ ஆதரவு அவரை பொடாச் சட்டத்தின் கீழ் சிறைப் படுத்தியது.ஆனால் கருணாநிதியின் குடும்ப அரசியல் என்று குற்றம் சாட்டிவிட்டு தனிக்கட்சிக் கண்டு பிறகு தாய் கழகத்தோடு கூட்டணி கண்டதும்,தன்னை பொடாச் சட்டத்தில் சிறையில் அடைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு சகோதர பாசம் கொண்டாடியதையும் கண்டு தமிழகம் குழம்பிப் போனது.

விஜய்காந்த்- சினிமா நடிகர்களின் கனவு அல்லது இலக்கு அரசியல் என்றாகி விட்ட நிலையில் விஜய்காந்த் குறிப்பிட்ட இடத்தை அடைந்து விட்டார் என்றே சொல்லவேண்டும்..சட்டசபை மற்றும் உள்ளாட்சி,இடைத்தேர்தல்களில் தே.மு.தி.க பெற்ற வாக்குகள் மாற்றத்தை விரும்பும் மக்கள் அதிகரித்து வருவதையும்,சினிமா மோகம் குறையாத தன்மையையும் ஒரு சேரப் பிரதிபலிக்கின்றன.பட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையான விருத்தாசலத்தில் வாகை சூடியதும், மற்ற கட்சிகள் அசர வைக்கும் அளவிற்கு புதுக்கோட்டையில் அடாத மழையிலும், விடாது மாபெரும் கூட்டம் கூட்டி மாநாடு நடத்தியதும் கவனிக்கத் தகுந்தவை.ஆனால் கூட்டணி இல்லாமல் வெற்றி கிடைப்பது சாத்தியமில்லை என்பதும் , கணிசமான ஓட்டுகளே வெற்றியாகாது என்பது கேப்டனுக்கு தெரியும் .மேலும் கட்சியில் வந்து சேரும் மற்ற கட்சிகளில் ஓரங்கட்டப் பட்ட முன்னாள் அமைச்சர்கள் ,ஊழல் குற்றம் சாட்டப் பட்டவர்கள் போன்றவர்கள் கட்சிக்கு பலமா, பலவீனமா என்பதும் ஆய்வுக்குரியது.

மு.க.அழகிரி.-கலைஞரின் மகன் என்பதை விட மதுரையின் மைந்தன் என்றே அதிகம் அறியப்பட்டு வந்துள்ளார்…மு.க. ஸ்டாலினுக்கும் ,இவருக்கும் அதிகாரப் போட்டி நடப்பதாக திரை மறைவில் கிசுகிசுக்கப்பட்டாலும் தன் தம்பியோடு சேர்ந்து இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்த முயல்கிறார்.தேர்தல் பணிகள் என்றால் வெற்றிக்கனியை பறிக்க இவர் காட்டும் தீவிரமாகட்டும், தென் மாவட்ட கழகப் பணிகளில் முன்னிலைப் படுத்தப்படுவதாகட்டும் அழகிரிக்கு நிகர் அழகிரிதான்…..ஆனால் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புப்படுத்த படுவது ,அழகிரி ஆதரவாளர்கள் மேல் உள்ள முரட்டுத் தன இமேஜ் போன்றவை மற்ற மாவட்ட மக்களிடம் செல்வாக்கை வளர்க்குமா என்பது சந்தேகமே.

கனிமொழி கருணாநிதி- சிறந்த கவிஞராக அறியப்பட்ட இவர் தலைவரின் மகள் என்பதாலும்,தயாநிதி மாறன் இடத்தை நிரப்பவும் எம்.பி ஆக்கப் பட்டுள்ளார்..தி.மு.க வின் பெண்ணினப் பிரதிநிதியாக அறியப் படும் இவர் கட்சியின் அமைப்புகளிலும்,கட்சியின் 2 மற்றும் 3 ஆம் மட்டத் தலைவர்களில் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாதவர்.இன்னும் பொது வாழ்க்கைக்கு அடிப்படை அம்சமான பொதுத் தள பங்கேற்பு அவ்வளவாக இல்லாதத் தன்மையில் தன் தனிப்பட்ட குணாதிசியங்கள் மூலம் அரசியலில் தன் முக்கியத் துவத்தை நிலைநிறுத்தப் போராடுகிறார்.

பட்டாளி மக்கள் கட்சிவன்னியர் இன மக்களுக்கான கட்சி என்ற முத்திரையை நீக்க மருத்துவர் ராமதாஸ் முயன்று வருகிறார்.ஆளும் கட்சிக்கு இவர் நண்பனா,எதிரியா என்பது அன்றைய காலைச் செய்தித்தாள்களைப் பார்த்தால்தான் தெரிந்துக் கொள்ளமுடியும்.இவரது மகன் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அப்பாவை போன்ற அதிரடி அரசியலுக்கு இன்னும் பழக வில்லை என்றுதான் கூற வேண்டும் .பசுமைத் தாயகம், மக்கள் தொலைக்காட்சி போன்ற செயல்பாடுகள் கட்சியின் இளம் ஆளுமை சின்ன அய்யாவை உச்சிக்கு கொண்டு செல்லுமா என்பது காலம் சொல்ல வேண்டிய பதில்.

அதே போல் நாடார் இன ஒட்டுவங்கியை குறிவைத்து கட்சி துவங்கி இருக்கும் சரத்குமார், தேவர் இன ஒட்டு வங்கியை குறிவைத்து செயல் படும் பார்வர்ட் பிளாக் கார்த்திக் போன்ற நட்சத்திரங்களும் அரசியல் திரையிலும் மின்ன முயல்கிறார்கள்….

காமராஜர் ஆட்சிக் கனவிற்கு பங்காளியாக சரத்குமார் வந்து விட்டாலும், சளைக்காமல் இன்னும் கனவில் இருப்பது காங்கிரஸ் தான்….மத்திய அரசியலுக்காக மாநில கட்சியின் வளர்ச்சி புறக்கணிக்கப் படுகிறது என்ற புலம்பல் சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் கோஷ்டி மோதல் களுக்கும் நடுவில் மெலிதாய் கேட்கத்தான் செய்கிறது… மத்திய அமைச்சர்களான ஜி.கே.வாசன்,ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்றவர்களுக்கு காங்கிரஸில் பதவிகளை தன் ஆதரவாளர்களுக்கு பெற்றுத் தரவே நேரம் சரியாக உள்ளது….. இளம் தலைவர்களான கார்த்திக் சிதம்பரம், விஷ்ணு பிரசாத் போன்றவர்கள் எதாவது செய்து ஊடங்களில் இடம் பெறத் துடிக்கிறார்கள்.கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தி.மு.க ஆதரவு என்ற பேச்சும் உண்டு….

அ.தி.மு.க வை பொறுத்த வரை எல்லாம் ஜெயாமயம்.இரண்டாம் மட்டத் தலைவர்கள் நிரந்தரமல்லாதவர்கள்…பதவியில் இருக்கிறோமா என்று அம்மாவைத் தவிர யாருக்கும் தெரியாது. கட்சியின் அதிகார மையமாக செயல்படுவதாக மற்றக் கட்சிகளால் குற்றம் சாட்டப் படும் சசிகலா,நடராஜன் உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தினரின் பங்கு அதிமுக வில் முக்கியமான பொருண்மை என பொறுமி தள்ளுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள் . ஆனால் ஜெயலலிதா வழக்கம்போல் அதிரடி அறிக்கைகள் விட்டுக் கொண்டும், கட்சி அலுவலகத்திற்கு வரும் போதெல்லாம் கிடைக்கும் ஆரத்தி உள்ளிட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்டும்,உடன் பிறவா சகோதரியோடு பயணம் செய்துக் கொண்டும் அரசியல் செய்து வருகிறார்….தி.மு.க வில் கலைஞருக்கு பிறகு கைக் காட்ட தலைவர்கள் உள்ளனர் என்றால் …அம்மா கட்சியில் இதுப் பற்றி சிந்திக்கவே யாருக்கும் துணிச்சல் வராது.

தமிழக இடதுசாரிகள் தேர்தல் சமயங்களில் எப்படியாவது இரட்டை இலக்க தொகுதிகள் பெற்று விட வேண்டும் என்ற ஆர்வத்தில் துடிப்பதை தவிர முக்கியத்துவம் பெற்று விட வில்லை என்பதும் உண்மை.இடதுசாரிகளில் எளிமைக்கு பேர் போன ஜீவா, நல்லக் கண்ணு போன்ற தலைவர்கள்
கவர்கிறார்களே தவிர அதிகாரத்திற்கு அவர்களாலே வர முடிய வில்லை.
தமிழக செய்தி ஊடகத் துறையில் பன்முகத் தடம் பதித்துள்ள மாறன் சகோதரர்கள் இன்னமும் தமிழக அரசியலை ஒரக் கண்ணால் பார்த்துக்கொண்டுருப்பதாக சொல்லப் படுகிறது.பல்வேறுப் பட்ட
செய்தித்தாள்கள்,பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள் என்று தன் சாம்ராஜ்ஜியத்தை
நிறுவியுள்ள சன் குழுமம் தற்போது ரூ.75க்கு டி.டி.எச் தொழில்நுட்பத்தை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது தமிழக மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.ஊடகத்துறையின் ஏகபோக ஜாம்பவான் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் சன் குழுமம் தமிழக அரசியலில் தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது.கலைஞரும் தன் பேரன்கள் தான் தனக்கு போட்டி என நினைத்து பல முயற்சிகள் எடுத்து வருவது அவரது குடும்பத்திற்குள் இழையோடும் பிரச்சனைகளை பிரதிபலிக்கிறது…..அதன் சமீபத்திய முடிவு கலைஞர் தொலைக்காட்சி.

ஆனால் தமிழக மக்களுக்கு இதுப் பற்றி எல்லாம் கவலை இல்லை.. கொள்கை,நேர்மை,தனி மனித ஒழுக்கம்,சமூக எண்ணம் மொழியுணர்வு போன்ற தளங்களில் அவர்கள் தலைவர்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து வெகு நாட்களாகி விட்டன….ஊடகப் பரபரப்பை கூட்ட அரசியலை ஒரு காரணியாக வைத்து பார்க்க மக்கள் தயாராகி விட்டனர்.தேர்தல் அறிக்கைகளில் பொங்கி வழியும் சலுகை பாயாசமும் ,வாக்களர்களின் கரங்களில் திணிக்கப் படும் தேர்தல் கால பணப் பாதுஷாக்களும் மக்களுக்கு சர்க்கரை நோயை வரவழைத்து விட்டன போலத் தோன்றுகிறது…….தீயது என்று தெரிந்தும் திருட்டுத் தனமான சுவராசியத்துக்கு மக்கள் தயாராகி விட்டனர்.

தமிழ்நாட்டு வாக்காளனைப் பொறுத்த வரை இம்முறை அரிசியும்,இலவச டி.வியும் வெற்றிப் பெற்றன….அடுத்த முறை இதை யார் தாண்டுகிறார்களோ அவர்களுக்கு ஓட்டு…..விஜய்காந்த் பெற்று வரும் கணிசமான ஓட்டுக்கள் வெகுவாக கவனிக்கத் தக்கவை. தி.மு.க, அ.தி.மு.க க்கு மாற்றாக ஒரு சக்தி வேண்டும் என்று விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாவதையே இது காட்டுகிறது எனலாம்.அணி சேராத கட்சிகளின் பிரதிநிதியாக விஜய்காந்த் முன்னிறுத்தப் பட்டால் தமிழக தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு.இதே நம்பிக்கையோடு தான் சரத்குமாரும் புதிதாக கட்சி துவங்கி உள்ளார்.நாடார் இன மக்களுக்கான கட்சி என்ற தோற்றத்தை முறியடிக்க அவர் வெகுவாக முயன்று ,தன் கட்சி அனைத்து மக்களுக்கானது என்று உணர்த்தவே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயர் சூட்டி உள்ளார்.

சென்ற சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க அறுதி பெரும்பான்மை பெறாததது ஆராயத்தக்கது.1952 வருட சட்டமன்ற தேர்தலைத் தவிர மற்ற தேர்தல்களில் எதாவது கட்சிக்கு பெரும்பான்மை பலம் அளித்து வந்த தமிழக வாக்காளர்கள் இந்த முறை தி.மு.க விற்கு பெரும்பான்மை பலம் வழங்காததது தமிழகம் தென்னிந்தியாவில் மற்றுமொரு கேரளாவாக உருவெடுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இனிவரும் தேர்தல்களும் இந்தப் போக்கையே பிரதிபலிக்கும் என நம்பலாம் .மேலும் சாதீய அரசியலின் பங்கும் தேர்தல் களத்தில் முக்கிய பணியாற்றும் என தெரிகிறது.கொள்கைகள் நீர்த்துப் போன கட்சிகள் நிறைந்த தேர்தல் களத்தில் பெரும் பாலான கிராமப் புற இளைஞர்கள் சாதீய அரசியலின் பால் ஈர்க்கப் படுகின்றனர் .மேலும் மக்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து செயல் படுவது ,உள்ளூர் அரசியல் தன்மை போன்றவை ஒரு கட்சி பெரும்பான்மை என்ற அம்சத்தை பாதிக்கும் காரணிகளாக உள்ளன.

தலித்திய அரசியல் செய்யும் தலைவர்களான தொல்.திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற தலைவர்கள் வடக்கே மாயாவதி போல பெரிய சக்தியாக உருவாகாமல் போவது தமிழகத்தின் மற்றொரு தன்மையாக கொள்ளலாம். அதேபோல் தேசிய இயக்கமான காங்கிரஸ் திராவிட இயக்கங்களின் எழுச்சிக்கு பிறகு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதும், அந்த இடத்தில் இருந்து முன்னேற முடியாமல் கட்டுண்டு கூட்டணி சுகத்தில் மீள முடியாமல் இருப்பதும் முக்கிய நிகழ்வுகளே.

காலம் என்பது காற்றை போன்றது…காலி இடம் என்று ஒன்று ஏற்பட்டால் காலமே தலைவர்களை உருவாக்கும் தன்மை கொண்டதுதான் .அறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு எதிர்பாராத வேளையில் கருணாநிதியும்,, அவருக்கு மாற்றாக எம்.ஜி.ஆரும் உருவானார்கள் …..வருங்காலத்தில் உணர்ச்சி வயப்பட்டு வாக்களிக்கும் கூட்டம் வெகுவாக குறைந்து போகும் என்றுதான் தோன்றுகிறது. வாரிசுகளின் யுத்தமும், சாதீயச் சத்தமும்
அதிகமாகும் போலத் தான் தோன்றுகிறது.இது வெறும் தோற்ற மயக்கமாகவே போகக் கடவது.

ஆனால் தேசிய நலனை முன் வைக்கிற கொள்கைகள் இனிமேல் மாநில அளவில் எடுபடாது என்றுதான் தோன்றுகிறது..மேலும் மாநில நலன் காக்கும் கோஷங்கள் முன் வைக்கப்பட்டால் தேசியக் கட்சிகளுக்கு சிக்கல்தான்…ஆனால் சினிமாவின் மீது தமிழகத்தின் காதல் தொடர்கிறது..ஏதாவது தேர்தல் வந்தால் ரஜினி வாய்ஸ் யாருக்கு என்பது போன்ற கட்டுரைகளை பத்திரிக்கைகளில் பார்க்கலாம்.விஜய்காந்த் எதிர்காலத்தில் காங்கிரஸோடு கூட்டணி காண முயல்வார்….ஆனால் அவரது முயற்சிக்கு இன்றைய தடையான தி.மு.க நாளை மூன்றாம் அணியை இடது சாரிகளோடு இணைந்து உருவாக்க வாய்ப்புள்ளது…..வைகோவின் நிலை இனி என்ன என்பது யாருக்கும் தெரியாது.அம்மா,அய்யா இரண்டையும் தவிர்த்து அவர் தனியே நின்றும் பார்த்து விட்டார்.பலனில்லை.

நம் மக்களும் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள்….இல்லையேல் புதிதாக அவர்களே தலைவர்களை சிருஷ்டிப்பார்கள்….

காலம் என்னும் வற்றாத நதியில் தமிழக அரசியல் விதி விலக்கா என்ன…?

தோன்றி அழிவது வாழ்க்கை-இதில்
துன்பதோ டின்பம் வெறுமையென் றோதும்
மூன்றில் எதுவரு மேனும்-களி
மூழ்கி நடத்தல் பர சிவ முக்தி
-மகாகவி பாரதியார்

மதம் என்னும் மாய பிசாசின் ஆதி மூலம்....




இந்து என்ற மதத்தின் தோற்றம் குறித்து ஆராய்வது இந் நிகழ்வில் சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்....ஒரு மதத்திற்குரிய அம்சங்களை இந்து மதம் பெற்றுள்ளதா என்றால் இல்லை..இந்து மதத்திற்கு பொதுவான கொள்கைகளோ , கோட்பாடுகளோ இல்லை...அவைகளை யாரும் கட்டமைக்கவில்லை...மதங்களின் முக்கிய அம்சமான கடமைகள் (duties) இந்து மதத்திற்கு இல்லை... இந்து மதத்திற்கென்று பொதுவான மூலக் கர்த்தா யாரும் இல்லை.உருவ வழிபாட்டின் உச்சக் கட்ட அவலமாக ஏகப்பட்ட சாமிகள்... இந்து மதத்திற்கென்று உள்ள ஒரு பொதுவான அம்சம் என்ன வென்றால்... பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள்....என்ற கருத்தாக்கம் மட்டுமே....

அடிப்படையில் பல்வேறு இனக்குழுக்களின் நம்பிக்கைகளின் தொகுப்பாகத்தான் இந்து மதம் திகழ்கிறது...எனவே முதலில் இந்து மதத்தை மதங்கள் பட்டியலில் சேர்ப்பதே தவறு...இந்து மதம் என்ற கற்பிதம் பார்ப்பனர்களின் பொருளாதார, சமூக மதிப்பீடுகளுக்கு ஆணிவேராக திகழ்கிறது....எனவே தான் எந்த சாதியைக் காட்டிலும் பார்ப்பனர்களில்தான் நாத்திக,இடதுசாரி சிந்தனைகள் குறைவாக உள்ளது
மேலும் மற்றவர்களை காட்டிலும் பார்ப்பனர்களே இந்து மதம் என்ற கற்பிதத்தை தூக்கி நிறுத்துவதில் முதன்மையானவராக திகழ்கின்றனர்.....

எனவே மதம் என்ற அடிப்படைவாதம் மூலமாக அரசியல் ,சமூக மதிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவைகளை கண்டடைய பார்ப்பனர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்...

எனவே மதம் என்ற ஒரே ஒரு அடிப்படைவாதத்தை வைத்துக் கொண்டு மக்களை
மதம் என்ற போதையில் ஆழ்த்தி, ஒட்டு மொத்த சமூகத்தின் நல்லிணக்கத்தை பிரித்து அதன் மூலம் அரசியல் லாபம், பார்ப்பன உயர்வு, மனு நீதி தர்மம் போன்றவற்றை அடைய எண்ணும் RSS ,VHP போன்ற அமைப்புக்கள் நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தேவை இல்லை என்பது என் கருத்து....

சேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 3





சேகுவேரா....ஒவ்வொரு சமூக சிந்தனை உள்ள புரட்சிக்காரனின் கனவு,,,

சே என்றைக்குமே அமெரிக்காவிற்கு அபாயமாகத்தான் உள்ளார்..அவர் இறந்து விட்டாலும் அவரது முகம் ,வாசகங்கள் பதித்த பொருட்கள் உலகம் முழுவதிலும்
விற்று தீர்கின்றன... அவரின் வீரம் செறிந்த வரலாற்றை இன்றைய இளைஞர்கள் மீண்டும், மீண்டும் படித்து உத்வேகம் பெறுகின்றனர்...

சே கொலை செய்யப் பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாருங்கள்...
அந்த முகத்தில் சிறிதளவு பயமோ , கலக்கமோ காணப்படவில்லை .மாறாக அசாத்திய திருப்தி...இலேசான புன்னகையோடு திகழும் அந்த முகம் நம்மை அசர வைக்கிறது.ஒரு மரணத்தின் மதிப்பு இவ்வளவு தானா...? என்று சிந்திக்க வைக்கிறது அவரது முகம்..ஓரு புரட்சிக்காரனின் பணியை வெகு நேர்த்தியாக செய்தார் சே.அவர் மரணத்தின் வாயிலில் நின்று சொன்ன வார்த்தை "நான் இன்னும் இந்த உலகத்திற்கு தேவைப்படுகிறேன்"

ஆமாம்..உண்மைதான் ..சே என்றும் தேவைப்படுகிறார்

(தொடரும்)

சேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 2




சேகுவேரா ஒரு மருத்துவர்..அவர் தன் நண்பர் அல்பெர்தோ கிரானடோ வோடு
தென் அமெரிக்க கண்டத்தின் பசிபிக் கரையோர நாடுகளை சுற்றிப் பார்க்கும்
எண்ணத்தோடு ஒரு பழைய மோட்டர் சைக்கிளில் செய்த பயணம் அவர் வாழ்நாளில் முக்கிய திருப்பமாகும்….

அப்பயணத்தில் ஒரு தொழுநோய் இல்லத்தில் சே-வும் அவரது நண்பரும் தங்கி இருந்து மனிதாபிமான உதவிகளை செய்தனர்..அப்போது அந்நோயாளிகளின் உடல் நலனை ஒரு மருத்துவர் என்ற முறையில் தேற்றியதோடு மற்றும் இல்லாமல் அவர்களின் மனநிலையையும் சே தன் சுயநலமற்ற அன்பினால் தேற்றினார்….

சே மற்றும் அல்பெர்தோ கிரானடோவின் நாட்குறிப்புகளை பயன் படுத்தி வால்டர் சாயேஸ் என்பவர் THE MOTOR CYCLE DIARIES என்ற உலகப் புகழ்ப் பெற்ற
படம் தயாரித்தார்..அந்தப் படத்தை நானும் பார்த்திருக்கிறேன்…..அற்புதமான ,இயற்கை சுழலில் படம் பிடிக்கப் அப்படம் காண்போரை நெகிழ்ச்செய்யும் அனுபவத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் .அல்பர்தோ கிரானாடோவின் பயணக்குறிப்புகள் தமிழில் ஜி.குப்புசாமி மொழிப் பெயர்ப்பில் ‘சேகுவேரா என்ற புரட்சிக்காரன் உருவான கதை’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது…..
(வ.உ.சி.பதிப்பகம் வெளியீடு விலை:ரூ.100/-)

சேகுவேரா ஒரு காவிய நாயகனுக்குரிய அம்சங்கள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்தார்.அவரின் மிக கவர்ச்சியான முகம் ,கள்ளங்கபட மற்ற அவரின் பார்வை,நட்பை கொண்டாடும் அவரின் புன்னகை, இவை அனைத்துமே அவரின்
புகழை மேலும் உயர்த்தி சென்றன……

அது மட்டுமல்ல அவரின் சமரசம் ஏதும் அற்ற புரட்சிக்கர மனநிலை யாருக்கும்
கிடைப்பது அரிது…
ஒரு புரட்சிக்காரனின் தேவை என்ன என்பதை அவரே கீழ்கண்டவாறு தெரிவிக்கிறார்…..

“ஒரு புரட்சிக்காரனின் தேவை எதுவென்றால்

1.வெகு நடப்பதற்கும், ஒடுவதற்கும் ஏதுவான வலிமையான கால்கள்
2.தூக்கும் போது உறுத்தாத எளிய வாழ்விற்கு போதுமான, இன்றியமையாத
பொருட்களை உள்ளடக்கியதுமான சிறிய சுமை.............
3.சிறிதளவே சாப்பிட்டாலும் தாங்கும் பிச்சைக்காரனின் வயிறு….

இதைவிட யார் புரட்சிக்காரனின் தேவைகளை யார் சொல்லிவிட முடியும்?,,….

இதைவிட அவர் ஒரு நிரந்தர ஆஸ்துமா நோயாளி என்பதும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது..தீவிர ஆஸ்துமா நோயின் தாக்குதலுக்கு உள்ளான அவர் அதே வேகத்தில் ஏகாதிபத்திய சக்திகளை தாக்கிகொண்டிருந்தார் என்பது மானுட சமூகம் மீது அவர் கொண்டிருந்த மாசற்ற அன்பையும்,போர் மனநிலையையும் ஒரே சமயத்தில் பெற்றிருந்தார் என்பது சிறப்பு…

(தொடரும்)

சேகுவேரா-என்ற கனவு மானுடன்...




நமது காலத்திற்கும் மட்டும்மல்ல.., எதிர் காலத்திற்கும் உரிய சிறந்த மனிதர்
சேகுவேரா மட்டுமே……என் இதயத்தின் அடியாழத்தில் உள்ள மாசற்ற பிம்பம்
சேகுவேரா….குறை காண இயலா,சமரசங்கள் ஏதும் அற்றப் போராளி சேகுவேரா
மட்டுமே நம் குழந்தைக்களுக்கான எதிர் கால உதாரணம்….
-தோழர்.பிடல் காஸ்ட்ரோ..

சேகுவேரா-என்ற மந்திரச் சொல் 90களின் துவக்கத்தில் என் செவிகளில்
விழ துவங்கியது......முதலில் அவர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு அவரின் சுருட்டு பிடிக்கும் படம் மட்டுமே கிடைத்தது...

அந்த ஒரு படமே நான் சே-வை நோக்கி நான் நெருங்கி வர போதுமானதாக இருந்தது.....அவர் எல்லா சர்வாதிகாரங்களுக்கும் சவாலான சாகசக்காரராக எனக்கு தோற்றமளித்தார்.....அதுவும் அந்த புகைப்படத்தில் அவர் காட்டும் அலட்சியம் உள்ளடக்கிய கம்பீரம் உலகப் புகழ் வாய்ந்தது.

ஒரு தனி மனிதன் மீது பார்த்தவுடன் பற்று வர அவரது முகப் பொலிவும்,தோற்றக் கவர்ச்சியுமே போதுமான அம்சங்கள் என்ற வகையில்
எடுத்த வுடன் சேகுவேரா எனக்கு பிடித்த ஆளுமை ஆனார்....

பிறகு திருச்சி சட்டக்கல்லூரியில் நான் பயின்ற போது அங்கு ஒரு கருத்தரங்கிற்கு
வந்த ஒரு வெளிநாட்டவர் அணிந்திருந்த சட்டையில் சேகுவேரா படம் பார்த்தேன்...
அதுக் குறித்து நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு புரட்சியாளர்
என்ற தகவலையும்,கியூபா நாட்டில் எழுந்த புரட்சியின் கதாநாயகன் என்றும் தகவல்களை தெரிந்துக் கொண்டேன்.

பிறகு சேகுவேராவைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் காட்டினேன்.பிறகு
விடியல் பதிப்ப்பகம் வெளியிட்டு உள்ள சேகுவேரா-வாழ்வும்,மரணமும் என்ற
நூலை வாங்கினேன்…….அது எனக்கு திருமணம் நிச்சயமான பொழுது….
என் மாமா நான் ஆசைப்படுவதை எண்ணி அந்த புத்தகத்தை வாங்கிகொடுத்தார்…. ஒரு மூன்று மாதக் காலம் நான் அந்த புத்தகமும்,கையுமாகவே அலைந்தேன்..என் திருமண நாளன்று கூட கிடைத்த சிறு
ஒய்வில் கூட படித்துக்கொண்டிருந்தேன். முதலிரவு முடிந்து பின்னிரவில் எனக்கு ஏற்பட்ட விழிப்பில் மீண்டும் படித்துக் கொண்டிருந்தேன்….

எனக்கு புதுமனைவி மீது இருந்த காதலை விட சேகுவேரா என்ற அந்த மாபெரும் புரட்சிக்காரனின் மீது இருந்த பற்று மிக அதிகமாக இருந்தது…….

சேகுவேரா பிடிப்பட்ட பொழுதுகளை படித்த போது விம்மி வெடித்து அழுதேன்….
அவர் சுட்டுக் கொல்லப் பட்டதை படித்துவிட்டு எனக்கு ஏற்பட்ட கடுமையான துயர் என்னை கடுமையான காய்ச்சலில் வீழ்த்தியது……

அப்படிப் பட்ட ஒரு புரட்சிக்கரமான ,அழகு மிளிர்ந்த , இளம் ஆளுமை ஏகாதிபத்திய கூலிப் படைகளால் சுட்டுக் கொள்ளப் பட்டது இன்னும் எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக உள்ளது.

அவர் எதற்காக மரணத்தை நோக்கி நடந்தார்..? எந்தத் தேவை அவரை அவசர அவசரமாக சாவுக்குழிக்குள் தள்ளியது? …..
விடை தேடிப் பார்த்தால் நாம் யாருமே உணர்ச்சி வயப்படாமல் இருக்கமுடியாது…..

உலகம் முழுக்க உள்ள எளிய மக்கள் அனைத்து தளைகளில் இருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றும் ,அதற்கு உலகளாவிய புரட்சி நிகழ வேண்டும் என அவர் விரும்பினார்.

அதன் காரணமாகவே ….

கியூபா நாட்டில் தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு,
தனக்கு இருந்த புகழ்,செல்வாக்கு,குடும்பஉறவுகள்,செல்வம் ,அனைத்தையும் விட்டு விட்டு இரவோடு இரவாக பொலிவியா சென்றார்……அவர் புரட்சிக்காரனாக ஆனதில் சூழ்நிலைக்கு எந்த பங்கும் இல்லை. மாறாக சக மனிதர்களின் மீது அவர் வைத்த அளவற்ற பற்றே காரணமாக திகழ்ந்தது.

(தொடரும்……)

பள்ளிக்கூடம் ----- திரைமொழி நிகழ்த்தும் உணர்வு மேலீடுகிற நெகிழ்வு………………



தமிழனின் பண்பாட்டு வேர்களை அடையாளப்படுத்தி அதன் மூலமாக எளிய மக்கள் கதையை உணர்வுத்தளத்தில் சொல்வதில் வழக்கம்போல் தங்கர்பச்சான் வெற்றிப் பெற்றுள்ளார். நம் கதையை, நம் மண்ணில் நிகழ்கிற நிகழ்வுகளை
அசல் மாறாமல் மண்ணின் மணத்தோடு தங்கர் திரைமொழியாக மாற்றி திரையில்
விவரிக்கும் போது நம் கண்கள் இயல்பாக கலங்கத்தான் செய்கின்றன…..தனது களவாடிய பொழுதுகளை நம் விழிகளில் நிகழ்த்துகிறார் தங்கர்..

திரைத்துறை முழுக்க இன்று பணம் செய்யும் தொழிலாக மாறிப்போய் விட்டது..
பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து பிரம்மாண்ட அரங்குகளில் பெரிய நடிகர்-நடிகையரை ஆடவிட்டு ஒரு வரிகதையில் சமூக மாற்றத்தை நிகழ்த்துவதாக மாயங்கள் காட்டுகின்றன.நம் தமிழனுக்கும் அண்ணாந்து வேடிக்கை பார்த்து பார்த்தே கழுத்து வளைந்து விட்டது.இதனால் நிகழ்ந்தது என்ன என்பதை யோசிக்கும் போதே அடுத்த பிரம்மாண்டம் வந்து விடுகிறது….இதுப் போன்ற சங்கடங்கள் இல்லை தங்கர் பச்சானின் பள்ளிக்கூடத்தில்…

நம் பண்ருட்டி தமிழ் பேசும் எளிய மனிதர்கள் படம் முழுக்க காணப்படுகின்றனர்.
மல்லாக்கொட்டை பையோடு எண்ணெய் பூசிய முகத்தோடு அய்யோடி மாவட்ட
ஆட்சியர் வெற்றியை பார்க்க வரும் காட்சி படம் பார்க்கும் அனைவரையும் ஈர்க்கிறது..அதிரசம் கொண்டுவந்திருக்கியா?.....கேட்கும் நண்பனிடம் அவர் இல்லாம நான் வருவேனா என்று வெள்ளந்தியாய் பேசும் அய்யோடி நம்மை படம் முழுக்க கட்டிப் போட்டு விடுகிறார்…இலங்கை தமிழர்களை அக்கறையோடு விசாரித்து சேர்ந்து உணவு உண்ணும் காட்சி ஈழம் குறித்தான நம் மதிப்பீடுகளை உயர்த்துவதோடு மட்டுமில்லாமல் நம்மிடையே உள்ள ஈழம் குறித்தான அக்கறையின்மை சார்ந்த கேள்விகளை முன் வைக்கிறது..

பள்ளிக்கூடம் படத்தை தமிழர்கள் அணுகுவதில் எவ்வித சங்கடங்களோ, உறுத்தலோ இல்லை.திரையரங்கில் படம் ஒடும் போது ஆங்காங்கே விசிம்பல்
ஒலிகள் கேட்கத்தான் செய்கின்றன.. திரைப்பட இயக்குனர் முத்து-ஜெயந்த்தாக வரும் சீமான் பக்குவமான நடிப்பில் மனதைக் கவர்கிறார்.முத்து வீட்டில் பழைய
துணிகளை அய்யோடி ஆசையாய் எடுத்து வைத்து கொண்டு, எடுத்துட்டு போக
ஒரு பை இருந்தா குடுடா என்று கேட்கும் போது நாகரீகம் கருதி கட்டி வைத்திருக்கும் நம் மனது உடைந்து போய் கலங்கி விடுகிறது..

காட்சியமைப்பில் உணர்வுகளை மேலீட வைக்கிற சாதூர்யம் தங்கருக்கு நன்றாகவே கைவருகிறது.அதிக ஒப்பனை இல்லா நடிகர்கள் அதிகமாக பேசாமல்
உணர்வு தளத்தில் செயல் படுவது ஆறுதல் அளிக்கிறது. இடிந்தப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியையாக வரும் சிநேகா கண்களால் பேசி கவர்கிறார்.
நிராசை மிகுந்த ஏமாற்றத்தையும் ,காதல் குதூகலத்தையும் அவர் சிரமமின்றி
அழகாக கையாள்வது பாராட்டுதலுக்குரியது.அதேப் போல் ஸ்ரேயாவும்
சிறிய வேடம் என்றாலும் அசத்துகிறார்…

சீமான் மிகையில்லாத நடிப்போடு இயல்பாக வந்து அனைவரையும் கவர்கிறார்.
இனிமேல் சீமான் எவ்வித தயக்கமும் இன்றி நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என்ற அனுமதி சீட்டை இப்படம் அவருக்கு பெற்று தந்திருக்கிறது.

அனைவருக்கும் மேலாக தங்கர் பச்சான் இயல்பான தன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.நேசம் மிக்க அவரது தமிழ் உணர்வு ஒவ்வொரு காட்சியமைப்பிலும்
வெளிபடுகிறது….எனக்கு கிழங்கு உரிக்க தெரியாதா…? என்று தன் மண் பாசத்தோடு கேட்கும் நரேன் உணர்வில் தன் சொந்த ஊரை விட்டு வந்த மனிதர்களின் நினைவில் எப்போதும் ஊறும் சுனைப்போல ஊறிக் கொண்டிருக்கும் ஊர்ப்பாசம் தெரிகிறது….

தமிழர்களுக்கான தமிழர்களால் உருவாக்கப்பட்ட படம் இதுவென்று காட்சியமைப்புகளில் நன்கு புலப்படுத்தி விடுகிறார் தங்கர்.
முக்கியமாக பள்ளி விழாவின் போது அப்பள்ளியில் படித்த வயதானவர்கள்
தங்கள் நினைவுகளால் தங்கள் இளமைக் காலத்தை மீட்டெடுப்பது காட்சியமைப்புகளால் கவிதையாக்கப் பட்டிருக்கிறது….

இடிந்த பள்ளியை எழுப்ப உலகம் முழுவதிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் உதவ
துடிக்கும் போது நமக்கு தன் தேசத்தை எழுப்ப துடித்துக் கொண்டுருக்கும் உலகமெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் நினைவுக்கு வருவது சிறப்பு…
அவரவர் கூடு அவரவருக்கு உயிர் என்ற கருவோடு கவிதையாய் பயணிக்கிறது படம் . இசை எந்த இடத்தில் மெளனமாக வேண்டும் என்று நன்கு புரிந்து
படத்திற்கு ஒத்திசைவாக செயல்படும் வகையில் பயன் படுத்தப்பட்டிருப்பது
சிறப்பு…மிகையில்லாத இயல்பான ஒளியில் ஒளிப்பதிவின் நேர்த்தி தெரிகிறது.

கோடிக்கணக்கில் செலவு செய்து தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை இழிவு
செய்து, தமிழ்நாட்டில், தமிழர்களின் பொருளாதாரத்தை சுரண்டி கொழுப்பெடுத்து படம் என்ற பெயரில் குப்பைகளைக் கொட்டும் குப்பைத்தொட்டியாக தமிழகத்தை மாற்ற முயலும் விஷக்கிருமிகளின் ஊடக நச்சுகளுக்கு நடுவில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி , மேற்கண்ட ஆபாச குப்பைகளுக்கு மாற்றாக எம் தமிழர் படம் வெளிவந்து உள்ளது..

தென்றல் படத்தில் தமிழ் குடமுழுக்கை வலியுறுத்தி காட்சிகள் வைத்த தங்கர் இந்த
படத்தில் தமிழர்களின் நிலங்களை மீட்டெடுக்க நடக்கும் போராட்டத்தை காட்டுகிறார். சமூக உணர்வு உள்ள தங்கர் பச்சான்,சீமான் போன்றவர்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சமரசம் ஆகாமல் கொள்கைவாதிகளாக இருப்பது பெருமை அளிக்கக் கூடிய நிகழ்வாகும்.

சிற்சில குறைகள் தெரிகின்றன.அவை என்னவென்று இந்நேரம் உணர்ந்திருக்கும் வல்லமைப் பெற்றவர் நேர்த்தியான நெறியாளர் தங்கர் பச்சான்…

எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.சீமான்,தங்கர் பச்சான் போன்றவர்களின் படங்கள் நம் தமிழகத்தில் நன்கு பெரிய வெற்றியை பெற வேண்டும். இவர்கள் போன்ற கலைகள் மூலம் தமிழ் உணர்வையும்,எளிய வாழ்வையும் வலியுறுத்துகிற கலைஞர்கள் தோற்கவே கூடாது..


தமிழர்களின் படம் வெல்ல வேண்டும்……..

தமிழர்களை தலை நிமிரச் செய்யும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து
கொண்டிருக்கும் கலையுலப் போராளிகள் தங்கர் பச்சான் ,சீமான் ஆகியோருக்கு
எங்கள் வாழ்த்தும், அன்பும்……

சுஜாதா தொடர்ந்துள்ள வக்கிர தாக்குதல்……….




வெகு காலமாய் பார்ப்பன சுஜாதா ரங்கராஜன் தமிழ்ப் பண்பாட்டு கருத்துக்கள் மீதும்,முற்போக்கு பெண்ணிய நிலைப்பாடுகள் மீதும் , தொடர்ந்துள்ள போர்
சிவாஜி பட வசனங்கள் மூலம் உச்சக்கட்டத்தை எட்டத் துவங்கியுள்ளது….

தன்னை பார்ப்பன சங்கத்தின் உறுப்பினர் என்று வெளிப்படையாக
பெருமைப் பொங்க அழைத்துக் கொள்ளும் சுஜாதாவோடு எந்த வகையிலும்
தமிழன் என்று உணரும் யாராலும் சமரசமாய் போகமுடியாது…….

தற்சமயம் தமிழ் மன்னன் மகள்களின் பெயரை தன் வசனத்தில் கேலிப் பொருளாக்கிய சுஜாதா ரங்கராஜன் தொடர்ந்து ஆபாச வசனங்கள் எழுதுவதிலும்,
தமிழின உணர்வுகளைச் சீண்டிப் பார்த்து வக்கிர இன்பம் அடைவதில் வல்லவர்….
அவரின் ஒட்டுமொத்தப் படைப்புகளை வாசிப்பவர்கள் மாயாவி உலகில் சிக்கிக்கொண்ட சிறுவர்கள் போல மயக்கமுற்று,வண்ணக் கனவுகளின் சுழற்சிவலையில் சிக்கிக் கொண்டு ,ஏதோ நல்ல தேர்ந்த படைப்புகளைத்தான்
வாசிக்கிறோம் என்ற மாய உணர்வுக்கு ஆளாவார்கள். ஆனால் மலிந்த பால் உணர்வுகளை தூண்டக்கூடிய அந்த மயக்கம் தெளிவான உடன் உண்மைப் புலப்படும்…….உண்மைக் கண்ணாடியைக் கொண்டு படியுங்கள் ….தெரிந்து விடும்… சுஜாதாவின் ஆரியம் தோய்ந்த சொற்களில் பாய்ந்து பொங்கும் விஷமத்தனத்தின் வீரியம் எத்தகையத் தன்மை வாய்ந்தது என்று……

பல வருடங்களுக்கு முன் வெளிவந்த விக்ரம் படத்திலேயே இவரின் ஆபாச வசனங்கள் உலகப் புகழ் பெற்றுவிட்டன. பாய்ஸ் பட வசனங்கள் எத்தகையது என்பதை அந்தப் படம் வெளியானப் போது அது எதிர் கொண்ட எதிர்ப்பலைகளில்
இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

இது போன்று சுஜாதா எழுதுவதற்கு என்ன காரணம் என்று ஆராய்தோமானால் பணம் என்ற ஒற்றைச் சொல்லோடு நம் ஆய்வை நிறுத்தி விட முடியாது..கொஞ்சமும் சமூக உணர்வு இல்லாமல் தான் அண்டிப் பிழைக்கும் சமூகத்தில் தன் வாலிப (?) எழுத்துக்கள் மூலம் உருவாக்கும் கற்பிதங்கள் படம் பார்க்கும், சுஜாதா இலக்கியம் படிக்கும் இளைஞர்களை எவ்வளவு பாதிக்கின்றன
என்பது சமூக ஆர்வலர்களின் திவீர விசாரணைக்கு உட்பட்டது ஆகும்

ஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்….




தொடர்ந்து விகடனில் ஒ! பக்கங்களில் மிகவும் ஆரிய நிலைப்பாட்டோடு எழுதி
வருகிறார் ஆரிய ஞானி….
தன்னை நாத்திகன் என்றும்,பெண்ணுரிமை போராளி என்றெல்லாம் அழைத்துக் கொண்டு தற்பெருமை பாடும் ஆரிய ஞானியின் எழுத்துகளில் போர்வைக்குள் உள்ள பூனையாய் தெரிந்து விடுகிறது ஆரிய மனம்.
ஒரு கரத்தால் தி.மு.க வை சுண்ணாம்புக் காலவாய் வார்த்தைகளால் வறுத்தெடுத்து விட்டு மற்றொரு கரத்தால் பூணூல் பாசத்தால் ஜெயலலிதாவை செல்லத்திட்டு திட்டுகிறார் ஆரிய ஞானி.(சமமாய் விமர்சிக்கிறாராம்)
இரண்டு வாரத்திற்கு முன் விகடனில் அறிஞர் அண்ணாவிற்கு விழா எடுப்பது குறித்து ஆடு நனைகிறதே என்று இந்த ஓநாய் அழுதது. அக் கட்டுரையில் தந்தை பெரியாரை காட்டிலும் அண்ணா உயர்ந்தவர் என்று சிண்டு முடிய முயன்றார் ஆரிய ஞானி. ஆரிய மாயை எழுதிய தந்தை பெரியாரின் போர்வாள் அண்ணாவை உயர்த்துவது இவர் நோக்கமல்ல. அண்ணாவை உயர்த்துவது போல் நடித்து தந்தை பெரியாரை இழிவு படுத்த முயற்சிக்கிறது இந்த ஆரிய ஞானி.
விகடன் - தந்தை பெரியார் திரைப்படம் குறித்த விமர்சனத்தை வெளியிட்ட போது, அது தந்தை பெரியார் குறித்த படைப்பு என்பதால் மதிப்பெண் என்ற அளவுகோலால் அப்படத்தை அளக்க இயலாது என்றும் அது தந்தை பெரியார் பெருமைக்கு தகுந்ததல்ல என்றும் விமர்சித்து தனது பாரபட்சமற்ற நிலையை எடுத்துக் காட்டியது. ஆனால், இந்த ஆரிய ஞானி அதே விகடனில் தந்தை பெரியாரைப் பற்றியும், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார விடுதலைக்குப் பாடுபட்ட திராவிட இயக்கங்கள் குறித்தும் தவறான கருத்துக்களை தொடர்ந்து எழுதி வருகிறார். கலைஞர் மு. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் இவர் விமர்சிப்பது குறித்து நமக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. அதே சமயத்தில் சட்டமன்றத்தில் தன்னை ஆரிய இனத்தின் குலக் கொழுந்து என்று பெருமை கொப்பளிக்க அழைத்துக்கொண்ட ஜெயலலிதா குறித்து இவர் எழுப்பிய விமர்சனங்கள் கலைஞர் மு. கருணாநிதி குறித்து எழுப்பிய விமர்சனங்களைவிட எத்தகைய ஆரிய பாசத்தன்மை மிகுந்தது என்பதை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஒரு ஜனரஞ்சக பத்திரிகையில் பாரபட்சமில்லாமல் விமர்சனம் எழுதுவதாக பீற்றிக் கொள்ளும் இந்த ஆரிய ஞானி ஏன் இதுவரை தந்தை பெரியார் முன் வைத்த ஆரிய சூழ்ச்சியின் வேரையே அம்பலப் படுத்திய, சமூக, பொருளாதார கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை?
சோ. ராமசாமிக்கும் இவருக்கும் பெருத்த வேறுபாடுகள் இல்லை. அவர், நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு வெளிப்படையாக இந்துத்துவாவிற்கு ஆதரவாகவும், மனு தர்மத்திற்கு ஆதரவாகவும் தொடர்ந்து எழுதி வருபவர். ஆனால், இவரோ பசுத்தோல் போர்த்திய நரியாக நாத்திகன் என்றும், முற்போக்கு சிந்தனைகளுக்கு ஆதரவாளர் என்றும், பெண்ணியம் போற்றும் போராளி என்றும் நடித்துக் கொண்டிருக்கிறார். சொல்லப் போனால் சோ. ராமசாமி இவரை விட பன்மடங்கு சிறப்பானவர். தந்தை பெரியாரின் தலைமுறைகளுக்கு நான்தான் உங்களது எதிரி என்று வெளிப்படையாக அறைகூவல் விடுக்கிறார். ஆனால், ஆரிய ஞானியோ முதுகுக்குப் பின்னால் நின்றுகொண்டு நம் கவனத்தை திசை திருப்பும் வகையில் பொய்யான தகவல்களுடன் நம்மை சொறிந்துகொண்டிருக்கிறார். திருவாளர் ஆரிய ஞானி அவர்களே.. சிண்டு முடிவது உங்கள் குல வழக்கம். அதை நீங்கள் மறக்காமல், மாற்றாமல் செய்து வருவதற்கு எங்களது பாராட்டுகள். ஆனால், உங்களது வேலைகள் எங்களுக்கு நன்றாகத் தெரியும், உங்கள் உள் நோக்கம் என்ன, ஆதி மூலம் என்ன, என்பது எங்களுக்கு நன்றாகப் புரியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். குஷ்புக்காக குரல் கொடுத்துக் குடை பிடிப்பதோடு நின்றுகொள்ளுங்கள். அறிஞர் அண்ணாவைப் பற்றியும் தந்தை பெரியாரைப் பற்றியும் உளராமல் வாயை மூடிக் கொள்ளுங்கள்

இதற்கு இளையா என்பவரின் எதிர்வினை

Aagadhavan pondaatti kai pattalum kutham kal pattaalum kuthamAnna'va kondaadunga'nu sonnalum kelvi ezhupireenga, JJ'va thittunaalum chella thittunnu solreenga Yaen Karunanidhiya paaraatti koodathaan irukkaru. Appa enga comrade poaneengaUluthu poana aariya dravida matter'a vechu vaazhkaya oppethalaamnu paakureenga poadhaadha kuraikku nenga india communist member veranamma communist aalunga innaikki evening peak hours'la road'a block pannaangalae veetukku time'ku poaga mudiyaama thindaadunaangalae adhellaam neenga vakkalathu vaangura Dravida inathin vidivelli Thiru Karunanidhiya sari seyya sollungaJJ'vai Periyar'in pennuruvamae apdinnu varunichaarae namma veeramani. adha endha kanakkula sekkarathu. Modhalla namma mela irukkura karaya thudaippoam. appuram ooraar pathi pesuvoam.Avar oru arasiyal vimarsagar. DMK ruling party'ndradhaala adhai patri vimarsippadhu ungalukku adhu poala theriyalaam. 'O' pakkangal JJ aatchi varumboadhu kattayam irukkum. appa Gnani vimarsikkiraara illayanu paarpoamAdhuvaraikkum aaryan, dravidan'nu time waste pannama namma thozhila paarpoam yaenna naama thalaivara yethukuna karunanidhi, CPI Raja, avagellaam aarya padaigalodu sernthu gummala adichittu irukkaanga Delhi'laThalaivar Che Guevara vera profile photo'va poatirukkeenga. Theera aaraayaama orae pakkama pesurathu thappu senthil

மணி. செந்திலின் பதில்

நன்றி.. நண்பரே...தங்களது உடனடி எதிர்வினைக்கு..ஆனால் தங்கள் பதிலில் என் கேள்விகளில் ஒன்றுக்கு கூட தங்களிடம் முறையான பதிலில்லை.கலைஞர்.மு.கருணாநிதி ஆட்சியை விமர்சிப்பது என்பது வேறு. அறிஞர் அண்ணாவையும் தந்தை பெரியாரையும் ஒப்பீட்டு சிண்டு முடிய முயல்வது என்பதுவேறு.சாமர்த்தியமாக பூசி மறைக்க முயன்று உள்ளீர்கள்.போக்குவரத்து அவரச பொழுதுகளில் எங்கள் தோழர்கள் சாலை மறியல் செய்வது நண்பரே உங்களுக்காகவும்தான். மக்கள் பிரச்சனைகளுக்காக எங்கள் தோழர்கள் செங்கொடி ஏந்தி போராடுவது என்பது தங்களுக்கு தவறாக படுவது வருந்தத்தக்கது. வீட்டுக்கு நேரத்தில் செல்வதை விட மக்கள் பிரச்சனைகள் மிக முக்கியம் நண்பரே... சமூக அக்கறையை வளர்த்துக்கொள்ளுங்கள்.நண்பரே..கலைஞர்.மு.கருணாநிதி ஆட்சியை விமர்சிப்பது குறித்து எங்களுக்கு ஆட்சேபணையில்லை என்று நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்..ஜெ ஆட்சிக்கு வரும்போது ஞானி விமர்சிப்பார் என்று சொல்லி உள்ளீர்கள்.தங்கள் ஆசை புரிகிறது.ஆனால் ஒரு வேளை ஜெ ஆட்சிக்கு வரும்போது ஞானி விமர்சித்தார் என்றால் ஜெ என்ன செய்வார் என்பது குறித்து சங்கராச்சாரியிடம் தான் கேட்க வேண்டும்.ஆரிய -திராவிட மோதல் என்று கால விரயம் செய்ய வேண்டாம் என்று சொல்லி உள்ளீர்கள்.ஆனால் பிறப்பின் மூலம் பல நூற்றாண்டாய் அடிமைப்படுத்த பட்டவர்கள் கேள்வி கேட்பது கால விரயம் என்றால் நாங்கள் இந்த ஒரு தலைமுறை கேள்வி கேட்டு கால விரயம் செய்வது தவறில்லை. புளித்து போவதற்கு "ஆரியன் -திராவிடன்(சூத்திரன்) என்று உணர்ந்து எழும்பி கேள்வி கேட்கும் உணர்ச்சி " புளிசாதம் இல்லை.நண்பரே... அது அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனத்தின் போராட்டம்.திரு.வீரமணி அன்று சொன்னது எல்லாம் சரி என்றால்... இன்று அவர் முன் வைக்கிற கேள்விகள் எல்லாம் சரிதான் ...இல்லையா நண்பரே...?நீங்கள் சொல்வது போல் டெல்லியில் கலைஞர்.மு.கருணாநிதி, ராஜா ஆகியோர் ஆரிய படைகளோடு கும்மி அடித்தாலும், உள்ளூர் திருவரங்கம் கோவிலின் கருவறைக்குள் சூத்திர கருணாநிதியும், ராஜாவும் உள்ளே நுழைய முடியுமா நண்பரே...?எனவே கும்மி வேறு. குலம் வேறு.. -மணி.செந்தில் குமார்.

பிரின்ஸ் பெரியார் அவர்களின் எதிர்வினை

வீரமணி பெரியாரின் பெண் வடிவாக ஜெயலலிதாவை பார்ப்பாதாக சொன்னார் என்ற தவறான தகவலை பரப்ப முயற்சிக்க வேண்டாம்...ஜெயலலிதாவை ஆதரித்துக்கொண்டு இருக்கும் போதும் சரி,, எப்போதும் சரி....பெண் பெரியார், ஆண் பெரியார், வாழும் பெரியார்.. செத்த பெரியார் என்றெல்லாம் கிடையாது.... பெரியார் ஒருவர்தான் பெரியார் என்பதை பல்வேறு கேள்வி பதில்களின் வாயிலாக தெளிவாக தலைவர் வீரமணி அவர்கள் விளக்கியுள்ளார்கள். எனவே விவரம் தெரியாமல் பேச வேண்டாம்!நீங்க தொடருங்க செந்தில் அண்ணே!

இதற்கு இளையா என்பவரின் எதிர்வினை

கலைஞர்.மு.கருணாநிதி ஆட்சியை விமர்சிப்பது என்பது வேறு. அறிஞர் அண்ணாவையும் தந்தை பெரியாரையும் ஒப்பீட்டு சிண்டு முடிய முயல்வது என்பது வேறு.Neengal andha padhippai paditheergala illaya endrae theriyavillai. Indraya DMK'vin kolgaigal adippadiyilayae Anna'vai oppittu irunthaar. Idhil periyar'udaya pangu enna ulladhu Iruvarum periyar paasarayil vanthavargalae aanaalum DMK endru varumboadhu periyar'ukku angu idam illai endrae ninaikkiraen போக்குவரத்து அவரச பொழுதுகளில் எங்கள் தோழர்கள் சாலை மறியல் செய்வது நண்பரே உங்களுக்காகவும்தான். மக்கள் பிரச்சனைகளுக்காக எங்கள் தோழர்கள் செங்கொடி ஏந்தி போராடுவது என்பது தங்களுக்கு தவறாக படுவது வருந்தத்தக்கது. சமூக அக்கறையை வளர்த்துக்கொள்ளுங்கள்.நண்பரே..Ungalukku eppadiyo theriyaadhu aanaal enakku Sengodiyin meedhu adheedha nambikkai ulladhu. En kelvi'yae adhai yendhi porudubavargalin nilaippaattil thaan. Thamizhagathil oru nilaippadu, keralathil ondru, Vangaalathil ondru anaithukkum ner edhir vidhamaaga Delhi'yil ondru. Indrum makkalidayae samathuvam pirakkum endral adhu sengodiyil nambikkai vaithavanaalayae mudiyum.ஜெ ஆட்சிக்கு வரும்போது ஞானி விமர்சிப்பார் என்று சொல்லி உள்ளீர்கள்.தங்கள் ஆசை புரிகிறது.ஆனால் ஒரு வேளை ஜெ ஆட்சிக்கு வரும்போது ஞானி விமர்சித்தார் என்றால் ஜெ என்ன செய்வார் என்பது குறித்து சங்கராச்சாரியிடம் தான் கேட்க வேண்டும்.Nam vivaadhathirkku apparpatta vidayamஆரிய -திராவிட மோதல் என்று கால விரயம் செய்ய வேண்டாம் என்று சொல்லி உள்ளீர்கள்.ஆனால் பிறப்பின் மூலம் பல நூற்றாண்டாய் அடிமைப்படுத்த பட்டவர்கள் கேள்வி கேட்பது கால விரயம் என்றால் நாங்கள் இந்த ஒரு தலைமுறை கேள்வி கேட்டு கால விரயம் செய்வது தவறில்லை.Thavarillai nanbha. Aanaal adharkku munn neengal arasiyal saaraadhavaraaga irukka vendum. Aariya, Dravida verupaattai kaatiyadhae avargal gavanam seluthiya, naam seluththa thavariya padipparivae(ulaga arivu).Ichoozhnilayil andha padipparivil naam siridhum salaithavargal illai endra nilai vandha piragu neengal koorum Aarya, Dravida pirivinai thevai illadha ondraagavae niniaikiraen
Namakku adutha thalaimuraikku arya dravida pirivinai endraal ennavendrae theriyaadhu. Adhu appadiyae marayattumநீங்கள் சொல்வது போல் டெல்லியில் கலைஞர்.மு.கருணாநிதி, ராஜா ஆகியோர் ஆரிய படைகளோடு கும்மி அடித்தாலும், உள்ளூர் திருவரங்கம் கோவிலின் கருவறைக்குள் சூத்திர கருணாநிதியும், ராஜாவும் உள்ளே நுழைய முடியுமா நண்பரே...?Idharkku theervu ennavendru neengalae sollungalaen

மணி. செந்திலின் பதில்

நல்லது நண்பரே.. தந்தை பெரியாரைப் பற்றி தவறாகக் கூறி சிண்டு முடிய ஞானிக்கு வேண்டுமானால் ஒரு காரணமுள்ள உள்நோக்கம் இருக்கிறது. நமக்குள்ள ஒரே நோக்கம் தந்தை பெரியாரை மாசுபடுத்த நினைப்பவருக்கு தகுந்த பதிலால் 'இவர்கள் புரிந்து கொள்ள துவங்கிவிட்டனர்' என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான். தி.மு.க.வில் பெரியாரின் பங்கு குறித்து நீங்கள் ஒரு வினா எழுப்பியுள்ளீர்கள். தி.மு.க. மட்டுமல்ல திராவிட இயக்கங்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனைத்துமே தந்தை பெரியாரைத்தான் தங்கள் ஆதாரமாக கொண்டுள்ளன. ஆனால், நடைமுறையில் அ.தி.மு.க.வைத் தவிர மற்ற இரு பெரும் திராவிட இயக்கங்களான தி.க., தி.மு.க., போன்றவை தந்தை பெரியாரை தங்களது ஆதர்சமாக காட்டுவதில் பெருமிதம் கொள்கின்றன. அ.தி.மு.க. தனிநபர் துதிபாடும் நிறுவனமாக முழுக்க முழுக்க மாறிவிட்ட காரணத்தினாலும் அதன் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவிற்கு தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் வரலாறு குறித்து அடிப்படை சிந்தனைகள் இல்லாத காரணத்தினாலும் தந்தை பெரியார் என்ற மாபெரும் ஆளுமையை மறந்துவிட்ட இயக்கமாக மாறி வெகு காலமாகிவிட்டது. தந்தை பெரியாரின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவை எதிர்த்து அறிஞர் அண்ணா பிரிந்து வந்து தி.மு.க.வைத் துவக்கினாலும் தன் இறுதி மூச்சு வரை தந்தை பெரியார் ஒருவரையே தன் தலைவராக நினைத்து வாழ்ந்து வந்ததை அனைவரும் அறிவர். ஆனால், உள்நோக்கமுடைய ஞானி போன்றோர் தந்தை பெரியாரைப் பற்றியும் அறிஞர் அண்ணாவைப் பற்றியும் எழுதி சிண்டு முடியப் பார்ப்பது நமது கண்டனத்திற்கு உரியதாகிறது. தி.மு.க. முதன் முதலில் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் கலைஞர் கருணாநிதி போன்ற தி.மு.க. முன்னணியினர் தங்களை எதிர்த்து தேர்தலில் மிக உக்கிரமாக பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரின் வீட்டிற்கே சென்று இந்த வெற்றியை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறோம். இது உங்களது ஆட்சி. உங்களது கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதுதான் எங்களின் முக்கிய பணி என்றெல்லாம் மனம் நெகிழ்ந்து பேசியது வரலாறு. இக்காட்சி சமீபத்தில் வெளிவந்த பெரியார் திரைப்படத்திலேயே இடம் பெற்றுள்ளது. தி.க. அரசியல் இயக்கமாக மாறாமல் தொடர்ந்து சமூக இயக்கமாக பணி புரிந்து வருகிறது. எனவே தந்தை பெரியாரின் கொள்கைகளை அரசியல் இயக்கமாக மாறி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் தி.மு.க.தான் சட்டமாக மாற்றக் கூடிய தகுதியைப் பெற்றுள்ளது.
தமிழக வரலாற்றில் இதுவரை ஆட்சி செய்து வந்த அனைத்து கட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரியாரின் கொள்கைகளை மறக்காமல் பெரியார் என்ற ஆளுமையில் பெருமிதம் கொண்டு தன்னை பெரியாரின் தொண்டனாக சொல்லிக் கொள்வதில் பெருமைப் படும் கலைஞர் மு. கருணாநிதியின் ஆட்சியே பெரியார் கொள்கைகளை ஓரளவு சட்டமாக்கி வருகிறது. மேலும், கலைஞர் கருணாநிதி தனது எழுத்துகளிலும் பேச்சுக்களிலும் மற்ற அரசியல் தலைவர்கள் அனைவரையும் விட தந்தை பெரியாரை நினைவு கூறுவது கவனிக்கத் தக்கது. பெரியாரின் படத்திற்கு நிதி உதவி அளித்ததும், பள்ளி மாணவர்கள் அவசியம் பெரியார் திரைப்படத்தை பார்க்க வேண்டுமென உத்தரவிட்டதும், கலைஞர் மு. கருணாநிதி பெரியார் மீது வைத்திருக்கும் மதிப்பை பிரதிபலிக்கின்றன. ஆலயம் தோறும் சென்று கும்பாபிஷேகம் நடத்தி, பரிசாக யானை வழங்கி, யாகங்கள் நடத்துகிற ஜெயலலிதாவைவிட கலைஞர் மு. கருணாநிதி பெரியார் மீது பற்றுள்ளவர் என்ற வகையில் நமக்கு நெருக்கமாகிறார். கலைஞர் மு. கருணாநிதியை உயர்த்திப் பிடிப்பது எனது நோக்கமல்ல. அதே சமயத்தில் உண்மை நிலைப்பாடு இதுதான்.. கலைஞர் மு. கருணாநிதியின் ஆட்சிதான் பெரியாரின் கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளது. நீங்கள் என்னிடம் கேட்ட இறுதியான கேள்விக்கும் இதுதான் பதில்.. எனவே, தி.மு.க.வுக்கும் தந்தை பெரியாருக்கும் என்ன தொடர்பு என்று கேட்பது சிறுபிள்ளைத்தனமானது.ஞானி போன்றவர்கள் தந்தை பெரியார் என்ற ஆளுமையை தேவை இல்லாமல் அறிஞர் அண்ணாவோடு ஒப்பிட்டு எழுதி ஒரு சர்ச்சையை உருவாக்கி அதன் மூலமாக ஊடகப் பரபரப்பை ஏற்படுத்த முயலுகின்றனர். இன்று என்னைப் போன்ற பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை பெற்றுள்ளோம் என்றால், எங்களுக்கு இந்த சமூகத்தில் ஒரு மதிப்பான இருக்கை கிடைக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் தந்தை பெரியார் என்ற தனி மனிதரும் அவர் ஆதிக்க சமூகத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்களும்தான்.
நாங்கள் இன்று எங்கள் மூதாதையர் அடைந்த இழிவுகளை அடையாமல் ஒரு உயர்நிலை வாழ்க்கை வாழ்ந்து, கணிப்பொறி பயின்று, இணையத்திலும் நெடுங்காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த உயர்சாதி வகுப்பின் கடுமையான நெருக்கடிகளையும் சமாளித்து, அதன் பிரதிநிதியான ஞானியை எதிர்த்து எழுதுகிறோம் என்றால் அது தந்தை பெரியாரின் இடை விடாத போராட்டங்களால் கிடைத்த எங்களுக்கான தகுதியும், உரிமையுமாகும்.தந்தை பெரியாரைப் பற்றி நாடகங்கள் நடத்தியதாலோ, ஆவணப்படங்கள் எடுத்ததாலோ தந்தை பெரியாரை இழிவு படுத்தும் உரிமை ஆரிய ஞானிக்கு கிடையாது. தந்தை பெரியார் என்ற ஆளூமையைப் பற்றி பேசும் போதும் எழுதும் போதும் ஞானி போன்றோருக்கு என்னைப் போன்ற லட்சக்கணக்கான சூத்திர இளைஞர்கள் இன்னும் தந்தை பெரியார் மீது மிகுந்த பற்றோடும், தங்கள் வாழ்க்கையை பெற்றுத் தந்த அந்த மாபெரும் தலைவனின் நினைவோடும், தலைமுறை தலைமுறையாக நன்றியோடும் இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு அவசியம் இருக்க வேண்டும்.போகிற போக்கில் எது வேண்டுமானாலும் எழுதலாம் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று ஓ பக்கங்களில் எழுதி வரும் ஆரிய ஞானிக்கு இனி மிகுந்த கவனம் தேவை. சூத்திரர்கள் கல்வி கற்க ஆரம்பித்துவிட்டார்கள்.நண்பர் செங்கொடி மீது வைத்திருக்கிற மதிப்பு மகிழ்வளிக்கிறது. நீங்கள் மேலும் ஆரிய திராவிட பிரச்சினைகள் குறித்து அதிகம் அறிந்து கொள்ள வேண்டுமானால் பேராசிரியர்கள் முனைவர் க.நெடுஞ்செழியன், முனைவர் இரா.சக்குபாய் எழுதியுள்ள 'சமூக நீதி' என்ற ஆய்வு நூலை அவசியம் படிக்கவும். (வெளியீடு: மனிதம் பதிப்பகம், 54,இராசாராம் சாலை, திருச்சி, 620 02. விலை: ரூ.90/-)

கோபாலன் என்பவரது எதிர்வினை

//வீரமணி பெரியாரின் பெண் வடிவாக ஜெயலலிதாவை பார்ப்பாதாக சொன்னார் என்ற தவறான தகவலை பரப்ப முயற்சிக்க வேண்டாம்//Well,Veeramani did call JJ as Periyarin Pen uruvam and Samooka Neethi Kaatha Veeranganai..This was during Indira sakani case...when she(JJ) initiated a step to keep reservation outside the purview of the court of law( 9th artcile ).
குழு அமைப்பாளர் கார்த்திக் என்பவரின் எதிர்வினை
Dear Mr. Senthil,This is a community particularly deals regarding the writings of the Mr Gnani. Even though you brought an unwanted issue, which is far beyond the thinking of today’s youngsters. I would like to add my view in this regard (rather my feeling)Mr Gnani is a political critic, whose work is to write the good and bad things in the social structure around him. As Mr. Ilaya mentioned Mr. Gnani’s pen can point the bad things in Ms. Jayalalitha’s action (if something happens on her ruling time)I am reading Gnani’s writing for a past 3 years and I have never smiled any kinds of Aryan thoughts!!! I was quite surprised and shocked by seeing your writing on the forum. As Gnani rightly pointed out in his earlier writing none of the dravidan parties of today nor follows the codes of Periyar neither Anna’s philosophy. (Refer Gnani’s guest article in recent India today too) Gnani supported Anna because Anna changed the shape and structure of the dravida kazhagam in order to reach people in a better way than the earlier one. Anna brought out a party which would able to do so many better things within those two years, when Anna was a chief minister. We all know what happen to DMK after the death of Anna??? So Gnani’s writing points our about the political changes in Tamil Nadu and never a comparison.I would request you to maintain some kind of politeness even when you criticize somebody!!! I could able to see lot of frustration and intimidation from your writings, which is not required in this circumstance.Sarcastic in not good for a proper discussions!!!::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::NB: Thanks to Mr Ilaya for answering all Mr Senthil’s queries. Sorry currently I donot have any addins to write in Tamil, so I am doing it in English.::::::::::::Karthick


மணி. செந்திலின் பதில்

அன்புள்ள கார்த்திக், உங்களுடைய எதிர்வினை எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. நீங்கள் சொல்ல வருவது என்ன?

ஆரிய சூத்திர வேறுபாடுகள் மறைந்து விட்டது என்று கூறுகிறீர்களா?
அவ்வாறு இருப்பினும் இளைய தலைமுறைக்கு இது குறித்து கவலையோ, அக்கறையோ இல்லை என்கிறீர்களா?
ஞானி விகடன் இதழில் தந்தை பெரியாரைப் பற்றி அறிஞர் அண்ணாவோடு ஒப்பிட்டு எழுதவே இல்லை என்கிறீர்களா?
ஞானி எதை எழுதினாலும் பாராட்டுவதற்காகத்தான் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதா ? – குழு அமைப்பாளர் என்ற முறையில் நீங்கள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
ஞானி விகடனில் தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் உள்நோக்கத்தோடு தவறாக ஒப்பிட்டு தந்தை பெரியாரை வேண்டுமென்றே தாக்கியதால்தான் இந்த சர்ச்சையை நான் எழுப்ப நேர்ந்தது. நான் எழுப்பிய நியாயமான கேள்விகள் எதற்கும் உங்கள் எதிர்வினையில் பதில் இல்லை. ஞானி குறித்து நான் முன் வைத்திருக்கிற விமர்சனம் இன்று பெரும்பாலான வாசகர்களின் கருத்தை பிரதிபலித்து எழுந்ததாகும். மீண்டும் மீண்டும் ஞானியும், தாங்களும் தந்தை பெரியாரை நாசூக்காக ஓரம் கட்டிவிட்டு அறிஞர் அண்ணாவை திடீரென்று உயர்த்திப் பிடிப்பதன் நோக்கம்தான் இந்த சர்ச்சைக்கு அடிப்படை. அறிஞர் அண்ணா தந்தை பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டு அவரது கொள்கைகளின் அடிப்படையிலேயே தி.மு.க.வை துவக்கினார் என்பது வரலாறு. இதை கடந்த எனது பத்திகளிலேயே மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். ஆனால், உங்களது எதிர்வினையில் ஞானியை நியாயப்படுத்தவும் அவர் எழுதியதை உறுதிப் படுத்தவும்தான் முயன்றுள்ளீர்களே தவிர என் கேள்விகளுக்கு இதுவரை உங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
தங்கள் எதிர்வினையில் கூட தந்தை பெரியாரைப் பற்றி பேசாமல் புறக்கணித்துள்ளீர்கள். ஞானி அவ்வாறு எழுதியது சரியா தவறா என்று கூறாமல் தன் ஆதர்ச எழுத்தாளரை கறை விழாமல் கரை சேர்க்க வேண்டும் என்ற தங்களின் ஆவல் பக்குவம் இல்லாதது. மேலும், இந்த தலைமுறை இளைஞர்களின் சிந்தனைக்கு மாறாக நான் எழுதியுள்ளதாக நீங்களும், உங்களைப் போலவே நண்பர் இளையாவும் கருதுகிறீர்கள். இந்த தலைமுறை இளைஞர்களுக்கு தந்தை பெரியார், சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, ஹியூகோ சாவேஸ், போன்ற முற்போக்கு ஆளுமைகள் குறித்து உள்ள மதிப்பும், விழிப்புணர்வும் இணைய தளங்களிலும், இணைய தள குழுக்களிலும் நடக்கிற விவாதங்களில் பரவலாக காணமுடிகிறது. என்னால் அப்படி சமூக உணர்வுள்ள, நேர்மையான, போர்க்குணம் மிக்க ஏராளமான இளைஞர்களை அடையாளம் காட்ட முடியும். எனவே இந்த தலைமுறை இளைஞர்களின் சிந்தனை, சமூக உணர்வு, மற்றும் அரசியல் பொருளாதார வரலாறு குறித்தான தெளிவான நிலைப்பாடு பற்றி தவறான தகவல்களை பரப்ப முயற்சிக்க வேண்டாம்.
நான் உணர்ச்சிவசப்பட்டு, படபடப்போடு எழுதுவதாக தாங்கள் தெரிவிக்கிறீர்கள். ஆனால், எனது நியாயமான கோபத்திற்கு பின்னால் ஒளிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகளை உணர மறுக்கிறீர்கள். ஒரு எழுத்தாளனின் வாசகன் அந்த எழுத்தாளனின் கருத்துக்களை ஆதரித்தே தீர வேண்டும் என்ற ஒரு மோசமான கருதுகோளை நீங்கள் கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அந்தளவிற்கு இந்த பிரபஞ்சம் காணாத உங்கள் எழுத்தாளர் எந்த வகையில் உயர்ந்தவர் என நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
கடந்த மூன்று வருடங்களாக ஞானியின் எழுத்துகளை வாசித்து வருவதாக சொல்கிறீர்கள்..! இன்னும் நீங்கள் ஞானியின் அசல் பிம்பத்தை உணராமல் இருப்பது உண்மையில் எனக்கு ஆச்சர்யமளிக்கிறது.
ஒரு விமர்சனத்தை நேர்மையாக எதிர்கொண்டு, அந்த விமர்சனம் எழுப்பும் பல்வேறு விதமான பரிமாண பொருண்மைகளை தெளிவாகப் புரிந்து கொண்டு அதற்கு ஆதாரமான விஷயங்களோடு, மனமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு அணுகி பதிலளிப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் விமர்சனம் எழுப்புபவனைக் நோக்கி அறிவுரை கூறுவதிலிருந்தே யார் உணர்ச்சிவசப் பட்டு, படபடப்பாய் இருக்கிறார்கள் என்பதை எளிதாக விளங்கிக்கொள்ள முடியும்.
பாக்கியராஜ் என்பவரின் எதிர்வினை
மணி செந்தில் கூறுவது சரியே...மணி செந்தில் கூறுவது சரியே
பிரபாகரன் என்பவரின் எதிர்வினை
ஞாநியையும் இப்படித்தான் எடைபோட வேண்டுமோ?ஒருமுறை தேர்தலில் இரண்டு பார்ப்பனர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள். ஓருவன் லௌகீகப் பார்ப்பனன் (unorthodox brahmin). அதாவது மார்டனாக திரிபவன், அனைவருடனும் சகஜமாக பழகுபவன், கறி தின்பவன், சாராயம் குடிப்பவன்.இன்னொருத்தன் வைதீகப் பார்ப்பனன் (orthodox brahmin). குடுமி வைத்துக்கொண்டு ரொம்ப ஆச்சாரமாக திரிகிற ச்ச்சுத்தப் பார்ப்பனன்.இந்த இருவரில் யாரை ஆதரிக்கிறீர்கள் என்று பெரியாரிடம் கேட்டிருக்கிறார்கள்.அதற்கு அவர் அந்த வைதீகப் பார்ப்பனனை ஆதரிப்பதாக சொல்லியிருக்கிறார்.காரணம் அந்த வைதீகப் பார்ப்பனனிடம் உள்ள ஆயுதம் என்னவென்று நமக்கு தெரியும். ஆனால் லௌகீகப் பார்ப்பனன் என்ன திட்டத்தோடு திரிகிறான் என்று நமக்கு தெரியாது, என்றார் பெரியார்.ஞாநியையும் இப்படித்தான் எடைபோட வேண்டுமோ?

ஸ்டாலின் என்பவரின் எதிர்வினை

Gnani sirI hope this is ur time......

ஞானியின் எதிர் வினை

I am very sad about what is going on here. i have been a staunch follower of periyar's principles in my own personal life and it is absoloutely wrong to say that i have defamed periyar by comparing him to anna. my comparison in vikatan article between periyar and anna was limited to certain specific areas and that does not fame or defame any of them.there is now a regular effort in internet by blind supporters of Thiru kaligner karunanidhi to attack meas aryan and motivated. since they are unable to defend karunanidhi's acts of violence, corruption and misrule, they resort to such diversioanry tactics. while addressing several meetings organised by periyar dravidar kazhagam and murpokku ezuthalar sangham during the arrest of jayendrar ( sankaracharya of kanchi mutt), i have made it very clear that i find no difference bewteen jayendra and chandrasekharar, between advani and vajpayee and between jayalaitha and karunanidhi. all of them hold to similar antipeople ideologies. but it is easy to expose jayalalitha, jayendrar and advani but very difficult to expose vajpayee, karunanidhi and chandrasekhara as these three have powerful masks of accepatability and decency. i have said this on several public platforms.
since i have been doing the difficult task of exposing them, i have to face such unjustified attacks. i am personally not worried about this. anyone who is familiar with my writings, theatre and television work in the last thirty years, will know that i have been staunchly supporting and defending issues of social jsutice, reservations, periyar's ideology etc. and anyone who has ever met me and spent time with me will know how i live an open life adhering to these principles.
i am only sad that those who have benefitted from periyar's uncompromising work have been brainwashed and used by people like karunanidhi and jayalalitha. I invite mani senthil to spend some time with me so that we understand each other better. To dub anyone as brahmin in behaviour simply by birth, is also brahminism.

கோபாலன் என்பவரது எதிர்வினை

ஓ!!! ஞானி பிறப்பால் பார்ப்பனராக இருக்கும் காரணத்தால் பெரியாரையும்,அண்ணாவையும் ஒப்பிட்டோ அல்லது விமர்சித்தோ கட்டுரை எழுதக்கூடாது?அப்படி எழுதினால் அவர் ஆரிய ஞானி ஆகிவிடுவார்.. சரி இதைப் பேசி உபயோகம் இல்லை... ஆரியப் பார்ப்பான் பிறக்கும் போதே சில திராவிட பார்ப்பானுக்குக் கெட்டவன் ஆகிவிடுகிறான்..இவங்களை ஒன்னும் பண்ண முடியாது..1955ல் காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட டாக்டர் .சீனிவாசன் என்ற லெளகீகப் பார்ப்பானை எதுக்கு பெரியார் ஆதரித்தார்? அப்போது திராவிடக் குலக் கொழுந்து அண்ணாவை எப்படியெல்லாம் திட்டினார்னு இங்க பதிய விரும்பவில்லை. நீங்களே படிச்சுப்பாருங்க.. எந்தவொரு மனிதனையும் புனிதபிம்ப முலாம் கொண்டு பார்க்காதீர்கள்..எல்லாவற்றையும் விமர்சனதிற்கு உட்படுத்துங்கள்..பெரியார் இதைத்தான் சொன்னார்..இங்க என்னடான்னா..பெரியாரையும்,அண்ணாவையும் ஒப்பிட்டு சின்டு முடியறாங்க..சிக்கு எடுக்கறாங்கனு.. என்னய்யா இது? கொஞ்ச நாள் போன பெரியாருக்கு பூஜை எல்லாம் பண்ண ஆரம்பிசுடுவீங்க போல இருக்கே..ஏற்கனவே புத்தனையும்,மகாவீரரையும் சாமி ஆக்கியாச்சு..பெரியாரையாவது தயவு செய்து விட்டுடுங்க..
Konvicted....என்பவரின் எதிர் வினை
wat do u want mani senthil all the brahmins to die straigt away? gnani is a remarkable feminist and political critic. see the way he has answered u.....we all know the criminal deeds of jj. its difficult to spot kk out. thats what gnani sir is doing. aryan,dravian are out dated concepts. speak sum thing based on humanity. u better see the drama and writings of gnani in which is intense passion towards perriyarism is crystal clear


குழு அமைப்பாளர் கார்த்திக் என்பவரின் எதிர்வினை

keep out the caste and promote humanityDear all,Let us keep the castism apart from our life and thoughts. As per my understanding Mr.Gnani's writing always attacks those think/do wrong things. For him President is also same and the next door neighboor is also same. He had never ever showed any partiality among people.We all know Periyar done to enormous contribution to built todays social structure.Do not come to some conclusions by reading the recent writings of Gnani. Please refer to his old articles!!! As of today Gnani is doing a wonderful job for bringing social awareness with youth starting from respecting females, Act "48O", pointing out good and bad with todays politicians. (see indha vara kottu and poo chendu in all O pakkangal)As Gnani mentioned Mr Senthil can be in touch with Gnani to get clarified. Disclaimer : I am not supporting Gnani as a owner of this community. THIS IS MY PERSONAL UNDERSTANDING OF GNANIPlease put your original names while involved with discussion (if possible!!)

மணி. செந்திலின் பதில்

“மரங்கள் ஓய்வை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை”
என்ற மேற்கோளை கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆம்! இது தொடரும் இந்த சர்ச்சைக்கு மிக நேரடியாகப் பொருந்தும் ஒன்றுதான்..
இந்த சர்ச்சை எதனால் எழுந்தது? யாரால் உருவாக்கப்பட்டது?
ஞானி, ஆனந்த விகடனில் தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளாகவோ அல்லது சில முடிவுகளின் அடிப்படையிலோதான் ஒப்பிட்டேன் என்று தன்னுடைய எதிர்வினையில் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தந்தை பெரியாரைக்காட்டிலும் மேலானவராக(?) ஞானிக்குத் தெரியும் அறிஞர் அண்ணாவின் பேச்சு, உரைநடை மற்றும் எழுத்துக்களில் பொங்கி ஆர்ப்பரித்து எழுந்து வந்த உணர்வுகள் அனைத்தும் தந்தை பெரியார் கொள்கைகளின் மற்றொரு பரிமாணம் என்பதை ஞானி ஒத்துக்கொள்கிறாரா?
கலைஞர் கருணாநிதியையோ இன்றைய தி.மு.க.வையோ உயர்த்திப் பிடிப்பது என் நோக்கமல்ல என்பதை மிகத் தெளிவாக எனது கடந்த பத்திகளை வாசிக்கும்போதே தெரிந்து கொள்ளலாம். ஆனால், திராவிட இயக்கங்களான தி.க. மற்றும் தி.மு.க.வின் பணிகளால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடையே கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை அதனால் பாதிக்கப்பட்டுள்ள ஞானியை உள்ளடக்கிய பிராமணர் சமூகத்தைப் போல என்னாலும் இடது கையால் ஒதுக்கிவிட முடியாது. உண்மையை குறிப்பிட்டுக்காட்டி நேரடியாக எழுதினால் ஞானி என்னை கலைஞர் கருணாநிதியின் குருட்டு ஆதரவாளர் என்று குதர்க்கம் பேசுகிறார். தந்தை பெரியார் என்ற ஆளுமையை வைத்துக்கொண்டு முற்போக்கு சிந்தனையாளர் என்ற போர்வையில் சட்ட மன்றத்தில் தன்னை “பாப்பாத்தி” என்று பெருமை பொங்க அழைத்துக் கொண்ட ஜெயலலிதாவை மறைமுகமாக ஆதரிப்பதை விட நேரடியான எனது நிலைப்பாடு ஆயிரம் மடங்கு நியாயமானது. எனக்கு கலைஞர் கருணாநிதி தந்தை பெரியார் என்ற ஆளுமையை போற்றுவதால்தான் எனக்கு நெருக்கமாகத் தோன்றுகிறார் என்று கடந்த பத்தியிலேயே விடையளித்திருக்கிறேன். ஞானிக்கோ ஜெயலலிதாவின் தொலைக்காட்சியில் தோன்றுவதற்கான சாத்தியங்களை கலைஞர் கருணாநிதியை முரட்டுத்தனமாக தாக்குவதன் மூலம் அதிகப் படுத்திக்கொள்ள முடியும் என்ற எண்ணம் இருக்கலாம். அனைத்து பார்ப்பணர்களையும் ஞானியைப் போல் என்னால் எடை போட முடியாது என நான் ஒத்துக் கொள்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உண்மையாக சமூக உணர்வோடு பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவர்களில் சிறிதும் ஆரிய உணர்வு இல்லாத சாதி, மதம், போன்ற போலி அடையாளங்களைத் துறந்த, தோழர்களில் பார்ப்பணர்களும் உ ண்டு. இந்த பட்டியலில் தந்தை பெரியார் குறித்து விஷமமாக எழுதும் ஞானியை எவ்வாறு சேர்க்க முடியும்.?
பிறப்பால் மட்டுமே தன்னை பிராமணன் என அறிவித்துக் கொண்டு எழுதும் ஞானியின் நோக்கம் என்னவென்று தந்தை பெரியார் வழி நடக்கும் அனைவரும் அறிவர். இதில் பார்ப்பணீயப் பார்வை என்னிடம் இருப்பதாக கூறும் ஞானியைக் கண்டு ஆச்சர்யப் படுகிறேன். ஒரு சூத்திரனுக்கு பார்ப்பணீய பார்வை வந்துவிட்டது என சொல்வதன் மூலம் ஒரு பிராமணனுக்கு சூத்திரப்பார்வை வந்து விடுமா என்ன! தந்தை பெரியாரின் மிதமான இளமை வாழ்க்கையை பெருமளவு எழுதிவிட்டு அவரது வலிமையான போராட்டங்கள் குறித்து எழுதும்போது தனது சாத்வீக(?) எழுதுகோலால் பெரியார் தன் வாழ்நாளில் அதிகம் உபயோகித்த வார்த்தையான “பார்ப்பான்” என்ற சொல் ஞானியின் தொலைக்காட்சி வடிவமான ‘அய்யா’வின் திரைக்கதை வசனத்தில் (ஞானபாநு வெளியீடு, விலை: ரூ.20/-) எத்தனை முறை இடம் பெற்றுள்ளது என்பதை தேடித்தான் பார்க்க வேண்டியுள்ளது. இதே தவறு ஞான ராஜசேகரனின் ‘பெரியார்’ படத்திலும் நிகழ்ந்திருப்பது கவனிக்கத் தக்கது.
சந்திர சேகரன், சங்கராச்சாரி, அத்வானி, வாஜ்பாய், ஜெயலலிதா, ஞானி, இந்தப் பட்டியலில் கலைஞர் கருணாநிதியை எந்த வகையில் ஞானி சேர்க்க முயல்கிறார்?
சங்கராச்சாரியை கைது செய்ததால் மட்டுமே ஜெயலலிதாவை பெரியாரின் வாரிசாகப் பார்க்க முடியுமா? பிரேமானந்தா, டாக்டர் பிரகாஷ்,போன்றோரின் கைது நடவடிக்கைகள் போல சங்கராச்சாரி கைது நடவடிக்கையும் ஊடகப் பரபரப்பை ஏற்படுத்தியதற்கு அனுராதா ரமணன், சொர்ணமால்யா போன்றோர் இணைத்து பேசப்பட்டு விசாரிக்கப் பட்டதுதான் காரணமே தவிர அந்த சம்பவத்திற்கு வரலாறு காணாத முக்கியத்துவம் ஏதும் இல்லை.
ஜெயலலிதா ராமருக்கு இந்தியாவில் கோயில் கட்டாமல் வேறெங்கு கட்டுவது என கேள்வி கேட்டும், கர சேவையை ஊக்கப்படுத்தியும் தனது இந்துத்துவா மனப்பாங்கை முழுமையாக வெளிக் காட்டியவர். ஆனால், கலைஞர் கருணாநிதியை ஜெயலலிதாவுடன் ஒரே அளவுகோலால் மதிப்பிடடுவதன் மூலம் ஞானியின் அனைத்து சாமர்த்தியங்களும் அப்பட்டமாய் வெளியாகி வருகின்றன.
ஞானி மீது நான் தொடுத்திருக்கிற விமர்சனங்கள் நேர்மையற்ற தாக்குதல் என மறுத்திருக்கிறார். என் விமர்சங்களில் வரலாற்றுப் பிழையோ அல்லது உண்மை நிலைப்பாட்டுப் பிழையோ இருந்திருந்தால் ஞானி அதை குறிப்பாக மறுத்திருப்பார். ஆனால் ஞானி, திராவிட இயக்கங்களை ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவோடு இணைத்து விமர்சிப்பதால் இரண்டு காரணிகள் நமக்குப் எளிதில் புலனாகி விடுகின்றன.

ஜெயலலிதா என்ற ஆரிய பெண்மணி இந்துத்துவா கொள்கைகளோடு நடத்திக் கொண்டிருக்கிற கட்சியை திராவிட இயக்கங்களில் ஒன்றாக கருத வைப்பது.
ஜெயலலிதாவை கலைஞர் கருணாநிதியோடு இணைத்து விமர்சிக்கும்போது மேற்படி இருவரையும் ஒரே சமயத்தில் அறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் போன்ற முற்போக்கு ஆளூமைகளுக்கு எதிரானவர்களாக சித்தரிப்பது (ஜெயலலிதாவை மட்டும் தனியே விமர்சிக்க ஜெயா டி.வி. தடையாக உள்ளது).
சமூக நீதி, இட ஒதுக்கீடு, தந்தை பெரியாரின் கருத்துக்கள் ஆகியவற்றை பல்வேறு தளங்களில் ஆதரித்து முப்பது ஆண்டுகளாக எழுதி வந்ததாக கூறும் ஞானிக்கு கோயில், குடமுழுக்கு, யாகம், சோதிடர்கள், கர சேவை ஆதரவு, மகா மகக் குளியல் போன்ற அனைத்து மூட நம்பிக்கைகளையும், இந்துத்துவாவையும் ஆதரித்து மனுதர்மத்தை மீட்டெடுக்க போராடும் போராளி ஜெயலலிதாவையும், அனைவரும் அர்ச்சகராகலாம் என கருவறைக்குள் சூத்திரனை நுழைய வைக்க முயலும் சூத்திரதாரி கலைஞர் கருணாநிதியையும் எவ்வாறு ஒரே நேர்க்கோட்டில் வைத்து விமர்சிக்க முடிகிறது.?
பெரியார் கொள்கைகள் பற்றி ஊடகத்தில் எழுதி பரபரப்பை சம்பாதித்துக் கொள்வதென்பது வேறு. பெரியார் கொள்கைகளோடு உள்மன நேர்மையோடு வாழ்வதென்பது வேறு. ஞானியிடம் இத்தகைய உள்நோக்கமில்லாத நியாயம் இருக்கிறதா என்பது விவாதத்துக்குரியது. என்னிடம் நேரடியாக ஞானி தொடர்பு கொள்ள தயார் எனச் சொல்லியிருக்கிறார். நன்றி! ஆனால், தனிப்பட்ட மணி. செந்திலுக்கும் ஞானிக்கும் ஒரு நான்கு சுவர்களுக்குள்ளோ, தொலைபேசி, அலைபேசி அழைப்புகளிலோ நடக்கும் விவாத விளக்கங்கள் உண்மையை விரும்புபவர்களின் காதுகளைச் சென்றடைய வாய்ப்பில்லை. எனவே இணைய தள வாசகர்களின் சிந்தனை செயல்பாடுகளுக்கு மத்தியில், ஒரு பொதுவான தளத்தில் விவாதம் நடப்பதே சிறப்பானது. ஞானி, தந்தை பெரியார் மீது தொடர்ந்த உள்நோக்கம் மிக்க தாக்குதலை விட, என்னுடைய நேர்மையான, வரலாற்று அரசியல் கேள்விகளை உள்ளடக்கிய வெகு நாகரீகமான விமர்சனம் நியாயமானதே..
ஞானி, என்னைப் போன்ற பெரியார் கொள்கைகளால் பயனடைந்தவர்களை கலைஞர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் (நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல ஒரே அளவுகோலால் இருவரையும் மதிப்பிடுகிற சூட்சும முறை) மூளைச் சலவை செய்து வருவதாக கூறுகிறார். ஞானியின் மூளைச் சலவைக்கே மயங்காதவர்கள் நாங்கள்…
நண்பர் கோபாலன், திராவிடப் பார்ப்பான் என்ற புது சொல்லாட்சியை கண்டுபிடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள்! பெரியார் ஒரு லௌகீகப் பார்ப்பானை ஆதரித்ததற்கும் ஒரு காரணமுண்டு. நான் இப்போது ஞானியை எதிர்ப்பதற்கும் ஒரு காரணமுண்டு. என்ன காரணம் என்பதை பெரியார் பற்றி நாடகம் தயாரித்த ஞானியிடம் நண்பர் கோபாலன் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அறிஞர் அண்ணா, சமூக இயக்கமான தி.க.விலிருந்து வெளியேறி சில சமரசங்களோடு தி.மு.க. என்ற அரசியல் கட்சியை துவக்கினார். கொள்கை சமரசங்களூக்குத் தன் வாழ்நாளில் எப்போதும் இடமளிக்காத தந்தை பெரியார் அன்றும் இன்றும் என்றும் மாபெரும் தனித்துவ ஆளூமையாய் திகழ்வது வரலாற்று உண்மை. அறிஞர் அண்ணாவை தந்தை பெரியார் விமர்சித்ததற்கும் தந்தை பெரியாரை ஞானி விமர்சித்ததற்கும் உள்ள வேறுபாடுகளை நண்பர் கோபாலன் எவ்வாறு உணர்ந்து கொள்ளாமல் போனார் என்பது வியப்பானது.
நண்பர் கோபாலன் சொல்வது போல சிக்கெடுக்க வேண்டிய அல்லது சிண்டு முடிய வேண்டிய வேலை எங்களது இல்லை. பௌத்த விகாரைகள், சமண மடங்கள் போன்றவற்றை அழித்தொழித்து பௌத்தர்கள், சமணர்களைக் கழுவேற்றி கொன்றது யார் என நண்பருக்குத் தெரிந்திருக்குமோ தெரியவில்லை. தெரியாதெனில் அ.மார்க்ஸின் ‘புத்தம் சரணம்’ (வெளியீடு: கருப்பு பிரதிகள், விலை: ரூ. 50/-) என்ற நூலையும் அண்ணல் அம்பேத்காரின் பல்வேறு கட்டுரைகளை உள்ளடக்கிய ‘அம்பேத்காரின் சிந்தனைக் களஞ்சியம்’ என்ற நூலையும் வாசித்து உணர்ந்து கொள்ளவும்.
வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் நெற்றியில் விபூதியிட்டு ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தை அவர் மீது திணித்த நபர்கள் நாங்களில்லை. ஏற்கனவே கடவுள் என்ற கருத்தாக்கத்தை அடித்து உடைத்த தந்தை பெரியாரையே கடவுளாக்கி பெரியாரை இழிவு செய்ய மாட்டோம். தந்தை பெரியார் எங்கள் இனத்தின் முன்னோடி. அவர் எங்கள் வாழ்க்கைத் தத்துவம். எங்கள் வாழ்க்கைத் தத்துவமான தந்தை பெரியார் என்ற ஆளுமை ஏற்கனவே புனிதம் நிறைந்த ஒரு நிறைகுடம்தான். எனவே முலாம் பூச வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.
எதிர் வினையாற்றியிருக்கிற மற்றொரு நண்பர் ஆரியர்களை சாகச் சொல்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பிவிட்டு ஞானியின் புகழ் பாடியிருக்கிறார். இதே வினாவை பல தலைமுறைகளுக்கு முன்னால் அடிமைப்பட்டுக் கிடந்த சூத்திரர்கள் ஆரியர்களிடம் அச்சமின்றிக் கேட்டிருந்தார்களேயானால் இன்று தந்தை பெரியார் மூலம் எங்களுக்கு கிடைத்திருக்கும் கல்வி, பொருளாதார, சமூக மதிப்பு போன்ற அடிப்படை மனித உரிமைகள் அன்றே கிடைத்திருக்கும். ஒரு சூத்திர மணி. செந்தில் தந்தை பெரியாரைப் பற்றி ஏன் தவறாக எழுதுகிறீர்கள் என்று கேட்டால் எங்களைச் சாக சொல்கிறீர்களா எனக் கேட்பது விந்தையானது.. எங்கள் கேள்விக்கான பதில் ஆரியர்களின் மரணமல்ல… காலங்காலமாக பிறப்பைச் சொல்லி எங்களுக்கு கல்வி, சுகாதாரம், சமூக அந்தஸ்து உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளை மறுத்து எங்களை கீழ் நிலையில் வைத்திருந்த, தற்போதும் தங்களது உள்ளுணர்வின் மூலம் கீழ் நிலையில் வைத்திருக்கிற முயற்சிக்கின்ற ஆரியர்களின் மனப் போக்கில் ஏற்படும் மாற்றம் மட்டும்தான்.
குழு அமைப்பாளர் கார்த்திக் மீண்டும் பழைய பல்லவியையே பாடியிருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் முதல் ஜனாதிபதி வரை ஞானிக்கு அனைவரும் ஒன்றுதான் என்கிறார். மேலும், ஞானியின் சமீபத்திய கட்டுரைகளைப் படித்துவிட்டு முடிவுக்கு வர வேண்டாம் என்றும் பழங்கால கட்டுரைகளை தேடிக் கண்டுபிடித்து ஞானி புகழ் பாட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்படியென்றால் சமீபத்திய கட்டுரைகளில் ஞானி எழுதுவதெல்லாம் தவறுதான் என்று ஒத்துக் கொள்கிறீர்களா…?
நண்பர் கார்த்திக் அவர்களே.. ஞானியை தாங்கள் நியாயப்படுத்த முயற்சிக்கும் போது வழக்கமாக தாங்கள் சொல்லும் ஞானி பற்றிய துதிபாடலை நீக்கிவிட்டு விவாதத்தில் இடம் பெறுகிற நியாயமான கேள்விகளுக்கு மட்டும் விளக்கமளித்தால் சிறப்பாக இருக்கும். தங்களது ஞானி குறித்தான தனிப்பட்ட புரிதல் என்பது தங்களை மட்டும் சார்ந்தது. அது எங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நேர்மையான விவாதத்தை நோக்கி இட்டுச் செல்லக் கூடியதல்ல...

“அவர்கள் நினைத்தது போல் இல்லாமல் நீ வாழ்ந்து கொண்டுதானிருக்கிறாய்” (தோழர் சேகுவேரா புதைக்கப்பட்ட இடத்தினருகில், வாலேகிராண்டேவின் ஒரு அஞ்சல் அலுவலக சுவரில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது.)

பெரியாரும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார். ‘அவர்கள்’ நினைத்தது போலில்லாமல்.

இதற்கு இளையா என்பவரின் எதிர்வினை

Sari Nanbha nee pudicha Muayalukku moonu kaalae vechippoamIndru Periyar'in karthukkalai ittuchella thagudhi udayavar(Velichathukku vandha) yaar endru neengalae sollungal.Dhayavu seidhu Veeramani, Karunanidhi endru koori nagayaakkaadheergal.Neengal Koorum Karunanidhi, periyar'ai edhirppavargalai edhirppadhaal avarudaya veettu sondhangalukku kadugalavenum nanmai payakkumenin edhirppaar.Adhae samayam Periyar'ai aadharikkum, communisa kolgai udayavargalai udhaaseena padhuthuvadhaal laabam kolvaaraeaanaal nammai moorgamaaga edhirkkavum thayanga maatttaarVeeramani'ai patri pesi naan periyaarin iyakkamaana Dhraavida Kazhagathai kochai padutha virumbhavillai

சந்திரசேகர் என்பவரின் எதிர்வினை

Ungaluku Gnani meedhu kobama, illai Karunanidhi adhigam tahavru izhaikirar, jayalalitha summa irukirara, endra kobama? Ungal Periyaruku munne anaivarum ondre endra vadhathai eduthu vaithavar BHARATHIYAR, ungal bashayal avr oru parpanar. Adharkum munbe adhai seidhavar RANMANUJAR avarum oru parpanar. Chari ARYAN theory abdra ondre illai adhu aangileyargal madhathai parapuvadharkaga katti vita kadhai enbadhu theriyuma? Irandavadhu mel jaadhi engirirgal. Kothadimayaga makalai vaithirupavar brahmanargala

மணி. செந்திலின் பதில்

நண்பர் கோபாலன் அவர்களே!
டாக்டர். சீனிவாசனை அன்று தந்தை பெரியார் ஏன் ஆதரித்தார்
என்றால் சூத்திரரான கர்ம வீரர் காமராஜ் அவர்களை முதல்வர்
ஆக்கத்தான்.
தந்தை பெரியார் ஒரு பார்ப்பானை ஆதரித்தாலும் கூட அதற்கு
பின்னால் ஒரு சூத்திரனனின் நலம் இருக்கும்.

நண்பர் இளையா அவர்களே!
நான் பிடித்த முயலுக்கு முணு கால் மட்டும் இல்லை.
ஆக்டோபஸ் போல பல கைகளும் உண்டு. ஒவ்வொரு கரமும்
ஒவ்வொன்று செய்யும்..ஒரு கரம் பகுத்தறிவு பேசும். ஒரு கரம்
பெரியாரை சீண்டி பார்க்கும்.. ஒரு கரம் கலைஞரை திட்டும்..
ஒரு கரம் ஜெ.ஜெ வை மெலிதாக தட்டும்.(செல்லமாக)…
பெரியாரின் கருத்துகளை எடுத்து செல்ல யாரும் தேவை
இல்லை. அதுவே விரிந்து பரவும் தன்மை உடையது.
கலைஞர், வீரமணி போன்ற தலைவர்கள் பெரியார் என்ற
ஆளுமையை கண்ணால் கண்டு ,பழகி, விரும்பி,ரசித்து,
அவரை பின் தொடர்ந்து வருவதில் பெருமிதம் கொள்கிறார்கள்.
ஜெயலலிதா போல் இல்லாமல்…..

நண்பர் சந்திரசேகரன் அவர்களே!
பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்று பாடிய
பாரதி தன் வாழ் நாளில் பட்ட பாட்டை நீங்கள் கேள்வி
பட்டதில்லையா?-அக்கரகாரத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு,
மகளின் திருமணத்திற்கு கூட இறுதியாக அழைக்கப்பட்டு
தன் வாழ்நாள் முழுக்க அவமானப்படுத்த பட்டு, உறவினர்கள்
என்று சொல்லிக்கொள்ள கூட ஆளில்லாமல் தனியே செத்த வரலாறு
நீங்கள் அறிய வில்லை போலும்…..
ராமானுஜர் பெற்ற எதிர்ப்புகளும் இவ்வகைதான்…..
ஜெ.ஜெ தவறு இழைக்காமல் சும்மா இருக்கிறார் என்று
சொல்லி உள்ளது ஆச்சர்யமளிக்கிறது…….டெல்லி பயணங்கள்…
அப்துல் கலாம்…..பிரதீபா பாட்டீல்…ஜோக்…..கொட நாடு
எஸ்டேட்….நான்கு வேட்பு மனுக்கள்……
நீங்கள் நாளிதழ்கள் படிப்பதில்லையா?.........

கண்ணன் என்பவரின் எதிர்வினை

-------கலைஞர், வீரமணி போன்ற தலைவர்கள் பெரியார் என்றஆளுமையை கண்ணால் கண்டு ,பழகி, விரும்பி,ரசித்து,அவரை பின் தொடர்ந்து வருவதில் பெருமிதம் கொள்கிறார்கள்.---------Mr Mani, are you sure about the above statement, Did you watch kalaigar's kannamma movie. In that there will be a scene, where the hero (who was believed to be dead) will open his eyes, at the same moment the heroine (meena) will be in the kitchen and she will hit herself in a vessel and kungumam will fall on her, colouring her head and saree. Is this not against periyar's kolgai.I have not read all the writings of periyar, but basically know that he is against these kinda superstitions.Sorry, If I'm wrong.

கோபாலன் என்பவரது எதிர்வினை

நண்பர் கோபாலன் அவர்களே!டாக்டர். சீனிவாசனை அன்று தந்தை பெரியார் ஏன் ஆதரித்தார்என்றால் சூத்திரரான கர்ம வீரர் காமராஜ் அவர்களை முதல்வர் ஆக்கத்தான்.தந்தை பெரியார் ஒரு பார்ப்பானை ஆதரித்தாலும் கூட அதற்குபின்னால் ஒரு சூத்திரனனின் நலம் இருக்கும்.உங்க லாஜிக்ல ரொம்பவே ஓட்டை இருக்குங்க நண்பர் மணி செந்தில்.. சூத்திரர் காமராஜரின் தலைவர்கள் காஷ்மீர் பிராமணர்களான அதாவது ஆரியர்களான நேருவும், இந்திராவும் அல்லவா? இதன் மூலம் பெரியார் மறைமுகமாக லெளகீக பார்ப்பானையும், பாப்பாத்தியையும் ஆதரித்தார் என்று எடுத்துக்கொள்ளலாமா? சரி, நீங்கள் திராவிடன், நல்லவர் என்று நம்பும் கருணாநிதி அவர்கள் என்ன செய்தார்? இந்துத்துவ சக்திகளை..பன்டாரங்கள்,பரதேசிகள் என்று சொல்லிவிட்டு அதிகாரத்திற்காக அவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்தானே? திராவிட உணர்வு தவறு என்று என்று சொல்லவில்லை..எல்லா பிரச்சனைகளுக்கும் திராவிட,ஆரியப் பார்வை தீர்வு ஆகாது என்பதுதான் என்கருத்து..மற்றபடி உங்களின் மொழியாளுமை நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்

குமார் என்பவரது எதிர்வினை

good evening everybody.vanakkam tholar mani and other friends.so happy to view this topic.i learn something about periyar kolgai,seguvera, etc from this topic.but i have some question in my mind, its not to ask you all!!!!!!!to think.is this topic want to criticise some one?what for ?is there any result come out from this?can you anyone change the life style of my beloved people in my country?dont say one day will happen?even jesus, allah, krishna all born and survived in this beautyful world , but they never make any difference to the poor people.untill today the rich get richer and the poor get poorer.do you agree this???because of this topic someone what to be a celeberity and then he will make money for his own life or for his families is it? (like what kalaigner do??)

பருத்திகுமார் என்பவரின் எதிர்வினை

but it is easy to expose jayalalitha, jayendrar and advani but very difficult to expose vajpayee, karunanidhi and chandrasekhara as these three have powerful masks of accepatability and decency. i have said this on several public platforms..To dub anyone as Brahmin in behavior simply by birth is also Brahmanism.thats true..

முரளி மனோகர் என்பவரின் எதிர் வினை

நண்பர்களே… தொடர்ந்து சில நாட்களாக இங்கே நடந்து கொண்டிருக்கிற விவாதத்தை நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு கட்டத்தில் விவாதம் அதற்குரிய களத்தை விட்டு எங்கோ நகர்ந்து செல்வதாகவே படுகிறது. பதிலுக்கு பதில், பதிலுக்கு பதில், என மருவி இறுதியில் பிரச்சினையை எழுப்பிய மணி. செந்தில் கூட அதை விட்டு வெளியே வேறு விஷயங்களுக்கு நகர்ந்து விட்டதாகத் தெரிகிறது. சர்ச்சைக்குள்ளான ‘ஓ’ (ஹோ...?) பக்கத்தை இந்த விவாதம் எழுந்த பிறகுத் தேடியெடுத்து வாசித்தேன்.
நண்பர் மணி. செந்திலுக்கு நான் சொல்ல விரும்புவது… ஞானியின் மீது தாங்கள் முன் வைத்த குற்றச்சாட்டு மிக நியாயமானது. நானும் அவரது எழுத்துகளை கவனித்து வருகிறேன். அவ்வப்போது தாங்கள் சொன்னது போல ஒரு ஊடகப் பரபரப்பை ஏற்படுத்துவதில் வல்லவர் ஞானி.
பெரியார் என்ற பிரம்மாண்ட ஆளுமையை மிகத் தந்திரமாகக் குலைக்க முயற்சித்திருக்கும் ஞானிக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்க வேண்டிய கடமை சூத்திரன் என்ற வகையில் எனக்கும் இருக்கிறது. நூற்றாண்டுகளாக அடிமைப் பட்டுக் கிடந்த வம்சங்களிலிருந்து இன்று நாங்கள் கிளர்ந்து எழுந்திருக்கிறோம் என்றால் அது தந்தை பெரியார் எங்களில் விதைத்த நெஞ்சுரம்.
ஞானி குறித்து நீங்கள் கிளப்பிய சர்ச்சையால் சமூகத்துக்கு என்ன பயன் என சிலர் எழுதுகிறார்கள். “நான் ஓட்டுப் போடறதால என்ன ஆயிடப் போவுது.. இல்ல நான் ஓட்டுப் போடலன்னாதான் என்ன ஆயிடப் போவுது! நான் சோத்துக் கட்சிங்க..” என்று அதிகமானோர் கேட்கும் சமூக அக்கறைக்கு இடமில்லாத அவலச் சூழலில், இது போன்ற கேள்விகள் எழுவதில் ஆச்சர்யப் பட ஒன்றுமே இல்லை.
பெரியார் பற்றி தவறாக ஒரு ஒப்பீடு ஞானியால் எழுதப்படும் போது, பெரியாரால் பயனடைந்தவர்கள் கொதித்தெழத்தான் செய்வார்கள். இதில் இயல்பு மீறல் எங்கே வந்தது? விவாதம் ஞானியை நோக்கி எழுப்பப் பட்டிருக்கிற வேளையில் புதிதாக விளக்கம் கேட்க விரும்புபவர்கள் ஞானியிடம் போக வேண்டியதுதானே..!
இது போன்ற சர்ச்சைகளை எதற்காக எழுப்ப வேண்டும் என்ற கேள்வியையும் சிலர் கேட்கிறார்கள். பெரியார் பற்றி வரலாற்றுக்கு புறம்பான வகையில் அவதூறு செய்யும் விஷமத்தனத்தை கண்டுகொள்ளாமல் விட்டோமானால் ஞானி போன்றோருக்கு துளிர் விட்டுவிடும். மேலும், இது போன்ற விஷமங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட பின்னெப்போதும் தயங்க மாட்டார். பெரியாரை அவதூறு செய்ய முயலும் விஷச் செடிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கட்டாயம் ஏதோ ஒரு தருணத்தில் தன்னை சூத்திரனாக உணர்கிற ஒவ்வொரு தமிழனின் கடமையாகவும் இருக்கிறது.
செந்தில் அவர்களே.. வலிமையான ஒரு விவாதத்தையும் கண்டனத்தையும் எழுப்பிவிட்டு, யார் யாரோ கேட்கும் கேள்விகளுக்கு விலாவாரியாக பதில் சொல்லும் உங்கள் அணுகு முறை நீங்கள் எழுப்பிய விவாதத்தையே பலவீனப்படுத்தும். எனவே, தேவையற்ற வீண் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. பெரியார் சொன்னது போல பாம்புகள் கடந்து செல்லட்டும் விடுங்கள்; ஆரிய பார்வையோடு திரியும் பார்ப்பணனைப் பிடிப்போம் வாருங்கள்.
பாம்புகள் கடந்து செல்லட்டும்!

ரகுராமன் என்பவரின் எதிர்வினை

ஒரு முடிவுக்கு ஏற்கனவே வந்த பிறகு செந்திலும், முரளியும் எதற்காக விவாதம் என்ற பெயரில் ஒரு நிழல்விளையாட்டில் இறங்க வேண்டும் எனக்கென்னமோ இருவரும் அதிமுக கூடாரத்தைச் சேர்ந்தவர்கள் போலத்தான் காட்சியளிக்கிறார்கள். 'மைனாரட்டி' அரசு என்றே எப்போதும் திமுக அரசைக் கூப்பிடுவதுபோல், 'ஆரிய' ஞானியே என்றே கூறிக்கொண்டிருக்கிறார்கள். முதலில் இப்போது திமுக ஆட்சி தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே, திமுக-வைப் பற்றி அதிகம் பத்திரிகைகள் எழுதுமே/எழுத வேண்டுமே தவிர அதிமுக-வையோ, அல்லது பிஜேபியையோ தாக்கிப்பேசுவதில் என்ன பயன்? எனக்கு இவர்களின் கூற்று பிடிக்கவில்லை என்பதைவிட புரியவில்லை என்று தான் கூற வேண்டும்

சசி என்பவரின் எதிர்வினை

நண்பர் raghuraman நீங்கள் சொல்வது தவறு திமுக ஆட்சி தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தவறுகலை தட்டி கேட்கலாம் தப்பில்லை அனால் ஞானி விமர்சிப்பது அதுவல்ல

ய கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்க உள்ளேன்….


ரகுராமன் என்பவரின் எதிர்வினை

I know that the references are being drawn to Gnani comparing Anna and Periyar and praising Anna (some feel, thereby belitting Periyar). Their complaint is that because of his 'Aryan' background, Gnani is trying to have a shadow fight between DMK and DK. Their point is that since he is an Aryan(brahmin), he is doing the 'Naradar job'. It is also pointed out that he is just giving a pat on ADMK/JJ (not really criticising JJ) and firing all his guns on DMK/MK. I replied to that last point ONLY



சசி என்பவரின் எதிர்வினை

ஞானியிடம் அந்த ஆரியமனம் பாதி இருக்கதான் செய்கிறது,பத்திரிக்கை,TV,COURT, போன்றவற்றில் இருந்து ஆரியர்கள் விலகினால் மட்டுமே இந்தியா உருபடும் ,இந்தியா இப்படி இருப்பதற்க்கு காரணம் இவர்களின் சுயநலமே..........
ரகுராமன் என்பவரின் எதிர்வினை
கலைஞர் அண்மையில் கூறியதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். 'நான் பார்ப்பனரை எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தைத் தான் எதிர்க்கிறேன்'. இன்றையச் சூழலில் 'பார்ப்பனீயம்' என்பது மற்றவர்களையும் தாக்கியுள்ளது என்பது தான் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு வேளை நீங்கள் அனைத்து 'ஆரிய' மக்களையும் (அதாவது பிராமணர்கள்) இவர்களைத் தூக்கியெறிந்து விட்டு புதுதாக மற்றவரை நியமித்தாலும் கூட அதே 'பார்ப்பன' நிலைப்பாடு தான் அங்கும் வரும். எனவே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் விலக்கிவிட்டால் மட்டும் 'நாடு உருப்படும்' என்றால் உங்கள் கூற்றை ஏற்கமுடியும். 'நாடு உருப்படுவதற்கு' அந்த 'holocaust/pogrom'க்கு நான் தயார்

சசி என்பவரின் எதிர்வினை

ஆரியர்கள் இன்னும் பார்ப்பனீய தன்மையுடன் தான் இருக்கிறார்கள், இவர்கள் இல்லை என்றால் கண்டிப்பாக இந்தியா நல்லதொரு பாதையில் சென்று கொண்டு தான் இருக்கும்,இன்று வரையில் ஆதிக்கம் இவர்கள் கையில்தான் இருக்கிறது1.இவர்கள் இத்தனை ஆண்டுகளில் செய்தது என்ன?2,இவர்களின் அரிய கண்டுபிடிப்பு என்ன?3.இவர்கள் 100% செய்த வேலை கடவுள் இருக்கிறார் என்பது தான் அதையாவது இவர்கள் செய்தார்களா???????4.கடவுள் இருக்கிறார் என்று கண்டுபிடித்து உலகத்திற்க்கு காட்டினார் களா??????
ரகுராமன் என்பவரின் எதிர்வினை
நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்? ஆரியர்கள் வேறு பார்ப்பனர்கள் வேறு என்று கூறுகிறீர்களா? 'கடவுள் இருக்கிறார்' என்று யார், எதற்கு நிரூபிக்க வேண்டும்? முதலில் அது ஒரு உண்மையா நிரூபிப்பதற்கு? உங்கள் கோபம் அல்லது வெறுப்பு யார் மீது? ஆரியர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் மீதா, ஆரியர்கள் மீதா அல்லது 'கடவுள் இருக்கிறார்' என்கிற 'உலகறிந்த' உண்மையை நிரூபிக்காதவர்கள் மீதா?
சசி என்பவரின் எதிர்வினை வேடிக்கையாக இருக்கிறது உங்களை பார்த்தால்,இதுவரை நாங்கள் தான் கடவுளின் அவதாரம் என்று சொல்பவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பது உங்களூக்கு தெரியாதா ,இந்தியாவில் தான் இருக்கிறீர்களா ,எனறு வியப்பாக இருக்கிறது !!!!!!!!காலம் காலமாக கடவுளின் பொயரால் ஏமாத்து வேலையை செய்து கொண்டு இருப்பது பார்ப்பனர்கள் தான் ,மனிதனை அவர்கள் சுயமாக சிந்திக்க விட்டிருந்தால் இன்று இந்தியா முன்ணேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கும்

மணி. செந்திலின் பதில்

திரு.ரகுராமன் அவர்களே!
நீங்கள் வெகு சாமார்த்தியமாக விவாதத்தை வேறு திசையில் நகர்த்த முயல்வது
எனக்கு நன்கு புரிகிறது. இந்த சாமார்த்தியம் தான் ஞானிக்கும் உள்ளது.
அதுதான் இன்று கடுமையாக விமர்சிக்கப் படுகிறது.
நான் கேட்ட கேள்விகளுக்கு இது வரை ஞானி உட்பட மழுப்பலாகத்தான் பதிலளித்து உள்ளார்களே தவிர நேரடியான பதில் யாராவது அளித்து
உள்ளீர்களா?
நண்பர் சசிக்கு…… ரகுராமன் வேண்டுமென்றே குழப்புகிறார்.
நம் கேள்விகளுக்கு ஆரியர்கள் தலைமுறை தலைமுறைகளாக வந்து நின்று
பதில் அளிக்கவேண்டும்……ஆனால்
நம் எந்த கேள்விக்கும் அவர்களால் நியாயமான பதில் அளிக்க முடியாது.

‘உலகறிந்த உண்மையை’ அறிந்த ரகுராமன் அவர்களே!
உங்கள் “உலகத்தில்” நாங்கள் இல்லை…….
நீங்கள் என்னத்தான் சொல்ல வருகிறீர்கள்?
கடவுள் ,மதம் ,சாதி போன்றவை ஆரியர்கள் தங்கள் சோத்து பாட்டிற்காகவும்,
சூத்திரர்களை வஞ்சிப்பதற்காகவும், தங்கள் உல்லாச வாழ்க்கைகாகவும் உண்டாக்கிய கற்பிதங்கள்..
இதுதான் உலகம் அறியாத, ஆரியர்கள் மட்டுமே அறிந்த உண்மை……..
அந்த உண்மையை சொல்லி ,எங்களுக்கு அறிவு போதித்து ,எங்களை
நிமிரச் செய்த தந்தை பெரியாரை பற்றி உள்நோக்கத்துடன் தவறாக
எழுதுவது போன்ற காரியங்கள் நடக்கும் போது நாங்கள் கேள்வி
கேட்கத்தான் செய்வோம்………….
முரளி மனோகரும் ,சசியும் எழுப்பி உள்ள கேள்விகளும், கருத்துகளும் தன்மானம் உள்ள தமிழருடையவை…….
எங்கள் சுயமரியாதையை சீண்டி பார்த்த ஞானியை நோக்கி வரலாற்று ரீதியான உண்மைகளை உள்ளடக்கி நியாயமான கேள்விகள் கேட்டால் அதை ‘நிழல் விளையாட்டு’ என்று கொச்சை படுத்துவது சரியா ரகுராமா?
ஞானியை இந்த விவாதத்தில் இருந்து மீட்க ரகுராமன் வெகுவாக முயல்கிறார்
என்றுதான் நினைக்க வேண்டி உள்ளது………..
நண்பர் கோபாலன் எழுப்பிய கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்க உள்ளேன்….


ரகுராமன் என்பவரின் எதிர்வினை

ஞானியின் எழுத்து என்கிற தலைப்புக்கே வருவோம். யாரும் யாரையும் திசைத்திருப்ப முடியாது. மெலிந்தவர்கள் வேண்டுமானால் திசைத்திரும்புவர். அண்ணாவை தட்டிக்கொடுப்பது போல பெரியாரை இழிவுப்படுத்திவிட்டார் என்பது ஒரு சிலரின் கருத்தாக இருக்கலாம். அப்படி தான் எழுதவில்லை என்று அவரே சொல்லிவிட்டார். எனக்கும் அப்படித் தோன்றவில்லை. இதற்கு மேல் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? யாராவது யார் காலிலாவது விழவேண்டுமா? நான் யார் காலிலும் விழமாட்டேன்.@சசிஉங்கள் கூற்று - துவக்கம்இதுவரை நாங்கள் தான் கடவுளின் அவதாரம் என்று சொல்பவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பது உங்களூக்கு தெரியாதா உங்கள் கூற்று - முடிவுஎனக்குத் தெரியாது. கடவுள் என்பவரே இல்லையென்றால் கடவுளின் அவதாரம் எங்கு வந்தது? 'பூ-ன்னா என்னனு கேட்டா புஷ்பம்-னு சொன்னானாம்' அந்த கதை மாதிரு இருக்கு உங்கள் கூற்று.
சாதிகள் என்பது தொழில் அடிப்படையில் வந்தாகத்தான் பல அறிஞர்கள் கூறுகின்றனர். இதில் ஒரு சமூகத்தினைச் சேர்ந்தவர் தாங்கள் ஆரியர் என்றும் சமுதாயத்தை வட இந்தியா பாணியில் வகுக்க முயன்றனர். அதைக்கூட சரியாகச் செய்ய முடியவில்லை. தமிழகத்தில் பிராமணன், வைசியன் என்ற வகுப்புகளே இருந்தன. பிராமணன் என்பவன் பார்ப்பனர்களைக் குறிப்பாதாகவும், வைசியன் என்பவன் தொழில் செய்பவர்களைக் குறிப்பவனவாகவும் வந்தன. தீண்டத்தகாதவர்கள் என்கிற அடிப்படையில் 'தலித்' இன மக்கள் போன்றோர் வஞ்சிக்கப்பட்டனர். இதற்கு பெரியார் போன்றவர்கள் பெரிதும் பாடுபட்டனர். பெரியார் அரசியலில் கலந்து கொள்ள விரும்பவில்லை, அவ்வாறு செய்தால் கொள்கை நீர்த்துவிடும் என்று நினைத்தார். அண்ணா ஆட்சியை மக்கள் மேம்பாட்டிற்காக நேரடியாக உதவிபுரியும் என்று நினைத்தார். ஞானியின் 'தோல்வி/வெற்றி' என்கிறக் கருத்துக்கு எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவருடைய கட்டுரை அண்ணா-வா பெரியாரா என்கிற கேள்விக்கு விடைதேட கிளம்பவில்லை. அப்படித்தான் நான் படித்தேன். ஒருவருடைய கருத்தை அப்படியே ஏற்கவேண்டும் என்கிற தேவையில்லை. கருத்தைக் கேட்காமலே சாடுவதைக் காட்டிலும் கருத்தைக் கேட்பது என்னைப் பொருத்தவரையில் எவ்வளவோ மேல்.

Topic என்பவரின் கருத்துGnani is one of the best political analysts in the country and the best in TN.He is neutral and precise in his analysis. Its very sad that a Periyarist is portrayed as a brahminist by few people.If you people want him not to criticize MK or DMK, then you just want him to be the counterpart of Cho. So unga paarvai la avarudaya ezhutkkal ariya manam aaah irunthaalum, let it be!

சசி என்பவரின் கருத்து

@ RAGHURAMANதிரும்பவும் வேடிக்கையாக இருக்கிறது உங்களை பார்த்தால், கதை வேறு சொல்கிறீர்கள் , இந்தியாவில் என்ன நடக்கிறது எனறு முதலில் தெரிந்து கொள்ளூங்கள் (புத்தர் + வெல்லம் கதை உங்களூக்கு தெரியும் எனறு நினைக்கிறேன் )இறந்த பசுமாட்டின் தோலை உறித்ததற்க்காக 5 நபர்களை கல்லால் அடித்து கொன்றது இந்தியாவில் தான் , கேட்டால் அது கடவுளின் அவதாரம் என்றார்கள் . இப்போது அணீல் கட்டிய ராமர் பாலத்தை இடிக்க கூடாது என்று ச‌ன்டை செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் யார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்


ரகுராமன் என்பவரின் எதிர்வினை

@சசிஉங்கள் கூற்று - துவக்கம்இதுவரை நாங்கள் தான் கடவுளின் அவதாரம் என்று சொல்பவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பது உங்களூக்கு தெரியாதா உங்கள் கூற்று - முடிவுFirst you say that 'they' say that they are the avatars of God. Now you tell that 'they' say that cow is the avatar of God. Are you saying that cows and brahmins are same? I mean even if some people say, how can you take it as the representation of the opinion of the whole community? I still dont know where you problem is - is it with brahmins or is it with Gnani because he is a brahmin or is with Gnani because he 'dared' to compare Periyar and Anna? You accuse me of 'diverting' the topic

கீரிடம் ராக்ஸ் என்பவரின் கருத்து

Jul 19
வணக்கம். இங்கு நடக்கும் விவாதங்களை நான் கூர்ந்து கவனித்துக் கொண்டு வருகிறேன். என்னால் ஒரு விஷயத்தை மட்டும் ஒப்புக் கொள்ள இயலவில்லை. இது ஞாநி இன் எழுத்துக்களின் மீதுள்ள கோபமா அல்லது அவர் பிறப்பால் ஒரு பார்ப்பனர் என்பதால் எழுந்த துவேஷமா?. 200 - 300 ஆண்டுகளுக்கு முன் எவனோ ஒருவன் வகுத்த விதிகள். விதிகள், மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பதுபவை. காலததிற்கேற்ப மாறுப்வை. அன்று நடந்த தவறுகள் மன்னிக்க இயலாதவை. அதற்காக இன்று அமைதியான வாழ்க்கை வாழும் பிராமணர்களை துவேஷிப்பதில் எந்த பலனும் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.நான் இது வரை ஒரு போதும் நானாக நான் பிராமணன் என்று நினைத்ததில்லை. இந்த அரசும் உங்களை போன்ற நபர்கலுமே என்னை நினைக்க தூண்டுகின்றனர். உண்மையில் இன்று நாங்களே தீண்ட தகாதவர்க்ளாக பாவிக்க படுகிறோம். இட ஒதுக்கீடு என்ற பெயரில் எங்கள் உரிமைகள் மறுக்கப் படுகின்றன. நானே மிக நல்ல மதிப்பெண்கள் இருந்தும் 2 மடங்கு fees கொடுத்து படித்தேண். அந்த இட ஒதுக்கீடு சரியான இடத்தை சென்று அடைகிறதா என்றால், இல்லை என்பதே என் பதில். வசதி இருக்கும் மக்களே அதை பயன் ப்ட்டுத்ததுகின்றனர். வசதி இல்லாத என் போன்ற மாணவர்கள், பிறப்பால் பிராமணர் என்ற ஒரே காரணத்த்தினால் உரிமை இழக்கின்றனர்.நான் ஒரு போதும், எந்த அரசியல் வாதிய்யும் நம்புவதில்லை. அது கருணநிதி என்றாலும் சரி, ஜேஜே என்றாலும் சரி. அவர்க்ள் ஓட்டுக்காக மக்களை தூண்டுகின்றனர். வேதனையான விஷயம், உங்களை போன்ற கல்வி அறிவுள்ள நண்பர்களும் இதனால் தூண்டப்படுவதுதான். உங்கள் மனதில் சிறு வயதில் விடைக்கப்பட்ட விஷ விதை இன்று விருட்சமாகி நிற்கிறது. தாங்கள் ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுப்ட வேண்டும் என்பதே என் போன்றோரின் விருப்பம். அதை விட்டு விட்டு என் வாழ்நாள் முழுவதும் பிராமணர்களை தூற்றுவதே என் கடமை என்று நீங்கள் கருதினால், உங்களை நினைத்து பரிதாபப் ப்டுவதை தவிர என்னால் ஒன்றும் செய்ய இயலாது.நண்பர் சசி அவர்களே, தாங்கள் சொல்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது. பத்திரிகை, நீதி போன்ற அனைத்து துறைகளிலும் பிராமணர்கள் நுழையக் கூடாது என்று சொல்வது நாம் ஜன நாயக நாட்டில்தான் உள்ளோமா என்று எண்ணத் தூண்டுகிறது.நானும் பிறப்பால் ஒரு இந்தியன். உங்களுக்கு உள்ள உரிமைகள் எனக்கும் உண்டு. உண்மையில் குறைந்த உரிமை. அடையும் பறிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?.
ஆகவே, இந்த துவேஷா மனப்பான்மையை விட்டு விட்டு உறுப்படியாக ஏதேனும் செய்யுங்கள் இந்த நாட்டுக்கு. எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும். எனது மென்பொருளினால் நிகழ்ந்த தவறுகள் அவை.- ஒரு உண்மைத்தமிழன்

சசி என்பவரின் கருத்து

நன்றாக இருக்கிறது, நிங்கள் சொல்வது, சதவிதத்தில் வெறும் 2% இருக்கும் நீங்கள் இன்று வரையில் அனைத்து துறைகளீலும் ஆதிக்கம் உங்கள் கையில்தான் இருக்கிறது.எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.இன்று (19.07.2007 ) வரையில் நிலமை இப்படிதான் இருக்கிறது காலம் காலமாக சமூக ரீதியாகப் பின் தங்கியுள்ள மக்களைக் கைதூக்கி விட டாக்டர் அம்பேத்கர் மட்டும் இன்னும் 10 ஆண்டுகள் இருந்திருந்தாள் நிலமை வேறு மாதரி இருந்திருக்கும். டாக்டர் அம்பேத்கர் கடைசியாக சொன்னது“நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.”என்ன செய்வது அப்படி ஒரு மாமனிதர் எங்களூக்கு இன்று வரையில் கிடைக்கவில்லை , ஆகையால் அதிகாரம் அனைத்தும் உங்கள் கையில் தான் இருந்து கொண்டு இருக்கிறது

கீரிடம் ராக்ஸ் என்பவரின் கருத்து

உண்மையில் இன்று எங்கள் சமூகம்தான் தீண்டபடாத சமூகமாகிக் கொண்டு இருக்கிறது. நாங்கள் எத்துறையிலும் ஆதிக்கம் செலுத்துவதாக தாங்கள் சொல்வது தவறு. எந்த துறையானாலும் எங்களுக்கு இடப்பட்ட பணிகளை செய்வது எங்கள் கடமை. நான் இன்று நல்ல நிலைமையில் உள்ளேன் என்றால் அதற்கு என் கடின உழைப்பு காரணமே தவிர, நான் பிறப்பால் பிராமணன் என்பதோ அல்லது இந்த அரசோ அல்ல. எங்கள் சமூகத்திலும் எழைகள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் பிள்ளைகளும் இந்நாட்டின் பிரஜைகளே. ஆனாலும் சாதியின் காரணமாக இந்த அரசோ, மற்றவர்களோ எவ்வுதவியும் செய்வதில்லை. அவர்கள் சிறு கோயில்களில் அர்ச்சக்ராகவோ அல்லது சமையல் பணி செய்தோ வயிற்றை நிரப்புக்கின்றனர்

I can give you living examples of the above statement. I have seen such people in my life. In all government offices there is reservation. My sister who got her job in compassionate grounds after my father's death is still in the same position even after she has completed so many office exams for promotion. Because promotion is given on the basis of caste and experience. Experience should be considered, but why caste plays a role in promotion. Nowdays it has become like it is 90% not possible for a FC to get a government job. I am not against reservation. It should be given to really less abled people. Like ones who dont have any financial background or ones who are from villages where less facillities are there. But tell from your heart, who is enjoying these reservations. It is people who are already with enough money and use reservation as a short cut to get things done.Thank god, at least so far they left private sector because of which I was able to find a job. If you really want to remove the caste system and do some thing for your society then go to villages and help less abled people. You will get nothing by criticizing Gnani or brahmins. We are not the ones who still treat people from your community as slaves in Ramnad district. Today, we are living a life without bothering the government. We work hard to get our things going without expecting any help from others. You need not help us, I know you will never help us, at least dont put hurdles in our path.

சசி என்பவரின் கருத்து

நீங்கள் சொல்வதை பார்த்தால் எனக்கு ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது, சிரிப்பு வருது சிரிப்பு வருது..... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது என்ற பாடல் அது, ஆம் அதிக கடமை ஆற்றுகிறீர்கள், அது நாங்கள் முன்ணேற்றம் அடயகூடாது என்று பார்த்துகொள்வது தான் உங்கள் கடமை,அதை இன்று வரையில் சிறப்பாக செய்துகொண்டு வருகிறீர்கள்.வாருங்கள் இந்தியாவில் யார் யார் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்களாம், நான் உங்கலை ஒரு பைசா செலவு இல்லாமல் சுற்றிகாட்டுகிறேன்,எப்போது வருகிறீர்கள்............

கீரிடம் ராக்ஸ் என்பவரின் கருத்து

By that time you waste here in discussing with me, go and do some useful to those parts of India u r mentioning. Why should we stop your growth. Its not our job. As I told you, we are trying to live a peaceful life without bothering about any one. Why you are showing this much hatred on us?...from my birth, till date, I never discriminated anyone based on caste. But guys like you make me think again and again that I am a brahmin by birth. You are inducing castesim in the society again which is blurring nowadays. People like you are so dangerous because they try to brainwash persons who are well educated and lead a peaceful life and try to induce castesim on them. As I already told you, better do something to your people than wasting your time here.

சசி என்பவரின் கருத்து


ஆம் நான் கேட்கும் கேள்விக்கு உன்னால் பதில் சொல்லமுடியவில்லை என்றால் நீ இப்படிதான் பேசுவாய் என்ன செய்வது நீங்கள் செய்தது அப்படி நினைத்து (படித்து ) பார் வரலாற்று பக்கங்கள் அழ­ந்துவிடவில்லை பதில் உன்னால் சொல்லமுடியாது அகையால் மன்னிப்பு கேட்டுக்கொள்

ஜெய் என்பவரின் கருத்து

சசி psyco madhiri irukku

கீரிடம் ராக்ஸ் என்பவரின் கருத்து

Jul 21 (5 days ago)
what the hell question you asked?...history is a history...do u want to repeat the same today with us...do u want an eye for an eye?...the society was not divided by us... we didnt treat you as slaves...go and ask the persons who are still treating u as slaves...did we kill so many innocent people in 'Melavalavu'?...are we the ones who are restricting people from Paappapatti and Keerippatti from participating in elections...its ur so called 'soothirans'...I too know history man...I know what u guys do today...when periyar's statue is broken by some politically corrupted people, you go and attack innocent brahmins...and remove their sacred thread...is this what u learnt from the education...hatred will not give u anything but hatred...the above thread is cent percent true...u r a completely brain washed psycho...

சசி என்பவரின் கருத்து

டேய் கீரீடம் ராஸ்கல்....பேச்சை குரை டா நாயே....நீ ஏன் கிரிடம் ராக்ஸ்க்ஸ்ன்னு பேரை வச்சிட்ட்டுருக்க(அஜித் படத்த போட்டுட்டு) .... உன் பேரை வச்சிக்க வேண்டியது தானே.... நாயேஅஜித்திக்கு உயிர் கொடுக்கரியா நாயே.... (சினிமா ல நேற்று வந்த படம் கூட உயிர் கொடுக்கலன்னு நீ உயிர் கொடுக்குர போலும்) என்ன தான் இருந்தாலும் பாப்பான விட்டு கொடுக்க மாட்டியே....இந்த டாப்பிக் ஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்… தானே தவிர நீ எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை டா நாயே...ஞானிய உனக்கு எவ்வளவு நாள தெரியும்.... என்னோட 12 வயதில் இருந்து எனக்கு ஞானிய தெரியும் டா...ஏன்னா எனக்கு ஞானிய தெரியும், அவர் திண்ணைல இருந்து விலகியது உனக்கு தெரியுமா...அப்பொழுது கூட ஞானி மேல ஒரு அப்பற்ற பாசம் எனக்கு.... இதை பத்தி ரொம்ப பேசலாம் ..... ஆனா அதற்கு தகுதியான ஆள் நீ இல்ல...சரியா உன்ன நாயின்னு கூட சொல்ல என் மனது கூசுது....எல்லாவற்றையும் விடு டா பன்னி.......


ஸ்டாலின் என்பவரின் கருத்து

அன்பான நண்பர்களேநானும் இந்த விவாத மேடை யை உன்னிப்பாக கவனித்து வருகிறான். நாம் நம் விவாத காளத்தை விட்டு வெளியே வந்து வெகு தூரம் ஆகி விட்டது என்று எண்ன தோன்றுகிறது. தயவு செய்து ஒருவர் மீது வசை பாடும் சொற்களை உபயோகிப்பத்தை விட்டு விடுவோம். காலமும், நம் முன்னோர்களும் நமக்கு தந்த இந்த தொழில் நுட்பங்கள் அனைத்தும் நம் தலை முறைக்கு கிடைத்திருப்பது வரம். அடித்து கொள்ள நாம் ஒன்றும் அரசியல் வாதிகள் அல்ல........ மனிதர்கள்

அபிமன்யு என்பவரின் கருத்து

kreedom rocks.. & jai,சசி சொல்கிறார் அதை கேளுங்கள்..அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.. அவர் psycho வாக கூட இருக்கடும்.. ( means சூத்திர psycho)..ஆனால் நீங்கள் ஆரியர் psycho pola பதில் சொல்வது தான் சிரிப்பு

கீரிடம் ராக்ஸ் என்பவரின் கருத்து

Jul 22 (4 days ago)
Mr Abimanyu, I am ready to answer his questions. But, ask him to maintain decency in his posts. this is a public forum. see all my previous posts. I was not the one who was diverting the topic. I was just answering his questions only. But what reply has he given. He has induced me to call him psycho.First, ask him to maintain decency then post in these kind of threads.

மணி. செந்திலின் பதில்

சொற்கள் ஆயுதங்களாக…

கடந்த சில நாட்களாக இக்குழுவில் நடை பெற்று வரும் இந்த விவாதம் தந்தை பெரியார் குறித்தும் அவரது கொள்கை, கோட்பாடுகளின் வீச்சு குறித்தும் அதனால் சமூகத்தில் விளைந்த புரட்சிகர மாறுதல்கள் குறித்தும், திராவிட இயக்க வரலாறு குறித்தும் என பலவித பரிமாணங்களில் பயணப்பட்டு திட்டமிட்ட சிலரது செயல்பாட்டினால் இன்று சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.

இந்த விவாதம் என்னால் துவக்கப்பட்டது என்ற முறையில் சில விளக்கங்களை நான் அளிக்க வேண்டியது தற்போதைய சூழலில் அவசியமான ஒன்றாகும். தந்தை பெரியார் குறித்து ஞானி ஆனந்த விகடனில் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் தந்தை பெரியார் என்ற ஆளுமையின் புகழை சிதைக்க வேண்டும் அல்லது சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ‘ஓ’ பக்கங்கள் என்ற பகுதியில் எழுதப் பட்ட பத்தியே நான் எழுப்பிய விவாதத்திற்கு அடிப்படையான காரணமாகும். மேற்கண்ட பத்தியைப் பற்றி நான் இக்குழுவில் முன் வைத்த வினாக்களுக்கு ஞானி உட்பட பெரும்பாலான ஞானி ஆதரவாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு பதிலளித்தனர். என் கேள்விகளுக்கு உரிய, நேர்மையான, நல்ல சிந்தனைகளை உருவாக்கக் கூடிய, நேரடியான பதில்கள் அவை என்பதை படித்துப் பார்க்கும் யாருமே மறுக்கக் கூடிய ஒன்றாகும். எனது கேள்விகளுக்கு நேரடியான பதிலை இந்த விவாதத்தில் பங்கு கொண்ட ஞானி ஆதரவாளர்கள் யாருமே அளிக்காத பட்சத்தில், நான் ஞானி ஆதரவாளர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் விரிவாக விடையளித்ததுதான் இங்கு நடந்தது.

இந்த விவாதம் சரியான இலக்கை நோக்கி பயணப்பட்டிருந்த போது ரகுராமன் என்ற நண்பர் விவாதத்தை வேறு திசையை நோக்கி திட்டமிட்ட உள்நோக்கத்துடன் இழுத்தார். என் பத்திகளுக்கு எதிர்வினையாற்றிய நண்பர் முரளி மனோகர் என்னுடைய விவாதம் கொண்ட உட்கருத்தைத் தாண்டி விலகிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அன்றே எச்சரித்தார். நண்பர் சசி முன் எழுப்பப் பட்ட விவாதத்தைத் தாண்டிய, விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்கு அவர் தொடர்ந்து எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தார். இருந்தாலும் சசி முன் வைத்த கேள்விகள் ஆரியத் தன்மை கொண்ட அனைவருக்குமானது என்ற பட்சத்தில் அவற்றை ஏற்கக் கூடிய கேள்விகளாகவே நான் கருதுகிறேன். ஆனால், ரகுராமன், நண்பர் கிரீடம் ராக்ஸ் (!) போன்றவர்கள் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பல்வேறு சிந்தனைகளை பரிமாறிக் கொண்டிருந்த இந்த விவாதத்தை அழித்து, கீழ்த்தரமாக்கி, சிதைக்க வேண்டும் என்று நடத்திய போராட்டத்தில் நண்பர் சசி உணர்ச்சி வசப்பட்டு பலியாகி விட்டார்.

நண்பர் சசி அவர்களே…

நீங்கள் முன் வைத்த கேள்விகள் தர்க்க ரீதியிலான வரலாற்றுக் கூறுகளை உள்ளடக்கியது. ஆனால், உங்களது உணர்ச்சி வயப்பட்ட மன நிலை அற்புதமான உங்களது போர்க்குணம் மிக்க நிலைப்பாட்டிற்கு எதிரானதாக அமைந்து விட்டது. நம்மை உணர்ச்சி வசப்படுத்தி தவறிழைக்க வைப்பதில்தான் அவர்களது வெற்றி அடங்கியிருக்கிறது. காலங்காலமாக உணர்ச்சிவசப்பட்டு சாதியினாலும், கடவுளின் பெயராலும், நாம் அடிமை இருட்டில் மூழ்கிக் கிடக்கிறோம். அவர்கள் மிக எளிதாக, அழகான சாமர்த்தியத்தோடு, நாகரீக நயங்களோடு, தங்கள் காரியங்களை மிகக் கச்சிதமாக முடித்துவிட்டு செல்கின்றனர். புரிந்து கொள்ளுங்கள் சசி… நமது எதிரிகள் சாமர்த்திய சாலிகள். கல்வி கற்கின்ற நாம் நம் குடும்பத்து இரண்டாம் தலைமுறை. அவர்கள் பன்னெடுங்காலமாக கல்வி, சமூக அந்தஸ்து, பொருளாதார உயர்வு போன்றவற்றை பிறப்பின் அடிப்படையிலேயே பெற்று விடுகிறார்கள். அவர்களோடு போட்டி போட நாம் அவர்களாக வேண்டும். சாதி உணர்வில் அல்ல.. சாதிக்கும் வெறியில். எனவே, அமைதியாக அவர்கள் காட்டும் அதே நாகரீக (?) உணர்வோடு நாமும் செயலாற்ற வேண்டிய சூழலில் உள்ளோம்.

நண்பர் சசி குறித்து ஜூலை 19 அன்று கிரீடம் ராக்ஸ் ஆற்றிய எதிர்வினையே இன்று அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். அந்த எதிர்வினையில் மிகவும் அபாயகரமான மனிதராக, சாதீய உணர்வாளராக, நண்பர் சசியை கிரீடம் ராக்ஸ்.. விமர்சித்து இந்த விவாதத்தை தனிப்பட்ட நபர்கள் குறித்தான தாக்குதல் என்ற தளத்திற்கு அஸ்திவாரமிட்டார். ஏற்கனவே ரகுராமன் விவாதத்தை விட்டு விட்டு அவருக்குத் தோன்றியதை எழுதிக் கொட்டிக் கொண்டிருந்தார். கிரீடம் ராக்ஸ்.. பணியை மிகக் கச்சிதமாக முடித்தார். நண்பர் சசியை இக் குழுவிலிருந்து நீக்கிவிட்டதாக அறிகிறேன். பிரச்சினையின் மூல கர்த்தாவான கிரீடம் ராக்ஸ்.. தற்போதும் இக்குழுவில் உள்ளார் எனவும் உணர்கிறேன். குழு அமைப்பாளர்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நண்பர்களாக இருப்பது குழுவை நல்ல திசைக்கு அழைத்துச் செல்லும். எனவே, நண்பர் சசி மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை ஒரு தலைப் பட்சமானது என்று நான் நம்புகிறேன்.

எனவே, இப்படிப் பட்ட சர்ச்சைகள் நேர்மையான விளைவுகளை எதிர் நோக்கும் என் போன்றவர்களை களைப்படைய செய்துவிடுகின்றன. இருந்தாலும் தந்தை பெரியார் எங்களுக்கு கற்பித்த விடா முயற்சி, சமூக நம்பிக்கை, போன்றவை, என்னை மீட்டெடுத்து பணியாற்ற வைக்கின்றன. கிரீடம் ராக்ஸ்.. இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பணியாற்றுவது குறித்து எனக்கு ஆச்சர்யம் ஏதுமில்லை. கோபமும் வருவதில்லை.. ஆனால், நண்பர் சசி ஆதாரப் பூர்வமாக பதிலளித்தால் மட்டும் கிரீடம் ராக்ஸூக்கு கோபம் வந்து விடுகிறது.

அரசியல் ரீதியாக பெரியார் தோற்றார் எனவும், பெரியார் கொள்கைகள் எதுவும் அரசியலிலும் சரி, சமூகத்திலும் சரி, இன்னும் வேரூன்றவே இல்லை எனவும், பெரியார் தலைமையை கேள்வி கேட்காமல் ஏற்பவர்கள் மட்டுமே இயக்கம் நடத்த விரும்பினார் எனவும் உண்மைகளை மறைத்து விஷமத்தன ஆரியத் தன்மையோடு எழுதிய ஞானியை இந்த விவாதத்திலிருந்து மீட்க ஞானி ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு பலியானவர் நண்பர் சசி மட்டுமே. பல நூற்றாண்டு காலமாய் கடவுளின் பெயராலும், சாதியின் பெயராலும் அடிமை இருட்டில் எங்களை வீழ்த்தி, கல்வி,பொருளாதார உரிமைகள் பறிக்கப்பட்டு, அசாதாரண இயல்பு வாழ்க்கை கூட எங்களுக்கு மறுக்கப்பட்ட ஒரு அசாதாரண சமூகத்தில் கோபம் கூட நாகரீக நயத்தோடுதான் வரவேண்டியுள்ளது.

அரசியல் ரீதியாக தோற்பதற்கு பெரியார் என்ன அரசியல் வாதியா…? பெரியார் கருத்துக்கள் வேரூன்றி வளராமலா சூத்திரர்கள் கல்வி கற்று, கணிணி பயின்று இணணயத்தில் கேள்வி கேட்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்கள்..? ஞானி அவர்களே, விவாதம் வேறு திசையை நோக்கி நகர நான் விடப் போவதில்லை. நண்பர் முரளி மனோகர் எச்சரிக்கை மணி அடித்தது இன்று நடந்தே விட்டது. நண்பர் ஸ்டாலினும் இதே கருத்தை முன் வைத்திருப்பது கவனிக்கத் தக்கது. எனவே, இந்த விவாதத்தில் பங்கு பெறுகின்ற நண்பர்கள் விவாதத்தைத் தாண்டி வெளியே பயணிக்க வேண்டாமென இந்த விவாதத்தைத் துவக்கியவன் என்ற வகையில் நான் கேட்டுக் கொள்கிறேன். ஞானி தொடர்ந்து திராவிடர் கழகத்திற்கு எதிராகவும், தி.மு.க.விற்கு எதிராகவும் எழுதுவதன் நோக்கம் என்ன என்பதுதான் என்பதுதான் என்னுடைய கேள்வி. அ.தி.மு.க.வைப் பற்றி எப்போதாவது விமர்சித்து எழுதுவதால் மட்டுமே இவரது நடுநிலைமையை சந்தேகப் படாமல் விட முடியாது. ஏனெனில் தொடர்ந்து ஏதேனும் ஒரு தளத்தில் தனது சொந்த விருப்பு வெறுப்புக்காக ஏதாவது சர்ச்சையை உருவாக்கி ஊடக பிரதிபலிப்பை தன் மீது விழச் செய்வதில் கெட்டிக்காரர் ஞானி, அந்த கெட்டிக்காரத்தனம் தந்தை பெரியாரை சீண்டிப் பார்க்கும் அளவிற்கு வளரும் போதுதான் எங்களுக்கு கோபம் வருகிறது.

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, மேலவளவு போன்ற அநாகரீகங்களின் ஆணி வேர் பார்ப்பணீயம் என்ற மூல வேரிலிருந்து புறப்பட்டவையாகும். தங்களது பிழைப்பிற்காகவும் கல்வி, பொருளாதார, சமூக உயர்வுக்காகவும் சாதி, மதம் போன்ற வியாபார நிறுவனங்களை பார்ப்பணர்கள் உருவாக்கியதின் அவலத்தை அறியாமை என்ற இருட்டில் விழுந்து கிடக்கும் சூத்திரர்கள் அனுபவிக்கிறார்கள். இக் கேள்வியை எங்கள் முன் வைக்க வேண்டாம் கிரீடம் ராக்ஸ்.. உங்கள் மனசாட்சியை நோக்கி எழும்பட்டும் இக் கேள்வி. இரண்டு மடங்கு பணம் கட்டிப் படித்ததாக கீரீடம் ராக்ஸ் வருந்துகிறார். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாக கல்வி என்பதே எங்களுக்கு மறுக்கப் பட்டதே… நாங்கள் என்ன செய்வது..?

கிரீடம் ராக்ஸ் சகோதரிக்கு பணி உயர்வு கிடைக்கவில்லை என்கிறார். என் சகோதரர்களுக்கு கல்வி கிடைக்கவே பல நூற்றாண்டுகள் ஆயின. ஒரு தலைமுறை கூட பார்ப்பணர்களால் பொறுக்க முடியவில்லை. சூத்திரர்கள் காலம் காலமாய் அனுபவித்து வந்த கேடுகளுக்கு எங்கே நியாயம் கேட்பது? தனியார் துறையில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிப்பதில்லை என்று கிரீடம் ராக்ஸே ஒத்துக் கொள்கிறார். அரசுத் துறைகள் அதிகமா..? தனியார் துறைகள் அதிகமா..? எந்தத் துறையில் ஊதியம் அதிகம்?....... உண்மையைப் பேசினால் கிரீடம் ராக்ஸிற்கு கோபம் வருகிறது. பிராமணர்களை யாரும் எதிர்க்கவில்லை. உங்களது வேலைகளை நீங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் சீண்டும் போதுதான் பழைய வரலாறுகளை நாங்கள் தூசி தட்டி எடுக்க வேண்டியுள்ளது

பார்ப்பணர்களில் இன்று பெரும்பாலானவர்கள் மென் பொருள் துறை மற்றும் தனியார் துறையில் பணியாற்றி வெளிநாடுகளில் மிக வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். ஏதோ, சொற்பமான சிலர் கிராமக் கோயில்களில் ஏழை அர்ச்சகராக, சமையல்காரராக பணி புரிவதால் மட்டுமே பார்ப்பணர்கள் தீண்டத் தகாத சமூகமாக ஆகி விட்டனர் என்று கிரீடம் ராக்ஸ்.. புலம்புவது நியாயமான ஒன்றா என்பதை சிந்திப்பவர்கள் மத்தியில் விட்டுவிடுகிறேன். அடுத்தவேளை உணவிற்கு கூட வழியில்லாமல், கல்வி கற்க வசதியில்லாமல், மூட நம்பிக்கை இருட்டில் விழுந்து கடவுளுக்கு கஞ்சி ஊற்றும் கோடான கோடி சூத்திரர்களை என்னால் காட்ட முடியும். உங்களால் தீ மிதிக்கிற, அலகு குத்துகிற, தேர் இழுக்கிற, கடவுளுக்காக விளக்கைத் தூக்கிக் கொண்டு வீதி வீதியாக நடக்கிற பார்ப்பணர்களை உங்களால் காட்ட முடியுமா…?

ரகுராமன் யார் காலிலும் நான் விழ மாட்டேன் என்று கோபப் படுகிறார். உங்களை யார் காலில் யார் விழச் சொன்னது..? குழப்புவது மட்டுமே உங்களது வேலையாகி விட்டது.

நண்பர் ஜனா என்பவர் கேட்ட கேள்விக்கு நான் ஏற்கனவே பதிலளித்து விட்டேன். சோ. ராமசாமி, வெளிப்படையாக பெரியார் ஆதரவாளர்களை எதிர்க்கிறார். ஞானி கூடவே இருந்து உட்கருத்துடன் விஷமத்தனமாய் எழுதி வருகிறார். என்னைப் பொறுத்த வரையில் ஞானியை விட சோ. ராமசாமி பல மடங்கு உயர்ந்தவர்.

எனவே நண்பர்களே.. அண்ணன் அறிவுமதி கவிதை ஒன்றை உங்களிடத்தில் பகிர்வதில் நான் பெருமை கொள்கிறேன்.

உச்சரிக்கும் தொனியில்
எங்களின் வார்த்தைகளும் ஆயுதங்களாகி
உங்களை அச்சுறுத்தலாம்.

சொற்கள் எதற்கு
சைகைகளால் மட்டுமே
விவாதிக்கவும்
நாங்கள் தயார்.

உண்மைகளை… உணர்ந்தும்
பொய்களில்
புதைந்த
ராஜாளிகளே
உங்களின் வட்டமிடுதல்களை மறந்துவிட்டு
மூக்கின் வேர்வையைத் துடைத்துவிட்டு
நக முட்களை முறித்துக் கொண்டு
வருவதற்கு நீங்கள் தயாரா?

……………………………

வார்த்தை எதற்கு
சைகைகளால் மட்டுமே
விவாதிக்கவும்
நாங்கள் தயார்.

யுவன் பிரபாகரன் என்பவரின் கருத்து

// வார்த்தை எதற்குசைகைகளால் மட்டுமேவிவாதிக்கவும் நாங்கள் தயார். //மணி.செந்தில் சொன்னது சரி..நாம் எந்த ஆயுதம் எடுக்கவேண்டும் என்று எதிரி தான் தீர்மானிக்கிறான்..- mao-அதற்ககாக நீங்கள் எங்கள் எதிரிகள் அல்ல. --- உங்கள் வாதம் எதுவானாலும் சரி... விவாதிப்போம்....அனால் அது விதண்டாவாதமாக கூடாது
moderator .. அவர்கள்... பார்வைக்குஅதே சமயம்....சசி சொன்ன கருத்தகளை தணிக்கை செய்தும்.. அவரை நீக்கியதும்.. மிக்க தவறு என்று சொல்லிகொள்கிறேன்..நாம் இங்கு விவாதம் மட்டுமே செய்து வருகிறோம்... எனவே ஒரு தலை பட்சமாக சசியை நீக்கியது கண்டணத்துக்கு உரியது...

அபிமன்யு என்பவரின் கருத்து

அணை வரும் வந்து விட்டார்கள்..விவாதம்.... தொடரட்டும்......கிரிடம் ராக்ஸ் ( படம் ஒடுதுன்னு பாத்தா theatra விட்டு விட்டு ஓடுது பா ) JAI ..மணி.செந்தில்.. சசி.. யுவன்பிரபாகரன்.. பிரின்ஸ்... மற்றும்.... அனைவரும் வந்த்துருக்காக.... வாங்க விவாதத்தை... தொடங்குங்க


குழு அமைப்பாளர் கார்த்திக் என்பவரின் கருத்து

Stop all this !!!Hi everybody!I have removed sasi, kreedom rocks (use your name man!!!) and jai because all these guys used the unwanted words.Later according to their request we accepted sasi and kreedom rocks with the group! Nothing is here tilted to somebody. I also intimated them to behave properly in a public forum.PLEASE KEEP IN MIND THIS IS A FORUM TO DISCUSS WRITING OF GNANI WITH GOOD INTENTION!!!! I REQUEST ALL OF YOU TO DO NOT MISLEAD TO SOMEWHERE AND DO NOT BUILD YOUR OWN MEANING FOR OTHERS WRITING!!!ALWAYS “MAINTAIN SOME RESPECT TO OTHERS”.


சக்திவேல் என்பவரின் கருத்து

அரசியல் ரீதியாகப் பார்த்தாலும் வெற்றியே@ Topicபெரியார் தன் வாழ்வில் சமரசத்துக்கே இடமளிக்காதவர். தான் அரசியலில் ஈடுபட்டால் தாம் எதிர்க்கும் அரசியல்வாதிகளுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதனால்தான் அவர் அரசியலில் ஈடுபடவில்லை. அதற்கு பதிலாக தமது கொள்கைகளை வலியுறுத்தி அரசியல்வாதிகளை எதிர்த்து போரரட்டங்கள் நடத்தி அவற்றை அந்த அரசியல்வாதிகளின் மூலம் செயல்படுத்த வைக்க வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம். என் பார்வையில் அண்ணா பெரியாரின் செயல் உருவமாகத்தான் தெரிகிறார். பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதே அவரின் லட்சியமாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் பதவிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் அவர் இறந்ததுதான் நமக்கு ஏற்பட்ட பேரிழப்பு. இருவரின் கனவு, லட்சியம் எல்லமே ஒன்றுதான். ஆனால் எதுவும் முழுமையாக நிறைவேறவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை. இட ஒதுக்கீட்டைப் பற்றி இன்று அர்ஜூன் சிங் பேசுகின்றார் என்றால் அது அரசியல் ரீதியாகப் பார்த்தாலும் பெரியாரின் வெற்றியாகத்தான் கருதவேண்டும். ஆனால், இருவரின் கனவும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை எனும்போது பெரியார் தோற்றார்; ஜெயித்தவர் அண்ணாதான்! என்று எழுதியது சரியில்லைதான்.இதை யாரும் தெளிவாக குறிப்பிடாமல் இவ்வளவு வாதம் செய்வது ஏனோ?பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக அண்ணா ஆரம்பித்த கட்சி இன்று அதன் நிலை மாறி உரு மாறி, திரு. மு. கருணாநிதி அவர்களின் குடும்ப கட்சியாகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டது நியாயம்தானே. இதில் தவறென்ன இருக்கிறது? இன்னும் சொல்லப் போனால் அவர் தி.மு.க. Pvt. Ltd. என்று எழுதியிருந்தாலும் அது மிகையாகாது

சசி என்பவரின் கருத்து

இட ஒதுக்கீட்டைப் பற்றி இன்று அர்ஜூன் சிங் பேசுகின்றார் என்றால் அது அரசியல் ரீதியாகப் பார்த்தாலும் பெரியாரின் வெற்றியாகத்தான் கருதவேண்டும். ஆனால், இருவரின் கனவும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை எனும்போது பெரியார் தோற்றார்; ஜெயித்தவர் அண்ணாதான்! என்று எழுதியது சரியில்லைதான்இட ஒதுக்கீட்டைப் பற்றி இன்று அர்ஜூன் சிங் பேசுகின்றார் என்றால் அது அரசியல் ரீதியாகப் பார்த்தாலும் பெரியாரின் வெற்றியாகத்தான் கருதவேண்டும். ஆனால், இருவரின் கனவும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை எனும்போது பெரியார் தோற்றார்; ஜெயித்தவர் அண்ணாதான்! என்று எழுதியது சரியில்லைதான்........இனி எங்கள் விவாதம்இதைதான் நாங்கள் கேட்கிறோம், வாழ்க்கையில் நேர்மை நெறியை கடைபிடித்த‌வர்கள் விமர்ச‌னத்திற்க்கு அப்பாற்பட்ட‌வர்கள் என்று இந்தியாவில் க‌டைபிடிப்ப‌து ஒன்று தான்,இது கண்டிப்பாக‌ அவ‌ருக்கு தெரியும்அப்படி இருக்கும் போது ஏன் இதை அவர் செய்தார் ????????????அண்ணன் விரமணி அவர்களூம் கலைஞர் அவர்களூம் ஒன்றாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், அப்படி இருக்கும் போது இதன் முலம் பத்திரிக்கை வாழிலாக இவர்களிடம் இந்த கருத்தை பற்றி எதையாவது வாங்கி (இவர்களூக்குத்தான் 1 ரை 100 ஆக்கதெரியுமே)அதன் மூலம் மனகசப்பை ஏற்படுத்த நினைக்கிறார் போலும்?????

கலைஞரை இவர் அதிகமாகவே விமர்சனம் செய்கிறார் உங்களின் கருத்துக்கே வருகிறோம் (கலைஞரை விமர்சனம் செய்வது தப்பில்லை என்று சொல்கிறீர்கள்)சமிபத்தில் நடந்த ஒன்று பெண் ஒருவர் குடியரசுத்தலைவர் ராக வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்,கலைஞர் சென்னையில் இருக்கும் வரை பெண் ஒருவர் குடியரசுத்தலைவர் வருவதற்க்கான வாழ்ப்பே இல்லாமல் தான் இருந்தது இது அனைவராலும் ஒத்துகொள்ள படவேண்டிய ஒன்று.பிறகு கலைஞர் டெல்லி சென்ற பின்பே பெண் ஒருவர் குடியரசுத்தலைவர் என்று முடிவானது இதை யாரும் மறுப்பதக்கு இல்லை.அப்ப‌டி இருக்கும் போது இவர் என்ன செய்திருக்க‌ வேண்டும் கலைஞரை இவர் பாராட்டி இருக்க வேண்டும் ???? இல்லை என்றால் என்னுடைய கருத்தை கலைஞர் எடுத்து நிறைவேற்றினார் அதற்க்காக என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்றாவது சொல்லி இருக்க வேண்டும் ?????ஆனால் இவர் சொன்னது என்ன????இவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதாக சொன்னார் ச‌ரி எழுதி இருப்பார், இவர் எழதிய கடிதத்தை பார்த்து தான் நிறைவேற்றினார் என்று சொன்னால் அனைவராலும் சிரிக்கப்படவேண்டிய ஒன்று ........................


விடாது கருப்பு என்பவரின் கருத்து

பொதுவாக நான் ஆர்குட் களேபரங்களில் மூக்கை நுழைப்பது இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அதிகம்பேர் ஆங்கில தட்டச்சே செய்கின்றனர். இரண்டாவது பெரிய பதிவாக இட முடிவது இல்லை. எனவேதான் ப்ளாக்கர் போன்ற இலவச தளங்களில் எங்கள் கருத்துக்களை வித்தியாசமாகச் செய்து வருகிறோம்.நண்பர்கள் சொல்லக்கேட்டு நேற்றும் இன்றும் வந்து படித்துப் பார்த்தேன். விவாதம் தலைப்பில் இருந்து விலகியதாகவே படுகிறது எனக்கு! ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைத்தவன் பாப்பான் இல்லை அவன் வேற என்கிறார் ராக்ஸ். வந்தவன் பாப்பான், இந்து முன்னணியைச் சேர்ந்தவன் என்று பார்ப்பனப் பத்திரிக்கையான தினமலமும் தினகரனும் தந்தியும் தினமணியும்கூட கட்டம் கட்டிப் போட்டிருந்ததௌ எப்படி மறந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் கேட்டால் என் பதிவில்ல் இருந்து காப்பி செய்து கொண்டு வர நான் தயார்.அடுத்து பாப்பானனயும் ஆரியனையும் குறைசொன்னால் பாப்பாபட்டி பாத்தியா கீரிப்பட்டியா பாத்தியா மேலவளவு பாத்தியா என்ற நக்கல் வேறு. அவர்களாவது மூன்று இடங்களில்தான் பிரச்னை செய்தார்கள். ஆனால் பாப்பான் அப்படியா? மொத்த இந்தியாவை அல்லவா சூறையாடினான்? தேன் போன்ற இனிமையுடைய தமிழ் இருக்க வாயில் நுழையாத சொல்லவே நாக்கூசும் வடமொழியை தேவபாடை என்று போற்றியவன் பாப்பான். நண்பர் ரொம்ப வருத்தம் கொண்டார்.. இடஒதுக்கீட்டால் தான் ரொம்ப கஷ்டப்படுவதாக! ஆனால் அவர் சற்றே சிந்திக்க வேண்டும், ஜாதியை கண்டு பிடித்தவன் யார்? ப்ரம்மாவின் மூக்குச் சளியில் இருந்து பிறந்ததாக ஏழை திராவிடனிடம் சொல்லி அவனை அடக்கி ஆண்டது யார் குற்றம்? முன்னர் நீங்கள் கண்டுபிடித்த ஜாதி வருண அமைப்பானது இப்போது உங்களுக்கே பாதகமானது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? உங்கள் பேச்சச பிறகு வைத்துக் கொள்வோம்.ஞானியின் எழுத்தில் வெளிப்படுவது ஆரிய மனமில்லாமல் வேறு என்ன? குழுவின் மாடரேட்டருக்கும் ஓனருக்கும் எத்தனை நாட்களாய்த் தெரியும் ஞானியை? திண்ணையின் அரைவிந்தன் நீலகுண்டனையோ மீன் தின்னும் பாப்பான் மலர் மன்னனையோ கேட்டுப் பாருங்கள் கருப்பனையும் கற்பக விநாயகத்தையும்! கலர் கலராய்ச் சொல்வார்கள்!!! ஏன் அவ்வளவு வேண்டாம். என்னைப் பற்றி திண்ணை தளம் நடத்தும் ராஜாராமிடமோ அல்லது அவரின் நண்பன் எனி இண்டியன் சிவக்குமாரிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நான் ஒரு சவாலை உங்கள் முன் வைக்கிறேன். பெரியார் பற்றிய திறந்த ஆபாசமில்லாத விவாதத்துக்கு நான் தயார்.

பெரியார் பற்றிய நேரடி கருத்து விவாதத்துக்கோ அல்லது ஆரியன் பாப்பான் திராவிடன் பற்றிய விவாதத்துக்கோ நான் என்றும் ரெடி. என்னை எதிர்த்துப் பேச ஞானியோ அல்லது மாடரேட்டர் அல்லது ஓனர் அல்லது ஆரிய மனம் கொண்டவர்கள் தயாரா? ஆமெனில் என்னோடு மோதிப் பார்க்கட்டும்

யுவன் பிரபாகரன் என்பவரின் கருத்து

கருப்பு அது விடாது கருப்பு...கருப்பு துவங்கலாம்.. விவாதத்தை....ஒருத்தரும் காணும்

தமிழ் என்பவரின் கருத்து

ஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்… தலைப்பை ஆரம்பம் முதல் பார்த்து வருகிறேன்.. தேவை இல்லாத வினாக்கக்களை கொடுத்துவருபர்களுக்கு அதற்கு தக்க உண்மையான பதில்களை கொடுத்து வரும் ந‌ண்பர்கள் மணி.செந்தில், சசி, ஆகியோரை பராட்டுகிறேன்.இதில் க‌வனிக்க வேண்டிய சிலவற்றை இந்த குழிவின் நடத்துனர் சரிவர‌ செயல்படவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. தலைப்பு மாறிய உனடே அதை சொல்லிருக்கவேண்டும். சசியை குழுவில் இருந்து நீக்கிய நடத்துனர் கீரீடத்தையும் தூக்கி இருக்க வேண்டும். சசியின் முழு கருத்தையும் போட்டிருக்க வேண்டும் . அதை நடத்துனர் செய்ய தவ‌றிவிட்டார். ஞானி ஆனந்தவிகடனில் கலைஞரை பற்றி ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை ஓ பக்கங்களில் விரிவாக எழுதியிருந்தார். அதை படிக்கும் போது நான் எதிர்பார்த்தது அடுத்த வாரம் ஜெயலலிதா பற்றி என்றுதான் முடிப்பார் என்று எண்ணிகொண்டே படித்தேன். ஆனால் அவர் அவர் அவ்வாறு செய்யவில்லை. அது ஏன் என்றுதான் எனக்கு விலங்கவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர் கிரிடம் ராக்ஸ்
இதற்கு காரணகர்த்தா யார் என்று இவருக்கும் இவருடம் துனைவரும்பர்கர்களுக்கும் என் பகுத்தறிவு பகலவன் அன்றே சொன்ன‌ பதில்..."சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால், தங்களுக்கு ஆபத்து என்று கருதி, பல இனமாக ஆக்கிவிட்டார்கள். ஆகவே, இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை. இப்படிப்பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டி விடுகிறார்களே ஒழிய வேறில்லை.பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி. பார்ப்பன மதம், பார்ப்பனப் புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள் இவைதான் நமக்கு எதிரிகளேயொழிய வேறில்லை. ‘பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள்' என்பதை ஆதிதிராவிடர் ஆகிய நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.(புதுடெல்லியில் 15.2.1959 அன்று அம்பேத்கர் பவனத்தில் ஆற்றிய சொற்பொழிவு) "வாருங்கள் கருப்பு.. க‌ல‌க்கலாம்

சக்திவேல் என்பவரின் என்பவரின் கருத்து

வேண்டும் ஒரு அண்ணா...ஞானியின் அந்த கட்டுரையில் அண்ணாவைப் போன்ற ஒரு அரசியல்வாதி வேண்டும் என்ற ஏக்கம்தான் தெரிந்தது. அதைத்தான் அந்த கட்டுரை முழுதும் வெளிப் படுதியுள்ளார். அவர் எழுதிய அந்த கட்டுரையிலிருந்து சில....///தமிழக அரசிய-லையே அடியோடு புரட்டிப்போட்ட தலைவரான அண்ணாவின் நூற்றாண்டு விழா இன்னும் இரண்டு ஆண்டுகளில் வருகிறது. ஆனால், அண்ணா உருவாக்கிய கட்சி, அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட கட்சி இரண்டுக்குமே இன்று அண்ணாவின் பெயரைக் கொண்டா டுவதற்கான தகுதி இல்லை. ஏனெனில், ஜனநாயகத்தில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தவர் அண்ணா.//////கருணாநிதிக்கு எதிராக அ.தி.மு.க&வை எம்.ஜி.ஆர். தொடங் கிய ஆரம்பத்திலிருந்தே, அது ஒரு நபர் ஆதிக்க அமைப் பாகத்தான் இருந்து வந்தது. அதே ‘கலாசாரம்’ இன்றும் தொடர்கிறது.//////அண்ணாவுக்குப் பின் அறிவுத் தேடல் மிகுந்த கட்சியாக இருந்த தி.மு.க&வும் அதைத் தொடர்ந்து வந்த அ.தி.மு.க&வும் அதிகாரம், கான்ட்ராக்ட், தரகு லாபங்கள் தேடும் கட்சியாக மாறின. சாக்ரடீஸ், இங்கர்சால், டிக்கன்ஸ், ஷேக்ஸ்பியர் என்றெல்லாம் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தேடிப் பிடித்துப் படித்த சூழல் நியாய-மாக இப்போது சார்த்தர், லெவி ஸ்ட்ராஸ், ரேமண்ட் வில்லியம்ஸ், சாம்ஸ்கி, மார்க்கோஸ் என்றெல்லாம் காலத்துக்கேற்ப வளரத் தொடங்கி-யிருக்க வேண்டும். அது நிகழவில்லை//////தன்னை முதலமைச்சராக்கிய எம்.ஜி.ஆரின் செல்வாக்கைக் குறைக்க, அவருக்குத் திரையுலகப் போட்டி-யாக தன் மகன் முத்துவைக் கொண்டு- வந்தார் கருணாநிதி. அதன் விளை-வாக தி.மு.க. பிளவுபட்டு, பலவீனப்-படுத்தப்-பட்டது. அடுத்த 15 ஆண்டு-களுக்கு, எம்.ஜி.ஆர். மறையும் வரை அவருடைய செல்வாக்கைக் கருணாநிதியால் குறைக்கவே முடியவில்லை. அண்ணா காலத்திய திமு.க&வில் அறிவிலும் ஆற்றலிலும் அண்ணா-வுக்குச் சில அங்குலங்கள் மட்டுமே அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்று சொல்லத்தக்க தலைவர்கள் குறைந்தது பத்து பேராவது உண்டு. ஆனால், கருணாநிதியின் தி.மு.க&வில், அவருக்கு அடுத்த நிலையில் ஒருவர்-கூட இல்லை. அடுத்தவர் ஸ்டாலின் தான் என்று சொல்லியாக வேண்டிய நிலை. எனவே, வைகோ போன்றவர்கள் வெளியேற வேண்டியதாயிற்று.///பெரியாரின் கொள்களை நிறைவேற்ற வேண்டுமானால் அண்ணாவைப் போன்ற ஒரு அரசியல்வாதி நம் தமிழ் நாட்டுக்குத் தேவை என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

இது பற்றி உங்கள் கருத்து என்ன?அதே கட்டுரையியில் ஞானி இதையும் குறிப்பிட்டுள்ளார்இரண்டு மாதங்களுக்கு முன்பு கருணாநிதியின் அரசு அமைத்த தமிழக கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்துக்கு உறுப்பினர்களாக முதலமைச்சர் நியமித்த முக்கியமான இருவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களான வேதாந்தம், ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஆகியோர்.கிராமக் கோயில்களின் மரபான தமிழ் வழிபாட்டு முறைகளை நீக்கி-விட்டு, அவற்றையும் சம்ஸ்கிருதமய-மாக்கி வைதிக மரபுக்குக் கொண்டு செல்லும் வேலையில் ஆர்.எஸ்.எஸ். கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வரு-கிறது என்ற குற்றச்-சாட்டை பெரியார் அமைப்புகளும் இடதுசாரிகளும் சொல்லி வருகின்றன. இதற்கு முன்பு பி.ஜே.பி&யுடன் கூட்டணி இருந்த காலத்திலும், இவர்களை அரசு வாரியத்தில் நியமித்தார் கருணாநிதி. இப்போது பி.ஜே.பி&க்கு எதிரான காங்கிரஸ§டன் கூட்டணி இருக்கும்போதும் நியமிக்கிறார்.இது பற்றி உங்கள் கருத்து என்ன

ஞானி கட்டுரையை இவ்வாறு முடித்துள்ளார்.சுய மரியாதை இயக்கம் நீதிக் கட்சியில் இணைந்ததும், நீதிக் கட்சி, திராவிடர் கழகமாகப் பெயர் மாறியதும், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானதும் காலத்தின் கட்டாயங்கள். அவற்றால் தமிழ் சமூகம் அடைந்த லாபங்கள் கணிசமானவை. இந்த சங்கிலித் தொடரில், ‘தி.மு.க. பப்ளிக் லிமிடெட்’டின் உதயம் என்பது பரிணாம வளர்ச்சி அல்ல! இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகம் அண்ணாவின் நூற்றாண்டைக் கொண்டாட இருக்கும் சூழலில், இன்னொரு திராவிட இயக்க வருகைக்காகத் தமிழகம் காத்திருக்கிறது. குடும்பத்தைக் கட்சியாகக் கருதாமல், கட்சியைக் குடும்பமாகக் கருதிய அண்ணாவைப் போன்ற தலைவர்கள் புதிய தலைமுறையிலிருந்து வந்தால்தான் அத்தகைய இயக்கத்தை சாத்தியப்படுத்த முடியும்!இது உண்மைதானே. இதில் தவறென்ன இருக்கிறது?

ஜெயலலிதாவின் செயல்கள் தான்தோன்றித் தனமானவை. அதையும் அவர் குறிப்பிடத் தவரவில்லை. இதைத்தான் அவர் நாகரீகமாக "கருணாநிதிக்கு எதிராக அ.தி.மு.க&வை எம்.ஜி.ஆர். தொடங் கிய ஆரம்பத்திலிருந்தே, அது ஒரு நபர் ஆதிக்க அமைப் பாகத்தான் இருந்து வந்தது. அதே ‘கலாசாரம்’ இன்றும் தொடர்கிறது. " என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஜெயலலிதா கடந்த பி.ஜே.பி. ஆட்சிகாலத்தில் தமிழக முதலமைச்சராக இருந்தபோது அவர் பி.ஜே.பி. அரசிடம் வைத்த கோரிக்கைகளை அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா ‘ஒரு சுதேசி சீர்திருத்தவாதியின் ஒப்புதல் வாக்கு மூலம் & என் நிதி அமைச்சர் பணிக்காலம்’ என்ற தலைப்பில் சுயசரிதைப் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை மேற்கோள்காட்டி ஞானி எழுதிய மற்றொரு கட்டுரையை இதே குழுமத்தில் வேறு ஒரு புதிய தலைப்பை ஆரம்பித்துள்ளேன். அதையும் படித்துப் பார்க்கவும்.http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=18053900&tid=2545266248900105841&start=1

இளையா என்பவரின் எதிர்வினை

@Sakthivel.Correct'a dhaan kettu irukkeenga. Aana avargaludaya (Mani senthil & Co.) thevai idhuvalla. Yaaraavadhu oru kurippitta samoogathai serntha nabar thevai. Avaraippatri geli, kindal pesi asaippoada. Unmai'ai sonnaal avargalukku kasakkum.Ivargalai pondravargal kurippitaa samoogathaeyae pazhithu pesuvadhaal periyar orkut community'ku nerndha nilamayai paarungalhttp://www.orkut.com/Community.aspx?cmm=8468739Periyar peyarai sollikondu pagai valarppavargalai vida kandikkapadavendiyavargal Periyar'in peyar'ai naasam seiyum kayavargal


சக்திவேல் என்பவரின் என்பவரின் கருத்து

Jul 24 (3 days ago)
ஜெயலலிதாவின் ஈகோ மனப்பான்மை2001 தேர்தலில் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தது பற்றி இப்போது பிரச்சனை எழுந்துள்ளது. அதுபற்றி ஞானி இவ்வாறு எழுதியுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகளுக்குப் புறம்பாக இரு தொகுதி களுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்த ஜெயலலிதா மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் இப்போது முன்வந்துள்ளது. தானாக முன்வரவில்லை. உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்து, நீதிபதி அதை ஏற்று உத்தரவிட்ட பிறகுதான், தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஜெயலலிதா தவறு செய்தது 2001 தேர்தலில். ஏன் நடவடிக்கை எடுக்க இத்தனை தாமதம்? அவர் முதலமைச்ச-ராக இருந்ததாலா? இப்போது அவர் முதல்வராக இல்லாததால்தான் இந்த நடவடிக்கை நிகழ்கிறது; முதல்வராக இருந்தால் இப்போதும் நடக்காது என்று சாதாரண மனிதன் நினைப்பதை எப்படி, யார் தடுக்க முடியும்? இப்போதும் நீதிமன்றம் உத்தரவிடாவிட்டால் இது நடக்காது அல்லவா? ஜெயலலிதா ஆட்சிக் காலத்-தில் சங்கராச்சாரியார் குற்றம்சாட்டப்-பட்ட கொலை வழக்கு இப்போது என்ன ஆயிற்று? வழக்கு விசாரணை அப்போது வேகமாக நடந்தது போலவும், இப்போது மெத்தனமாகிவிட்டது போலவும் சாதாரண மனிதனுக்குத் தோன்றுவதை யார், எப்படித் தடுக்க முடியும்? தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்று மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருக்கும் அமைப்புகள்கூட, அரசியல் காற்று வீசும் திசைக்கு ஏற்ப இயங்குவதாக மக்களுக்குப் படுவதை எப்படி அவர்கள் மாற்றி அமைக்கப்போகிறார்கள்? நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தது மிகமிக வெளிப்படையாகத் தெரியும் குற்றம். அதில் முதல்கட்ட நடவடிக்கை எடுக்கவே ஐந்தாண்டுகளானால், இறுதித் தீர்ப்பு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? இப்படிப்பட்ட அத்துமீறல்களுக்கும் கோளாறுகளுக்கும் அடிப்படைக் காரணமே, ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்ய சட்டத்தில் அனுமதித்-திருப்பதுதானே? ஏன் இரு தொகுதிகள் வரை அனு-மதிக்க வேண்டும்? ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடக் கூடாது என்பதுதானே நியாயம்? அதைச் செய்யத் தயங்குவது ஏன்?பகிரங்கமாக ஒரு குழந்தைக்குக்கூடப் புரியும் தவற்றைச் செய்தி-ருக்கும் ஜெயலலிதாவை, அதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்க விடாமல் எது தடுக்கிறது? ‘நான் என்ன செய்தாலும் அது தவறாகாது. நான் என்ன செய்கிறேனோ அதுதான் சரி!’ என்கிற, வழக்கமான அவருடைய ஈகோ மனப்பான்மை-தானே

வன் சொற்கள் தேவையா?@ Ilayaநானும் அதைப் பார்த்தேன். அந்த குழுமத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? ஒரு modarator கூட இல்லாமல் அந்த குழுமத்தை நடத்தி வந்துள்ளார்கள். ஒருசிலர் செய்யும் தவறுகளால் தி.க.காரர்கள் பொதுவாகவே அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள் என்ற தவறான் கருத்து மற்றவர்கள் மத்தியில் உள்ளது. நண்பர் மணி செந்தில் குமார் தகாத வார்த்தைகளை இதுவரை எங்கும் உதிர்க்கவில்லை என்றாலும் அனைவரும் அவ்வாறு இருப்பதில்லை.பெரியாரின் பால்ய நண்பர் ராஜாஜி. ஆனால் பெரியார் அவரை கொள்கையளவில்தான் எதிர்த்தாரே தவிர தகாத வார்த்தைகளை உதிர்த்ததாக வரலாறு கிடையாது. அவர்களிருவரும் சந்திக்கும்போது அன்போடு உரையாடுவார்கள் என்றுதான் நான் கேள்விப்பட்டுள்ளேன். இதை சமீபத்தில் வெளியான பெரியார் படத்திலும் நன்கு பதிவு செய்துள்ளனர். பெரியாரும் பார்ப்பான், வெங்காயம் (இவை வன் சொற்கள் அல்ல) என்ற சொற்கள் தவிர வேறு கடினமான சொற்கள் உதிர்த்ததில்லை.

மணி.செந்திலின் பதில்

எங்கள் பயணச் சுவடுகளை பறிமுதல் செய்ய முடியாது..

நண்பர் சக்திவேல் நீங்கள் ஆதரவளிக்கும் வேகத்தில் ஞானியின் எழுத்துகள் குறித்த சில உண்மைகளை மறந்து விடுகிறீர்கள், அல்லது மறைத்து விடுகிறீர்கள். நீங்களே ஞானி எழுதியது தவறு என்று சொல்கிறீர்கள். அதே சமயத்தில் தி.மு.க. குறித்தான தாக்குதல் நியாயம் என்று வாதிடுகிறீர்கள்.

தி.மு.க.வின் வாரிசு அரசியல் குறித்து ஞானி வருந்துவது எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது. அரசியலை இவர் பார்க்கும் பார்வையில் ஏராளமான தடுமாற்றங்களும், தவறுகளும் உள்ளன. உலக அரசியல் மற்றும் இந்திய அரசியலை எடுத்துக் கொண்டால் வாரிசு அரசியல் என்ற எதிர் வாதம் மிகப் பழமையான ஒன்று. நேருவின் மகள் இந்திரா, பிற வாரிசுகளான சஞ்சய், ராஜீவ், சோனியா, ராகுல், வருண், மேனகா, ராஜஸ்தானில் சிந்தியா குடும்பம், கர்நாடகாவில் தேவ கவுடா குடும்பம், ஆந்திராவில் என்.டி.ஆர் குடும்பம், பீகாரில் லல்லு குடும்பம், மும்பையில் பால்தாக்கரே குடும்பம், வட மாநிலங்களில் சௌதாலா குடும்பம், பூட்டோவின் மகள் பெனாசிர் பூட்டோ, புஷ்ஷின் மகன் புஷ், கிளிண்டன் மனைவி ஹிலாரி… என நீளும் இந்தப் பட்டியலில் தமிழ் நாடும் விதிவிலக்கல்ல. மருத்துவர் அய்யா குடும்பம், மூப்பனார் குடும்பம், ஈ.வி.கே.சம்பத் குடும்பம், குமரி அனந்தன் குடும்பம், என இங்கும் நீள்கிறது அந்தப் பட்டியல். எனவே, தி.மு.க. மட்டும்தான் உலக அரசியல் வரலாற்றில் வாரிசு அரசியல் போக்கை முன் வைக்கிறது என்று சொல்வது மிகவும் தவறு. அரசியல் சார்ந்த ஒரு குடும்பத்தில் அரசியல் வாரிசுகள் உருவாவது இயல்பான ஒன்று என்றே கருதுகிறேன். தலைவராவதில் வாரிசுகளுக்கு தகுதி இருக்கிறதா என்றுதான் ஆராய வேண்டுமே தவிர அவர் ஒரு தலைவரின் மகன் என்பதால் மட்டுமே தகுதிக் குறைவோ அல்லது அதுவே தகுதியாகவோ ஆகிவிடுமா என்ன..?

கலைஞரின் மகன் ஸ்டாலின் என்பதால் மட்டுமே தி.மு.க. தலைவர் பதவிக்கு அவர் வரக் கூடாது என்று ஞானி விரும்புவது ஜெயா டி.வி.க்கே வெளிச்சம். உட்கட்சி ஜனநாயகம் என்பது தொண்டர்களைச் சார்ந்தது. சோனியா அரசியலுக்கு வர மறுத்தும் கூட காங்கிரஸ் தொண்டர்களின் தீவிர நிர்ப்பந்தத்தால் அரசியலுக்கு வர நேரிட்டது. தொண்டர்களின் நிர்பந்தம் சில சமயங்களில் தலைவர்களையே தடுமாற வைத்திருக்கிறது. உதாரணம் வைகோ.

நான் ஏற்கனவே சொன்னது போல கலைஞர் மீதும், திராவிட இயக்கங்கள் மீதும் ஞானிக்கு உள்ள கோபம் ஆராயத் தக்கது. ஜெயலலிதாவை விமர்சிக்கும் ஞானியின் போக்கு ஜெயலலிதாவையும், திராவிட இயக்கங்களையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்த முயலும் சதியே ஆகும். தி.மு.க. வளர்ச்சி குறித்து கவலைப்படும்(?) ஞானி, தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினரோ அனுதாபியோ அல்ல. ஞானியின் நோக்கமே வேறு. ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கம் என்பது இன்று வீழ்ச்சியடைந்து விட்டது என்று பரப்பவே முயல்கிறார் அவர். திராவிட இயக்கங்களின் செயல்பாடு இன்றைய நவீன கணிணி யுகத்தில் பல சவால்களை உள்ளடக்கியதாகும்.. அரசியல் என்பதே அன்றாட சமரசங்களுக்கும், தினந்தோறும் தோன்றும் வியூக அமைப்புகளுக்கும் வளைந்து கொடுத்து வாகை சூட முயல்கிற ஒன்றாகி வெகு நாட்களாகி விட்டன. இதில் பெரியார் என்ற ஆளுமையோடு நெருங்கியிருப்பவர் கலைஞரா, ஜெயலலிதாவா?

தி.மு.க.வை திரு.மு.க. பப்ளிக் லிமிட்டெட் கம்பெனி என்று வர்ணித்து ஆனந்தப்படும் ஞானி அதிமுக குறித்து என்ன வர்ணிக்கப் போகிறார்? சன் டி.வி. குடும்ப சொத்து என்றால், ஜெயா டி.வி. என்ன மக்கள் சொத்தா..? முரசொலி குடும்பப் பத்திரிகை என்றால் நமது எம்.ஜி.ஆர். அரசு பத்திரிகையா? விமர்சிக்கும் போதும் தன் ரத்த பாசத்தை ஒதுக்க முடியாமல் தடுமாறுகிறார் ஞானி. அவருக்கு வேண்டியது ஊடகப் பரபரப்பு. அதைச் சம்பாதிக்க வளைத்து வளைத்து எழுதி வருகிறார் ஞானி.

பெரியார் குறித்து தந்தை பெரியார் குழுமத்தில் மன நிலை பாதிக்கப் பட்ட நோயாளிகள் சிலர் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதை நண்பர் இளையா சுட்டிக் காட்டியுள்ளார். அவருக்கு என் நன்றி. மன நிலை பாதிக்கப் பட்டவர்கள் உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். இந்த வகையில் இவர்களை பொருட்படுத்தாமல் அருவருப்புடன் விட்டு விலகிச் செல்வதே சரியானது. குழுவை உருவாக்கிய நண்பருக்கு குறிப்பு எழுதியுள்ளேன். மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன். அதற்காக தி.க.காரர்கள் ஆபாச வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள் என்ற தவறான கற்பிதம் வேண்டாம். நிர்வாண சாமியார்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் ஆட்கள் நாங்கள் இல்லை. பெரியாரை ஆபாசமாக விமர்சிப்பவர்கள் யாராக இருக்க முடியும் என்பதை உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

நண்பர் இளையா என்னையும் மற்ற நண்பர்களையும் மணி. செந்தில் & கோ, என்று எழுதியுள்ளது எனக்கு வியப்பளிக்கிறது. ஞானி, இளையா, போன்றவர்கள் அண்மைக்காலமாக பப்ளிக் லிமிடெட், பிரைவேட் லிமிடெட், அண்டு கோ, போன்ற சொல்லாடல்களை பயன்படுத்துவதன் நோக்கம்தான் என்ன? ஏதாவது கூட்டுத் தொழில் செய்ய திட்டமா?!

நாங்களா பகை வளர்க்கிறோம்?... பெரியார் தோற்றார், பெரியாரின் கொள்கைகள் இன்னும் வேரூன்றவே இல்லை என்றெல்லாம் விஷமம் பேசிய ஞானிதான் பகை வளர்க்கிறார். ஒரு நல்ல விவாதத்தை நண்பர் இளையா பகை என்று எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான போக்கல்ல. ஏனென்று நாங்கள் கேள்வி கேட்டால் அது பகையா..? இல்லை பெரியாருக்குப் பின்னும் எங்களுக்கு கேட்கும் உரிமை வழங்கப் படவில்லை என்கிறீர்களா..? எங்களால்தான் தந்தை பெரியார் குழுமத்தில் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்று இளையா குறிப்பிடுவது கண்டனத்துக்குரியது. எங்களால் நியாயமான, நேரடியான கேள்விகளை முன் வைக்கக் கூடிய மனத்திடம் உண்டு. எங்களது கேள்விகளை பொறுத்துக் கொள்ள முடியாத, பெரியார் என்ற ஆளுமையின் கொள்கைக் கோட்பாட்டு வீச்சை தாங்கிக் கொள்ள முடியாத மனதளவில் பாதிக்கப் பட்டவர்கள்தான் அங்கே ஆபாசமாக எழுதியுள்ளார்கள். தந்தை பெரியார் எதிர்கொள்ளாத ஆபாச பேச்சு, ஏச்சுகளா..? பெரியார் வழி வந்தவர்கள் நாங்கள். எனவே இளையா சிறு பிள்ளைகள் பழி போடுவது போல எழுதாதீர்கள்.

கவிதை ஒன்றோடு இன்றைய எனது பத்தியை நிறைவு செய்கிறேன்..

பிணந்தின்னிக் கழுகுகளோ…
பகை வெறி நாய்களோ…
எனது பாதையில் வந்துவிட்ட போதும்
அந்த ஈனப் பிறவிகளால்
என் பயணச் சுவடுகளை
பறிமுதல் செய்ய முடியாது…

எனது நம்பிக்கை வெறி மிகுந்த இதயத்தை
துப்பாக்கி இரவைகளால்
துளைக்கவும் முடியாது…
- அறிவுமதி

சசி என்பவரின் பதில்

Jul 24 (3 days ago)
ஆம் நானும் நண்பர் செந்தில் அவர்களின் கருத்தையே முன்வைக்கின்றேன்

இளையா என்பவரின் பதில்

நண்பர் இளையா என்னையும் மற்ற நண்பர்களையும் மணி. செந்தில் & கோ, என்று எழுதியுள்ளது எனக்கு வியப்பளிக்கிறது. indha kurippitta thread'il ungal karuththai neraya nanbargal vazhimozhidhu irukkiraargal. Prabhakaran, Sasi, abimanu etc.,.. neengal indha thread'ai aarambiththadhaal edhechayaaga ungalai Oar aniyaaga seidhu mani senthil and Co. endru koorinaen ஒரு நல்ல விவாதத்தை நண்பர் இளையா பகை என்று எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான போக்கல்ல. ஏனென்று நாங்கள் கேள்வி கேட்டால் அது பகையா..? Verum pirappaal mattumae oruvar oru samoogathai sernthavar endra vaadhathai eduthukondu idhu varaikkum neengal pesikondiruppadhae ennai avvaaru ezhudha thoondiyadhu. http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=7222740&tid=2544772289023093886melulla link'la irukkura vivadham veroru community'la nadandhadhu. Adhil andha kurippitta ezhuthaalar avarudaya cinema vasanangalil thavarizhaithirukkalaam. Aaanal avarai edhirthu pesa ubayogikkum vaarthai eppadi irukka vendum endru therndheduthu kurippida vendum.Aanaal idhu varaikkum neenga adhu maadhiriyaana vaarthaigalai ubayogappaduthaathathaal ungalai andha Company'il serthathu punpaduthiyirunthaal mannikavum எங்களால்தான் தந்தை பெரியார் குழுமத்தில் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்று இளையா குறிப்பிடுவது கண்டனத்துக்குரியது. Ottumothamaaga endru kurippittadhai silar endru maatrikkolgiraen. Aanaalingae achil yetra mudiyaadha sila udhaarangal undu aanaal ennaal adhai seyya mudiyaadhu. Mannikavum.தந்தை பெரியார் எதிர்கொள்ளாத ஆபாச பேச்சு, ஏச்சுகளா..? பெரியார் வழி வந்தவர்கள் நாங்கள். எனவே இளையா சிறு பிள்ளைகள் பழி போடுவது போல எழுதாதீர்கள்.

யுவன் பிரபாகரன் என்பவரின் பதில்


நணபர் மணி செந்தில்குமார் அவர்கள் ஒரு சரியான விவாதத்தை ஒரு கொள்கைவாதிக்கான நேர்மையோடும் , பொறுப்போடும் முன் வைத்திருப்பது பாரட்டுதலுக்குரியது. மேலும் இந்த விவாதம் திசைமாற்றப்படும் போது தோழர்களால் திறமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. நம் கேள்வி இதுதான், ஞானியின் கவலை என்ன? பெரியார் தோற்றதாக மக்களிடம் பிரச்சாரம் செய்ய நினைக்கிறாரா? இல்லை அண்ணாவிற்கு நூற்றாண்டு விழா நடத்தும்போது தமக்கு ஒரு விருது கிடைக்கவேண்டும் என நினைக்கிறாரா? நண்பர் ஆரிய மனம் எனக்குறிப்பிடுவது ஒரே லட்சியத்திற்காக இயக்கங்கள் நடத்திய இரு தலைவர்களை ஒப்பிட்டு பின் இருவர் மீதுமே சேறு வீசும் முயற்சியில் இறங்கியுள்ளார் என்பதைதான். நம்மிடையே இல்லாத இரு தலைவர்களை எடைபோட நினைத்து ஞானி தன்னை தெளிவாக அடையாளம் காட்டிவிட்டார். நாம் இப்போது உணர்ச்சிவயப்பட்டு ஒரு தலைவரை நியாப்படுத்தினால் அந்த கசப்புணர்வை ரசிக்கலாம் என்ற ஞானியின் எண்ணம் கீழ்தரமானது.


இந்த தலைப்பில் பெரியாரை எதற்காக இழுக்கவேண்டும். அண்ணா பெரியாரால் உருவாக்கப்பட்டவர், திமுக ஆட்சியைப்பிடித்தபோது பெரியாரின் ஒப்புதலோடுதான் ஆட்சியமைத்தார் . கொள்கை மற்றும் தத்துவங்கள் காலத்திற்கு ஏற்றாற்ப்போல் மாறக்கூடியது , இதில் வெற்றி தோல்வியின் அளவுகோல் என்ன? பெரியார் தன் கருத்துக்களை முன் வைத்து வாழ்நாள் எல்லாம் போராடியதே வெற்றிதான் இல்லாவிட்டால் இன்றைய ஞானிகள் வாழ்நாள் மூடர்களாக இருந்திருப்பார்கள். பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லிக்கொண்டு அவர் தோற்றார் எனக் கூருவது தற்கொலைக்கு சமம் எனத்தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.பெரியாரின் தலைமை ஒரு இயக்கத்தின் தலைமை , அந்த இயக்கத்தின் அடிப்படை அதன் கொள்கைகள். பெரியார் கொள்கைகளை மட்டுமின்றி எதையுமே சிந்திக்காமலோ, கேள்விகேட்காமலோ ஏற்கக்கூடாது என்பதுதான் அவரது முதல் அறிவுரை. நீங்கள் ஏன் தலைவராக இருக்கவேண்டும் என யாரும் கேள்வி கேட்ககூடாது என்று பெரியார் சொன்னதாக தெரியவில்லை. பெரியார் கொள்கைக்கு சொந்தக்காரர், அந்த கொள்கைகளை விளக்கம் கேட்க கூடாது என்று கூறவில்லை. இன்றும் பெரியாரிய இயக்கங்கள் தொடங்குபவர்கள் தங்கள் இயக்கத்தின் தலைவர் பெரியார் என்றும் தாங்கள் செயற்தலைவர் என்றும் கூறிக்கொள்வதில் அறியலாம் அவர்களின் பண்பு. பெரியார் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூக சீர்திருத்தவாதி அவரை அரசியல் சித்து விளையாட்டில் பயன்படுத்த நினைப்பது கண்டிக்கத்தக்கது. இன்றும் என்றும் பெரியாரின் புகைப்படுத்தை பயன்படுத்தாத கட்சி ஒரே கட்சிதான். அண்ணாவின் வெற்றியே தந்தையின் வழிகாட்டுதலுக்கு கிடைத்த வெற்றிதான். பெரியார் இயக்க தொண்டர்கள் எண்ணிக்கையில் குறைவு ஆதலால் நாம் பெரியாரை விருப்பம்போல் விமர்சிக்கலாம் என்ற ஞானியின் அசட்டு துணிச்சல் அவரது பலவீனமே.


எஸ்.டி.பிரபாகர் என்பவரின் பதில்

எங்கேயோ படித்த ஞாபகம்.மரபில் இருந்த எந்த முட்டாள்தனத்தையும் அராஜகத்தையும் அரசாங்க தலையீடு இல்லாமல், சட்ட்த்தின் துணையில்லாமல் ஒழித்த வரலாறு நமக்குக் கிடையாது. சட்டம் இல்லாவிட்டால், உடன்கட்டை தொடரும்; குழந்தை மணம் தொடரும். சிசுக் கொலை தொடரும். சட்டத்தில் இட ஒதுக்கீடு இல்லாவிட்டால், 'கீழ் 'ஜாதிகள் ஒருத்தரும் படித்திருக்கவே முடியாது.மரபில் ஆரோக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை சாதிப் பழக்கம், மதப் பழக்கம், கடவுள் பெயரால் சாங்கியம் என்பதிலிருந்து விடுதலை செய்ய் வேண்டும்.என்பதுதான் பகுத்தறிவு. சிறிது இடம் கொடுத்தாலும், பாரம்பரியம், மரபு என்ற விஷ விருட்சம் இடுக்கில் வேர் பரப்பி கட்டடத்தையே தகர்க்க கூடியது.பெரியார் தொடங்கிய தகர்க்கும் பணி இன்னும் முடியவில்லை. காரணம் நமது சமூகத்தின் புத்திசாலிகள், பணத்துக்காக, புகழுக்காக, ஓட்டுக்காக நம்முடைய முட்டாள்தனங்களை சாமர்த்தியமாக நீடிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுடைய மாய்மாலங்களில் மயங்கி அவர்களுக்குத் துணை போவது முட்டாள்தனத்துக்கு எதிரானது என்று மயங்கும் முட்டாள்களுக்கும் நம்மிடையே குறைவில்லை.ஜெயலலிதாக்கள், கருணாநிதிகள், இல. கணேசன்கள், வேதாந்தங்கள் இத்யாதிகள் நமது சமூகத்தின் புத்திசாலிகள். சமயங்களில் ஒருவருக்கொருவர் எதிராக இருப்பது போன்ற மாயைகள் கூட நமக்கு ஏற்படலாம். அதுதான் அவர்களுடைய புத்திசாலித்தனம். இதை உணராமல் இருக்கும் நமது முட்டாள்தனம்தான் அவர்களுடைய மூலதனம்.அதனால்தான் பெரியார் தகர்த்து காலி செய்த இடங்களில் புதிய கட்டடங்களாகவும் பழைய மூடத்தனங்களையே மறுபடியும் கட்டி விட புத்திசாலிகள் முயற்சி செய்கிறார்கள். மக்களுக்குக் கொண்டாட்டங்கள் தேவைதான். ஆனால் அவை கடவுள், சாதி, மதங்களின் பெயரால் வந்தால், ஏற்றுக் கொண்டால், மீண்டும் கடந்த கால இருட்டிலேயே நிற்போம். பெரியார் போன்ற டார்ச் கையில் இருந்தும் இருட்டை நீக்க ஸ்விட்ச்சை அழுத்த மறுப்பது/மறப்பது முட்டாள்தனம்.

சசி என்பவரின் பதில்

யாராவது வாங்க பா

ஞானியின் பதில்

நண்பர்களே வணக்கம்.ஞாநி&தி ரைட்டர் என்ற கம்யூனிட்டியை நடத்துவோருக்கு ஒரு வேண்டுகோள். இந்த கம்யூனிட்டியை அழித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். காரணம், பல இணைய தளங்களில் நேரும் அதே விபத்து இதிலும் நேர்வதுதான். பொறுப்பற்ற விவாதம், தடித்த சொற்கள், முன்வாசிப்பு இல்லாமலே முடிவுக்கு வருவது, போகிற போக்கில் அவதூறுகளை அள்ளி விடுவது முதலியன இங்கும் நிகழ்ந்துவருகின்றன. திண்ணையில் இப்படிப்பட்ட இரு நிகழ்வுக்குப் பின், இதனால்தான் நான் இணையத்தை கடித, தகவல் பரிமாற்றம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்துவதில்லை. ஆர்க்குட் வந்தபிறகு இந்த அணுகுமுறையில் சிறிது நெகிழ்வை நான் மேற்கொண்டதும் அர்த்தமற்றது என்று இப்போது உணர்கிறேன். என் கருத்துக்களுக்கு எதிரான விமர்சனத்துக்கோ, மாற்றுக் கருத்துக்களுக்கோ நான் அஞ்சுபவன் அல்ல. ஆனால் விமர்சனம் என்ற பெயரில் அவதூறுகளை செய்வது அருவெறுப்பாக இருக்கிறது.இந்த விவாதத்தைத் தொடங்கிய மணி.செந்தில் 30 வயதுக்காரர் என்று அவரது தளத்தில் அறிந்தேன். எனக்கு வயது 53. என் 20ம் வயது முதல் 33 வருடங்களாக கடவுள்,சாதி,மத மறுப்பாளனாக வாழ்ந்துவருகிறேன். பெரியாரைப் பற்றி 28 ஆண்டுகளுக்கு முன்பே என் 25ம் வயதில் அவர் நூற்றாண்டு சமயத்தில் கணையாழியில் எழுதியிருக்கிறேன். அவரது 125வது ஆண்டை ஒட்டி நான் தூர்தர்ஷன் பொதிகைக்காக உருவாக்கிய அய்யா என்ற இரண்டரை மணி நேரப் படமும், அப்போது ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரையும், சில வருடங்கள் முன்னர் தீம்தரிகிட இதழில் எழுதிய தமிழர் அறிவைத் தடுத்தாரா பெரியார் ? என்று ஜெயமோகனையும் சுந்தர ராமசாமியையும் விமர்சித்து எழுதிய கட்டுரைகளும் பெரியார் பற்றிய என் கருத்து, மதிப்பீடு என்ன என்பதை தெளிவாக உணர்த்தும் என் சில படைப்புகள். நான் இளைஞனாக மலர்ந்தபோது பெரியார் உயிரோடு இல்லை. ஆனால் அவர் எழுதியதையும் அவரைப் பற்றி எழுதப்பட்டவற்றையும் தேடித் தேடிப் படித்துத் தான் அவரை உணர்ந்தேன். பெரியாரை முற்றாகப் படிக்காமலே அவரை வசை பாடுவோர் போல, என்னையும் முற்றாகப் படிக்காமலே வசை பாடவேண்டாம்.என் அரசியல் விமர்சன வாழ்க்கையில் ஒரு முறை கூட நான் எம்.ஜி.ஆரின் அரசியலையோ, ஜெயலலிதாவின் அரசியலையோ ஆதரித்ததில்லை. தொடர்ந்து எதிர்த்திருக்கிறேன். கருணாநிதியின் குடும்பப் பாசம், வாரிசு அரசியல் போக்கு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவரையே 21ம் நூற்றாண்டு தொடக்கம் வரை ஆதரித்திருக்கிறேன். தேசிய முன்னணி உருவாக்கப்பட

தேசிய முன்னணி உருவாக்கப்பட்ட போது, வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராகவும், முரசொலியின் புதையல் இணைப்பின் ஆசிரியராகவும் நான் செய்த பணிகள் அவரும் அவரது சகாக்களும் நேரடியாக அறிந்தவை.நான் அவரைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியது அவர் வாஜ்பாய்&ஆர்.எஸ்.எஸ் கூட்டணியில் இணைந்தபோதுதான். பெரியார் இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு எதிராக அப்போது அவர் போய்விட்ட நிலையில் இனியும் அவரை அவரது இதர குறைகளை மீறி சகித்துக் கொள்ள எந்த நியாயமும் இல்லை என்றாகிவிட்டது.இப்போது மணி செந்தில் எடுத்துக் கொண்டு விவாதிக்கும் கட்டுரையே பெரியாரின் கோட்பாடுகளிலிருந்தும் அண்ணாவின் வழிமுறைகளிலிருந்தும் கருணாநிதி எப்படி விலகிப் போய் கட்சியை தனிச்சொத்தாக்கிவிட்டார் என்பது பற்றிய கட்டுரைதான்.இதில் எழுப்பப்பட்ட எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்ல வழியற்ற நிலையில், பல கருணாநிதியின் ஆதரவாளர்கள் என்னைப் பார்ப்பான் என்று அவதூறு செய்வதிலும், பெரியாருக்கு எதிரி என்று நேர்மாறான பொய்யை கெப்பல்ஸ் பாணியில் சொல்லிச் சொல்லி நிறுவ முயற்சிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.என் 33 வருட பத்திரிகையுலக வாழ்க்கையில் நான் எழுதிய அனைத்தும் நான் யார் என்பதற்கு சாட்சியங்கள். என் தனி வாழ்க்கையை அறிந்த அனைவருக்கும் நான் தினசரி வாழ்க்கையில் பகுத்தறிவாளனாக, சாதி&கடவுள்&மத மறுப்பாளனாக வாழ்வதையும் அறிவார்கள். என்னை விமர்சிக்கும் முன்னால் தயவுசெய்து தொடர்ந்து 33 வருடமாக நான் என்ன செய்து வந்திருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொண்டு விமர்சியுங்கள்.இன்று வரை என் பொது வாழ்க்கையில் என்னைக் கொல்லுவதாக, உதைப்பதாக, என் கட்டுரையை வெளியிட்டதற்காக பத்திரிகை அலுவலகத்தை எரிக்கப் போவதாக மிரட்டியவர்கள் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியினர்தான். இதுவே என் நிலைப்பாடு என்ன என்பதை உணர்த்தும். கருணாநிதி தி.மு.கவை சீரழித்ததைப் பற்றிய என் ‘தேவை இன்னொரு அண்ணா’ கட்டுரையில் கூட சில மாதங்களுக்கு முன்பு அவர் ஆர்.எஸ்.எஸ்காரர்களை கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்துக்கு அரசு உறுப்பினர்களாக நியமித்ததை குறிப்பிட்டிருந்தேன். அந்தக் கட்டுரையில் பெரியார்& அண்ணா பற்றி நான் எழுதியதற்கு என்னைத் தொடர்ந்து அவதூறு செய்து வரும் கருணாநிதியின் ஆதரவாளர்கள் இதைப் பற்றி வாயைத் திறக்கவில்லை. பூணூல் போட்ட வேதாந்தத்தையும் ஆர்.பி.வி.எஸ்.மணியனையும், பி.ஜே.பியுடன் கூட்டணி இல்லாத வேளையில் கூடப் பதவி கொடுத்து சூத்திரக்

பூணூல் போட்ட வேதாந்தத்தையும் ஆர்.பி.வி.எஸ்.மணியனையும், பி.ஜே.பியுடன் கூட்டணி இல்லாத வேளையில் கூடப் பதவி கொடுத்து சூத்திரக் கருணாநிதி குஷிப்படுத்துவதன் ரகசியம் என்ன என்பது அவர்களுக்குத்தான் தெரியும். ஜயேந்திரர் கைதின்போது நாங்களெல்லாம் சங்கர மடத்தை ஒழிக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய போது கப்பலின் மாலுமியைத்தான் மாற்ற வேண்டும் என்று திருவாய் மலர்ந்தவர் திருக்குவளையார். என்னைப் பொறுத்தவரையில் கருணாநிதி இன்று சூத்திரர் அல்ல. அவர் ஒரு புதுப்பார்ப்பனர். பரமாச்சாரியார், வாஜ்பாயி பாணியிலானவர். ஜெயலலிதா ஒரு ஜயேந்திரர், அத்வானி வகையிலானவர். இதில் ஒரு வகையினர் தானே அம்பலமாகிவிடக்கூடியவர்கள். மறுவகையினரோ அம்பலப்படுத்தவே மிகக் கடினமானவர்கள். இந்தப் பார்வையிலிருந்துதான் நான் விமர்சிக்கிறேன். தொடர்ந்து விமர்சிப்பேன். கடும் உடல் நலக் குறைவுகளுடன் பணி புரிந்து வரும் நான், அவதூறுகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு என் சொற்ப நேரத்தையும் மிகக் குறைந்த சக்தியையும் கூட வீணாக்கவிரும்பவில்லை என்பதால், இனி ஆர்க்குட் ஞாநி&தி ரைட்டர் தளத்தில் பங்கேற்கமாட்டேன்.இந்தக் கடைசிக் கடிதம், தூங்குவது போல நடிக்கும் கருணாநிதி ஆதரவாளர்களுக்காக எழுதப்படவில்லை. உண்மையைத் தேடும் பொது வாசகருக்காக மட்டுமே எழுதப்பட்டது. என்னை தற்போது படிக்கத்தொடங்கியிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள். மனிதன் பதில்கள், கேள்விகள், ஓ பக்கங்கள், நெருப்பு மலர்கள், அயோக்கியர்களும் முட்டாள்களும், பேய் அரசு செய்தால் , ? , தவிப்பு முதலான என் நூல்கள் இப்போதும் கிடைக்கின்றன. பழைய பேப்பர், மறுபடியும் என்ற இரு நூல்கள் மட்டுமே தற்போது பிரதிகள் இல்லை. அவையும் தமிழக நூலகங்களில் உள்ளன. தயவுசெய்து படியுங்கள்.நான் பார்ப்பான் அல்ல. நான் சூத்திரன் அல்ல. நான் தலித் அல்ல. இந்த வேறுபாடுகள் களையப்பட்டு சமத்துவ சமூகம் ஏற்படவேன்டும் என்று விரும்பும் ஒரு மனிதன். நான் ஒரு பார்ப்பன வீட்டில் பிறந்ததோ, மணி செந்தில் ஒரு சூத்திரர் வீட்டில் பிறந்ததோ, வெறும் விபத்து. அந்த விபத்தை வாழ்க்கை முழுக்கக் கட்டிக் கொண்டு அழ நான் தயாராக இல்லை. எவருமே தங்கள் பிறப்பு எனும் விபத்தை தூக்கி எறிந்துவிட்டு மனிதன் என்ற அடையாளத்தை தமதாக்கிக் கொள்ள வேன்டும் என்பதே என் விருப்பம். அப்படி முயற்சிப்போர் அனைவருக்கும் சிறு துணையாக இருப்பதே என் எழுத்தின் நோக்கம்.விடைபெறுகிறேன்.நன்றிஞாநி

எஸ்.டி.பிரபாகரின் எதிர்வினை

Gnani avargalin padhivirkku mun ennudaya rendu post'um (எங்கேயோ படித்த ஞாபகம்) endra topic'il iruppadhum Gnani avargalaal veroru thalathil ezhudhappatta ondrae Adhil irundhae Periyar'ai patri Gnani'udaya siru pakkathai paarkalaam Pirappaal oruvar oru samoogathai sernthavar endra ondrai mattumae pidithukkondu vaadham seivadhu vaadham alla. Pidhatralae

மீண்டும் ஞானி

2:31 pm (9 hours ago)
விட்டுப் போன என்னுடைய இன்னொரு நூலின் பெயர்: கண்டதைச் சொல்லுகிறேன்

அபிமன்யு என்பவரின் பதில்

vanakkam gnani sirநேரடி விவாதத்கே வந்து விட்டீர்களா ?வருக !!! வருக !!தங்கள் சொற்பொழிவை தருக,, தருக,,,அறிந்தும் அறியாமலும்.. இருக்கும் எங்களுக்குஓ போட ஒரு கருத்தை சொல்லுங்க


மணி.செந்திலின் பதில்
ஞானி அவர்களுக்கு,

நான் முதலில் தி.மு.க.வின் அபிமானியோ அடிப்படை உறுப்பினரோ அல்ல. திராவிட இயக்கங்களின் எழுச்சியால் பயன் பெற்ற கோடான கோடி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் ஒன்று எனது குடும்பமும். எனவே திராவிட இயக்கங்களை ஒட்டு மொத்தமாக வீழ்த்தி நீங்கள் சரித்துக் காட்டியது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஒன்றாகவே நான் கருதுகிறேன். எனது கடந்த பத்திகளை வாசித்துப் பாருங்கள். ஒரு தவறான, மரியாதை குறைவான, இழிவான சொல்லை நான் எங்குமே பயன்படுத்தியதில்லை.

நான் மீண்டும் கேட்கிறேன்…..

1. தவறான அணுகுமுறையோடு, உள்நோக்கத்தோடு நீங்கள் அண்ணாவையும்,
பெரியாரையும் ஒப்பீட வில்லையா?

2. அரசியல் ரீதியாக பெரியார் தோற்றார், பெரியாரின் கொள்கைகள் இன்னும் வேரூன்றவே இல்லை ஜெயித்தவர் அண்ணாதான்…. என்று நீங்கள் எழுதவே இல்லையா?

3. பெரியார் தன் தலைமையைக் கேள்வி கேட்காமல் ஏற்பவர்களை மட்டுமே கொண்டு இயக்கம் நடத்த விரும்புவதாக அறித்தவர் –என்று நீங்கள் எழுதவே இல்லையா?ஆனால் அண்ணா உட்கட்சி ஜனநாயகம் உடைய கட்சியை
உருவாக்கியவர்- என்று நீங்கள் எழுதவே இல்லையா?

4. 1917-ல் காங்கிரஸில் இணைந்தது முதல் ,1949 –ல் திராவிடர் கழகத்தை நடத்தியது வரை வெகு ஜன இயக்கத் தலைவராக இருந்தவர் பெரியார். 1948-லிருந்து அந்த இடத்தை தனதாக்கிக் கொண்டவர் அண்ணா- என்று நீங்கள் எழுதவே இல்லையா?

ஆம் என்று நீங்கள் உண்மையை ஒத்துக்கொண்டால் நீங்கள் உண்மையான பெரியாரிஸ்ட்தானா என்று கேள்விகள் எழுவதில் என்ன தவறு இருக்கமுடியும்?

நான் அப்படி எழுதவே இல்லை என்று நீங்கள் மறுத்தால் இந்த விவாதத்தை நாங்களும் தொடர விரும்பவில்லை.

நாங்கள் அவதூறுகளை பரப்பியதாக சொல்லியுள்ளீர்கள். நான் மேலே கேட்ட கேள்விகளில் என்ன அவதூறு இருக்கிறது? இங்கே இந்த விவாதத்தில் உங்களது ஆதரவாளர்கள்தான் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், பெரியார் பற்றி நியாயமற்ற விமர்சனங்களை முன்வைத்தும் கேள்விகள் கேட்டு விவாதத்தை திசை திருப்ப முயன்றனர். ஆனால், நானும் எனது மற்ற முற்போக்கு சிந்தனையுள்ள நண்பர்களும் அனைத்திற்கும் ஆதாரப் பூர்வமாக, வரலாற்று ரீதியான பதில்களை தொடர்ந்து அளித்து வந்தோம். நீங்கள் சமத்துவ சமுதாயத்தை நோக்கி எழுதுவதாக சொல்கிறீர்கள். ஆனால் இங்கே விவாதத்தில் கலந்து கொண்ட உங்கள் விசிறிகள் யாரும் அத்தகைய நோக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் ஏன் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும், பெரியாருக்கும் எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது நீங்கள் மட்டுமே அறிந்த ரகசியம். உங்களது எழுத்துக்கள் உங்களது உண்மையான பிம்பத்தை காட்டுகிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? நம்பிக்கை இருக்கிறதென்றால் உங்களது எழுத்துக்கள் உங்கள் விசிறிகளாலேயே சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்கிறீர்களா?

நீங்கள் முரசொலி, தி.மு.க. அங்கம் வகித்த தேசிய முன்னணி கூட்டங்கள், ஜெயா டி.வி. போன்றவற்றில் பணியாற்றியது, அல்லது பணியாற்றிக் கொண்டிருப்பது பெரியாரை நீங்கள் தவறுதலாக அடையாளம் காட்ட ஒரு தகுதியைத் தந்துவிடுமா என்ன? இதுவா பிரச்சினை…? சர்ச்சைக்குள்ளான கட்டுரை குறித்து நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் உங்களது தமிழ் எதிர்வினையில் பதில் உள்ளதா என்பதை படிப்பவர்கள் கவனத்திற்கே விட்டுவிடுகிறேன்.

நீங்கள் உடல் ரீதியான, கடுமையான பிரச்சினைகளால் அவதியுற்ற போதும் தொடர்ந்து எழுதி வருவதாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களைத் தாண்டி மோசமான உடற் பிரச்சினைகள் எனக்கும் உண்டு (சந்தேகமிருந்தால் நேரில் சந்தித்து உறுதி செய்து கொள்ளலாம்). ஆனால், நமது கொள்கை சார்ந்த எழுத்திற்கும் உடற்பிரச்சினைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இது போன்ற உணர்ச்சி வயப்பட்டு இரக்கம் சார்ந்த (sympathy) சூழலை உருவாக்குவது விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். மேலும், வயதிற்கும் நேர்மையான கேள்விகள் எழுப்புவதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். 23 வயது வரையே வாழ்ந்திருந்த பகத் சிங் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எழுப்பிய அதிர்வலைகள் மகத்தானவை.

உங்களை நோக்கி கேள்விகளை எழுப்புவதால் மட்டுமே நாங்கள் தி.மு.க. ஆதரவாளர்கள் என்று நீங்கள் நம்புவீர்களேயானால் கலைஞரை விமர்சித்து எழுதும் உங்களை ஏன் நாங்கள் அ.தி.மு.க. ஆதரவாளர் என எடுத்துக் கொள்ளக் கூடாது? நீங்கள் உணர்ச்சி வயப்பட்டு இந்தக் குழுமத்தை கலைக்கச் சொல்லியிருப்பது கருத்து சுதந்திரத்திற்கெதிரான தாக்குதல் ஆகுமில்லையா? உங்களை இதுவரை ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் மட்டும்தான் எதிர்த்தார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமான கண்ணகியைப் பற்றி தாங்கள் வழக்கம் போல உள்நோக்கத்துடன் எழுதியதற்கு தி.மு.க. உட்பட தமிழின உணர்வாளர்கள் ஒன்று திரண்டு உங்களை எதிர்த்து போராடவில்லையா?

கிராம பூசாரி நிர்வாகத்திற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களை நியமித்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.. கோயில், பக்தி சார்ந்த மேற்கண்ட நிர்வாகத்திற்கு திராவிட கழகத்தினரையோ, இடது சாரிகளையோ, பிற நாத்திகர்களையோ நியமிக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

ஜெயேந்திரர் கைதின் போது நீங்கள் சங்கர மடத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆவேசப் பட்டதாக எழுதியிருக்கிறீர்கள். சங்கர மடத்தைப் பற்றியும், சங்கர வகையறாக்களைப் பற்றியும் கலைஞர் என்ன என்ன சொல்லியிருக்கிறார் என்பது முரசொலியில் பணியாற்றிய உங்களுக்கு அவசியம் தெரிந்திருக்கும். மேலும், பாரதீய ஜனதா கூட்டணியில் இருக்கும் போது குங்குமம் வைத்துக் கொண்டு வந்த தனது கட்சிக்காரரை நெற்றியில் ரத்தம் வழிகிறதா என்று கலைஞர் கேட்டதற்கு இதே ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி இராம கோபாலன் ஆகியோர் கொதித்தெழுந்து ஆர்ப்பரித்தது தங்களுக்கு நினைவில்லை போலும். நான் மீண்டும் சொல்கிறேன் கலைஞரின் அனைத்து செயல்களையும் நியாயப் படுத்துவது என் வேலையல்ல. பெரியார் என்ற ஆளுமை பற்றி நாங்கள் சிந்திப்போமானால் ஜெயலலிதாவை விட, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பி.ஜே.பி. வகையறாக்களை விட, ஏன் உங்களையும் விட எங்களுக்கு மிக நெருக்கமாகத் தெரிவது கலைஞர் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.

உங்களின் கடைசிக் கடிதம் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருக்கும் கலைஞர் ஆதரவாளர்களுக்கு எழுதப்பட்டது இல்லை என்றிருக்கிறீர்கள். நாங்கள் கலைஞரின் ஆதரவாளர்களா என்பது குறித்து ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன். ஆனால், தூங்குவது போல நடித்துக் கொண்டிருப்பவர்கள் இல்லை. பெரியாருக்கு முன் நாங்கள் உண்மையாக தூங்கித்தான் கொண்டிருந்தோம். பெரியார் என்ற மாபெரும் ஆளூமையின் சுட்டெரிக்கும் உண்மையின் வீச்சு எங்களை விழித்தெழ வைத்தது. இப்போது எங்களது விழிப்பின் உச்சத்தில்தான் உங்களை நோக்கிய இந்தக் கேள்விகள் பிறந்திருக்கின்றன.

பொறுப்பில்லாத, தடித்த வார்த்தைகள் எங்களது பத்திகளில் வெளிப்பட்டிருக்கிறது என்று ஞானி கூறியிருப்பது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விவாதத்தை விட்டு விலகிச் சென்று திசை திருப்பும் செயல்.

திருவாளர் ஞானியின் மேற்கண்ட தமிழ் பத்தியின் விளக்கங்கள் எங்களது கேள்விகளுக்கு உரிய அல்லது தகுந்த பதில்களா என்பது இந்த விவாதத்தை மேற்கொண்டு தொடர விரும்பும் நண்பர்களின் எண்ணங்களைச் சார்ந்தது.

ஆனால், ஞானி தன்னுடைய விளக்கத்தைக் கொடுத்து விட்டு, ஞானி குறித்தும் ஞானியின் எழுத்துகள் குறித்தும் பல்வேறு திசைகளில் ஆராய்ந்த இந்த விவாதத்தால் தான் பாதிக்கப் பட்டதாக எண்ணி அதற்காக இந்த குழுமத்தையே கலைக்கச் சொல்வது அவரின் தனிப்பட்ட சர்வாதிகாரத்தையே காட்டுவதாக நான் எண்ணுகிறேன்.

விடாது கருப்பு, சசி, யுவன் பிராபாகரன், தமிழ், அபிமன்யு, பிரின்ஸ் பெரியார், உள்ளிட்ட நண்பர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு, ஆரிய – சூத்திர பிரச்சினையின் பல்வேறு பரிமாண கோட்பாடுகள் சார்ந்து, மிக அற்புதமாக, ஆதார பூர்வமான கேள்விகளையும், சுற்றி சூழ்ந்த ஞானி ஆதரவாளர்களின் ஆத்திரம் மிக்க கேள்விகளுக்கு அறிவு சார்ந்த பதில்களையும் வழங்கி இந்த விவாதத்திற்கு தனது பெருமை மிகு பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

ஒரு கவிதை…

பின் விளைவுகளைச்
சிந்திப்பதென்பது உயிரின்
எல்லையோடு நின்றிருந்தால்
நாங்களும்
பின்வாங்கியிருப்போம்தான்..

ஆனால் எங்களின் பயணமோ…
தலைமுறை வீதிகளில்
நிகழ்காலத்தைய பிரச்சினைகளை
விமர்சித்தபடி தொடர இருக்கிற
தத்துவப் பயணம்..

காலவெளிச் சாலையின்
கடைசீ
எல்லைவரை எங்களின்
புரட்சிச் சுவடுகள்
புதிதாய் புதிதாய்
புதிது புதிதாய்
மேலே மேலே…
- அறிவுமதி.